காங்கிரசை ஆதரிக்க தயார் : மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று காங்., ஆட்சி அமைக்க உள்ளது. 2024-ல் வரவுள்ள லோக்சபா தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில்., காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் செல்வாக்குடன் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் ஆதரவு அளிப்போம். அதே நேரம் எங்கெல்லாம் மாநில கட்சிகள் செல்வாக்கு உள்ளதோ அங்கு காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும். நான் கர்நாடகாவில் காங்கிரசை … Read more

டெல்லி – கொல்கத்தா பயண நேரம் 17 மணியாக குறையும்

வாரணாசி: வாரணாசி – கொல்கத்தா இடையே 610 கி.மீ. தூரத்துக்கு பசுமை விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த விரைவுச் சாலை பணிகள் 2026-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வாரணாசி – கொல்கத்தா இடையிலான பயணம் பெரும்பாலும் என்.எச்.19 வழியாக நடைபெறுகிறது. இதன் பயண நேரம் 12 முதல் 14 மணி நேரம் ஆக உள்ளது. புதிய விரைவுச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இந்த நேரம் 6 முதல் … Read more

அடடே… ரயில்வே நிலையங்களில் வரும் சூப்பர் வசதி… என்னன்னு பாருங்க!

பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிலையங்களில் சைன் போர்டுகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்கள்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில் போக்குவரத்தை நம்பி ஏராளமான பொதுமக்கள் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்யும் ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான … Read more

திருட்டு போன மொபைல் போனை கண்டறிய புதிய இணையதளம்: நாளை அறிமுகமாகிறது..!!

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் நாளை (மே 17ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு, சஞ்சார் சாதி என்ற பெயரில் புதிய பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இணையதளம் வாயிலாக, மக்கள் தொலைந்த அல்லது திருட்டு போன மொபைல் போன் குறித்த விவரங்களை அளித்து, அதனை கண்டறிய உதவி பெற முடியும். மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், www.sancharsaathi.gov.in என்ற புதிய இணையதள சேவையை துவங்கி வைக்க … Read more

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் … Read more

அழகு கொஞ்சும் பசுமை பள்ளத்தாக்கு! காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்

Film Tourism In Kashmir Valley: ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பள்ளத்தாக்கில் திரைப்பட சுற்றுலாவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக 300க்கும் மேற்பட்ட புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அசோக் கெலாட் அரசுக்கு 15 நாள் கெடு விதித்தார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கும் அசோக் கெலாட் அரசுக்கும் சச்சின் பைலட் இம்மாத இறுதிவரை கெடு விதித்துள்ளார். ஊழலுக்கு எதிராகவும் வேலைவாய்ப்புக்கான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகவும் ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் சச்சின் நடைபயணம் மேற்கொண்டார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான 125 கிலோ மீட்டர் நடைபயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். தமது கோரிக்கைகளை இம்மாத இறுதிக்குள் ஏற்காவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என சச்சின் … Read more

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டதா ? இனி கவலை வேண்டாம்..!!

டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் விரிவு படுத்தப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. விரைவில் அறிமுகம் ஆகும் இந்த வசதி மூலம் மொபைல் போன்கள் திருடு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு டிராக் செய்யவும் முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டியது என்னவென்றால், CEIR இணைய சேவை மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை … Read more

மருத்துவமனைக்கு 7 கி.மீ. தூரம் நடந்து சென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்துசென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் மயக்கமடைந்து உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் கிராமங்களில் சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதி இல்லை. இதன் காரணமாக பால்கர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி உயிரிழந்திருக்கிறார். பால்கர் மாவட்டம், ஓசார் வீரா கிராமத்தை சேர்ந்தவர் சோனாலி வாகத் (21). இவர் 9 மாத … Read more

கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா ?

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாரான நிலையில், முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இதனிடையே கட்சி தலைமையை சந்திக்க சித்தராமையா இடெல்லி சென்றுள்ளார். கர்நாடக காங்கிரஸ் … Read more