வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவிட்ட கேஜ்ரிவால் – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி வரிப் பணத்தை செலவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவால், அரசியலுக்கு வந்தபோது நேர்மை மற்றும் எளிமையை ஊக்குவிப்பேன் என்றார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். தன்னை மகாராஜா என நினைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆர்வமாக இருக்கிறார். கேஜ்ரிவால் தனது … Read more

பெங்களூரு – சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்

Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த காவலரின் உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்நீத்த மாவட்ட ரிசர்வ் காவலரின் உடல் இருந்த சவப்பெட்டியை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேர் உள்பட 11 உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்று துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து, மாவட்ட ரிசர்வ் காவலரின் உடலை பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். உயிர்நீத்தவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் … Read more

“விரக்தியின் வெளிப்பாடு” – காங். பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுடெல்லி: “அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்” என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல் தொடர்பாக பாஜக பூர் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பிரதமர், “காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள், அக்கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் … Read more

பிரதமர் மோடி விஷபாம்பு போன்றவர்; அவருடன் பயணித்தால் மரணம் நிச்சயம் -கார்கே சர்ச்சை

Karnataka Election 2023 Updates: பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அதைத் தொட முயன்றால் செத்துவிடுவீர்கள் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

7 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் காயம் – 12 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். மும்பை – புனே விரைவுச்சாலையில் கோபோலி என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டது. டிரக் ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் கார் மீது மோதிய நிலையில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 7 கார்கள் உள்ளிட்ட 12 வாகனங்கள் சேதமடைந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விரைவுச்சாலையில் நேரிட்ட இந்த விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. … Read more

ஓடிடி பயனாளர்களுக்கு ஷாக்..!! அமேசான் பிரைம் சந்தா கட்டணம் திடீர் உயர்வு..!

பெருகி வரும் மொபைல்போன் மோகத்தால் இளைஞர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படங்களை பார்க்கவே விரும்புகின்றனர். இதனால் போட்டி போட்டுக்கொண்டு சர்வதேச ஓடிடி நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகள் செலவழித்து படங்களை வாங்கி வருகின்றனர். அதேபோல் தொலைக்காட்சிகளில் தொடர்களை பார்க்கும் காலம் மலையேறி போய், இப்போது ஓடிடி தளங்களில் வலை தொடர்களை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தகது. … Read more

வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள் : கர்நாடகாவில் வெற்றி யாருக்கு?.. பாஜகவா? காங்கிரஸா?

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. அதன்படி கர்நாடக தனியார் தொலைக்காட்சியும், சி.ஓட்டர் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் அதிகப்பட்சமாக காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி … Read more

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா, “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கடந்த 20ம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவம் நடந்து … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: கலவரம் நடக்கும்.. 'அமித்ஷா மீது FIR.?'.. நாங்க விடமாட்டோம்.!

காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அமித்ஷா மீது எஃப்ஐஆர் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே மீதமுள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு … Read more