குஜராத் | மசூதிக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: போலீஸார் மீது கல்வீச்சு; ஒருவர் உயிரிழப்பு 

ஜூனகர்: குஜராத் மாநிலம் ஜூனகர் மாவட்டத்தின் மஜ்வாடி கேட் அருகே உள்ள மசூதி ஒன்றுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மோதல் ஒன்று ஏற்பட்டது. இதில் போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் பலர் காயமைடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். அதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ஜூன் 14ம் தேதி, ஜூனகர்த் மாநகராட்சி சார்பாக, அங்குள்ள மசூதி ஒன்றுக்கு அதன் ஆவணங்களை ஐந்து நாட்களுக்குள், நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் … Read more

ஜூன் 20 முதல் 25ந் தேதிவரை அமெரிக்கா, எகிப்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி வரும் 20ந் தேதி முதல் 25ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி ஐநா.சபை தலைமையகத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ளும் மோடி, 22ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதுடன், தொழிலதிபர்கள், முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள், இந்திய வம்சாவளியினரை சந்திக்க உள்ளார்.  24ம் தேதி எகிப்து செல்லும் மோடி … Read more

ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்து சேனா மனு

புதுடெல்லி: ஓம் ராவத் இயக்கத்தில் நேற்று வெளியான ஆதி புருஷ் படத்துக்கு எதிராக இந்து சேனா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்து சேனா தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். … Read more

ஐ.நா.வில் யோகா நிகழ்ச்சி – பிரதமர் மோடி பங்கேற்பு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐ.நா. சபை, ஜூன் 21-ம் தேதி உலக முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று … Read more

முன்கூட்டியே மக்களவைத் தேர்தல்: எச்சரிக்கும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி தனது பழைய வலிமையை இழந்துள்ள நிலையில் பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மூன்றாவது அணி என்று கட்சிகள் பிரிந்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். எதிர்கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் … Read more

கட்சிக்காரர்களின் சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனையை வழக்கறிஞர்கள் தெரிவிப்பது கட்டாயமாகிறது?: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: பணமோசடி சட்டங்களை வலுப்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்களது கட்சிக்காரர்களின் பணப் பரிவர்த்தனைகளின் பதிவை வைத்திருக்கவும், அதேநேரம் சந்தேகத்துக்கு இடமான செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மற்றும் பணமோசடி சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை விரைவாக கண்டறிய இந்த திட்டம் உதவும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது. ஆனால், சில வழக்கறிஞர்கள் மத்திய அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த செயல் … Read more

ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடைப்பதில் சிக்கல்: டி.கே.சிவகுமார் போராட்டம் அறிவிப்பு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மாதம் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இலவச அரிசி வழங்குவது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுவதால் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி போராட்டம் … Read more

ஹரியானாவில் 15 நாள் சோதனையில் 13,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் – 354 பேர் கைது

ஹரியானா காவல் துறையினர் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஓபியம் உள்ளிட்ட சுமார் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமான போதைப் பொருட்கள் குருகிராமில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Source … Read more

மும்பையில் வீட்டை விற்று வந்த பணத்தை முதலீடு செய்தவரிடம் ரூ.1.3 கோடியை சுருட்டிய சைபர் மோசடி கும்பல்

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டை ரூ.1.27 கோடிக்கு விற்று அதை சைபர் மோசடி கும்பலிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த 53 வயது நபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது வீட்டை ரூ.1.27 கோடிக்கு விற்பனை செய்தார். அந்தப் பணத்தில் புதிய வீடு வாங்கலாம் என திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலை பற்றி ஒரு தகவல் வந்தது. அதை அனுப்பிய பெண், திரைப்படங்கள் மற்றும் ஓட்டல்களின் சில … Read more

புயல்பாதிப்பு குறித்து குஜராத் முதலமைச்சருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி புயலின் பாதிப்புகள் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். புயல் காரணாக கிர் வனப்பகுதியில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் பாதுகாப்பு குறித்தும் மோடி வலியுறுத்தியுள்ளார். கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 40 சிங்கங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் கழுத்துப்பட்டை அணிவிக்கப்பட்ட சிங்கங்கள் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. Source link