காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!

கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023: கர்நாடகாவில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

ஆந்திராவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

ஆந்திராவில் அனந்தபுரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் தாடி பத்ரி பகுதியைச் சேர்ந்த 12 பேர், திருப்பதி கோவிலுக்கு ஒரே காரில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அனந்தபுரம்-சித்ராவதி நதி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில், கார் உருக்குலைந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், … Read more

கர்நாடகாவில் ‘முஸ்லிம் துணை முதல்வர்’ கோரிக்கைக்கு பின்னால் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அம்மாநில வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷஃபி சதி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கோரிக்கைக்கு பின்னால் பாஜக இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தென்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் அக்கட்சியை விட்டு கைநழுவிப்போய் உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் … Read more

மோடி இமேஜ் காலி… ஊழல் பேச்சு, காத்தோட போச்சு… தன் வாயால் கெட்ட பாஜக- மாறும் தேசிய அரசியல்!

கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் பாஜக வீழ்ந்த கதையை பற்றி பிரபல அரசியல் செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான சுதீந்திர குல்கர்னி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அலுவலக செயல்பாட்டு இயக்குநராக இருந்தவர். இவர் தன்னுடைய பதிவில், மிகப்பெரிய ஊழல் சர்ச்சையால் வீழ்ந்த அரசுகளை பார்த்திருப்போம். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஊழலில் திளைத்து புரையோடி கவிழ்ந்தது கர்நாடகாவில் தான். உதாரணமாக பிரதமர் மோடிக்கு கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் எழுதிய கடிதத்தை சொல்லலாம். இங்குள்ள அமைச்சர்கள் … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. 2500 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் அவதி!

இமாச்சலப் பிரதேசத்தில் நள்ளிரவு முதல் 2500 பேருந்துகள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு ,ஓவர்டைம் ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பணிக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்குவதாக தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. மொத்தம் 3300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை. சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை … Read more

பஜ்ரங் தளம் தடை வாக்குறுதி | மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடன், பஜ்ரங் தள் அமைப்பை இணைத்துப் பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநில நீதிமன்றம் இன்று (திங்கள் கிழமை) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பஜ்ரங் தள் இந்துஸ்தான் என்று அழைக்கப்படும் அமைப்பின் நிறுவனர் ஹிந்தேஷ் பரத்வாஜ் என்பவர் கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனைத் … Read more

டெல்லியில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை… 43 பேர் கைது, 80 கிலோவுக்கும் அதிகமாக போதைப் பொருட்கள் பறிமுதல்

டெல்லியில் போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகப் பெரிய அளவில் சரஸ், ஹெராயின், கொகைய்ன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைத் தடுப்புப் பிரிவினர், டெல்லி சிறப்புக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டோரை கண்காணித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தேச விரோத போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கூண்டோடு ஒழிப்பதற்காக ஆயிரம் போலீஸார் கொண்ட சிறப்புப்படை அமைக்கப்பட்டதாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆபரேசன் காவச் என்ற … Read more

மிஸ் பண்ணிடாதீங்க!! இந்திய கடற்படையில் வேலை..!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Chargeman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 372 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியின் பெயர்: Chargeman-II (redesignated as Chargeman) காலி பணியிடங்கள்: 372 வயது வரம்பு:விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு … Read more

டெல்லி செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: டி.கே. சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வர் குறித்த ஆலோசனையில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும், மூத்த தலைவர் சித்தராமையாவும் போட்டி போடுவதால், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற … Read more

அசத்திய அமுதா ஐஏஎஸ் கணவர்… ஜஸ்ட் மிஸ்… கர்நாடகா தேர்தலில் ஆட்டம் கண்ட பாஜக!

அமுதா ஐஏஎஸ் (Amudha IAS) என்ற பெயர் தமிழகத்தில் மிகவும் பிரபலம். துடிப்பான அதிகாரி, மிகவும் நேர்மையாக செயல்படுபவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது பெற்றவர், ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியவர், தற்போது உள்துறை செயலாளர் உள்ளிட்ட சிறப்புகளுக்கு உரியவர். யார் இந்த ஷம்பு கல்லோலிகர் சமீபத்தில் தான் ஊரக வளர்ச்சி துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் இவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக … Read more