சிறுமி அளித்த பொய்யான புகார்… பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் டெலிவரி பாய் மீது சரமாரித் தாக்குதல்

பெங்களூரில் 8 வயது சிறுமியின் பொய்யான புகார் காரணமாக உணவு டெலிவரி செய்ய வந்த நபர் குடியிருப்பு வாசிகளால் அடித்து உதைத்து தாக்கப்பட்டார். தன்னை வலுக்கட்டாயமாக மாடிக்குக் கொண்டுசென்றதாகவும் தான் அவர்கையைக் கடித்து தப்பி வந்ததாகவும் சிறுமி கூறியதால் ஆத்திரம்அடைந்த பெற்றோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் உணவு டெலிவரி ஏஜன்ட்டை சரமாரியாகத் தாக்கினர். ஆனால் விசாரணையில் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போது சிறுமி தானாகவே மாடிக்கு சென்று விளையாடியதும் பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து டெலிவரி ஏஜன்ட் மீது … Read more

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரை கடந்தபோது உயிரிழப்பு இல்லை – 1,000 கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு

கட்ச்: அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 மாநில நெடுஞ்சாலைகளில் 600 மரங்கள் வேரோடு சாய்ந்ததால், நேற்று போக்குவரத்து தடை ஏற்பட்டது. 9 வீடுகள், … Read more

கரையைக் கடந்தபின் வலுவிழந்தது பிபர்ஜோய் புயல்… ராஜஸ்தானை நோக்கி நகர்ந்த புயலால் இருமாநிலங்களிலும் பலத்த மழை

பிபர்ஜோய் புயல் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் கரையைக் கடந்து அதிதீவிர புயலில் இருந்து தீவிரப் புயலாக வலுவிழந்து ராஜஸ்தானை நோக்கி நகர்ந்தது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை மீட்டு வர நிவாரணக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாய்ந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதால், அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று கட்ச் … Read more

அமைதி மற்றும் வளத்தை பரப்புவதே யோகாவின் நோக்கம்: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

புதுடெல்லி: அமைதி மற்றும் வளத்தை பரப்புவதே யோகாவின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு டெல்லியில் வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து, அமைதி, செழிப்பு ஆகியவற்றை பரப்புவதே யோகாவின் செய்தி என … Read more

எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கான நடவடிக்கைகளை நமது விமானப்படை எடுத்து வருகிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ஹைதராபாத்: ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எப்போதும் தயாராக இருக்க இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பகை நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் … Read more

எட்டரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருட்டு தம்பதிகளை நூதனமாக பிடித்த போலீஸ்

Let’s Cage the Queen Bee: 8.49 கோடி கொள்ளையடித்த திருட்டு தம்பதிகளை நூதனமாக பிடித்து பாராட்டுகளை அள்ளிச் சென்றுள்ளது லுதியானா காவல்துறை.  

அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்றும் நடவடிக்கையால் வன்முறை… ஒருவர் உயிரிழப்பு – 174 பேர் கைது

குஜராத் மாநிலத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஜூனாகத் பகுதியில் அமைந்துள்ள தர்கா அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் தர்காவில் நோட்டீஸ் ஒட்ட போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மாவட்ட துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் … Read more

விதிமீறலால் ரூ.22 கோடி இழப்பு: பிஎஸ்என்எல் அதிகாரிகள் தொடர்புடைய 25 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் உட்பட 21 அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ 25 இடங்களில் சோதனை நடத்தியது. அசாம் பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது சிபிஐ. இதன் தொடர்ச்சியாக 25 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட சிபிஐ … Read more

பிரிஜ் பூஷணுக்கு எதிரான புகார்களுக்கு ஆதாரம் சிக்கியது: போலீஸ்

பிரிஜ் பூஷணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷண் மீது ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பிரிஜ் பூஷண் மீதான 6 புகார்களில் 4 புகார்களுக்கு போதிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள் சேகரிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வேறு போட்டி தொடர்கள், … Read more

“இரட்டை வேட நிலைப்பாடு” – எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: சமூக ஊடகத்தில் தவறான தகவலை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடகப் பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டுள்ளார். அவர் கைது கண்டனத்துக்குரியது. மலக்குழி மரணங்களின் மீது தமிழக … Read more