பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: போக்சோ வழக்கை ரத்து செய்ய பரிந்துரை

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து … Read more

உத்தரபிரதேசத்தில் வீடு தீப்பற்றியதில் பெண், 5 குழந்தைகள் உயிரிழப்பு

குஷிநகர்: உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம், உர்தா என்ற கிராமத்தில் சங்கீதா என்ற பெண், தனது 5 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் இவர்கள் வீடு தீப்பற்றியதில் அனைவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 6 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து … Read more

ரூ.50 கோடி பணத்துக்காக ஆளும் கட்சி எம்.பியின் மனைவியை தூக்கிய ரவுடி… சினிமா பாணியில் சுட்டுப்பிடித்த போலீஸ்….!

ஆளும் கட்சி எம்.பி ஒருவரின் வீடு புகுந்து அவரது மனைவி, மகன் மற்றும் ஆடிட்டரை காரில் கடத்திச்சென்று 50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியை ஆந்திர போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்ளனர் எம்.பியின் மனைவி, மகன் மற்றும் ஆட்டிட்டரை வீடு புகுந்து தூக்கிய வழக்கில் சிக்கிய உள்ள தாதா ஹேமந்த் இவர் தான்..! ஆந்திராவின் ஆளும் கட்சியான, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் … Read more

அடுத்தாண்டு ஜனவரியில் அயோத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோயில் திறப்புவிழா – உ.பி. முதல்வர் யோகி அறிவிப்பு

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா அடுத்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அயோத்தி கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான இறுதி அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்னும் வரவில்லை. இந்நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவை … Read more

பிப்பர்ஜாய் புயல் | குஜராத்தில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 2.15 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைத் தகவல் இது. புயல் முன்னேறி வரும் நிலையில் அது தொடர்பான முக்கியத் தகவல்கள் சில.. * தற்போது பிப்பர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 200 கி.மீ தொலைவில் … Read more

குஜராத் அருகே கரையை கடந்தது பிப்பர்ஜாய் புயல் – 125 கிமீ வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம்

அகமதாபாத்: 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் வீசிய பிப்பர்ஜாய் புயல் குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் ஜக்காவ் துறைமுகம் அருகே மணிக்கு 125 கிமீ எனவும், சில பகுதிகளில் மணிக்கு 140 கிமீ வேகத்திலும் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொஹபத்ரா தெரிவித்தார். இதனால் குஜராத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தற்போது வடகிழக்கு நோக்கி ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து பாலைவனத்தை அடையும் … Read more

பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத மாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற கர்நாடக அரசு முடிவு..!

கர்நாடகாவில், முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை திரும்பப்பெற முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவார் தொடர்பான பாடங்களை வரலாற்று பாட புத்தகங்களிலிருந்து அகற்றுவதுடன், பள்ளி பாடத்திட்டத்தில் முந்தைய பாஜக அரசு கொண்டுவந்த அனைத்து மாற்றங்களையும் திரும்பப்பெறவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. தினமும் காலை, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் இந்திய அரசியல் சாசன முகவுரையை வாசிப்பதை கட்டாயமாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Source link

நடைப்பயிற்சி சென்ற பிஹார் முதல்வரை நோக்கி பைக்கை செலுத்திய மர்ம நபர்கள் கைது

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை காலை வழக்கமான நடைபயணம் மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத இருவர் பைக் ஒன்றில் பாதுகாப்பை மீறி முதல்வரை நோக்கி வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவர் கூறியதாவது:”முதல்வர் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, அவரின் பாதுகாப்பு வளையத்தை மீறி பைக்கில் வந்த இருவர் முதல்வரை நோக்கி வேகமாக வந்தனர். அவர்கள் சுமார் 100 கிமீ வேகத்தில் வந்தனர். … Read more

Cyclone Biparjoy | மேலும் நெருங்கியது பிப்பர்ஜாய் புயல் – 74 ஆயிரம் பேர் வெளியேற்றம்

அகமதாபாத்: பிப்பர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், கரையோர மக்கள் 74 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்: அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத் கடற்கரையை நோக்கி 8 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தின் ஜாக்குவா போர்ட் நகரில் இருந்து … Read more

“அவை நாங்கள் உருவாக்கிய பாடப் புத்தகங்கள் அல்ல” – பெயர்களை நீக்குமாறு என்சிஆர்டி-க்கு 33 கல்வியாளர்கள் கடிதம்

புதுடெல்லி: பாடநூல் மேம்பாட்டுக்குழுவில் அங்கம் வகித்து வரும் 33 கல்வியாளர்கள், பாடப் புத்தகங்களில் இருந்து தங்களின் பெயர்களை நீக்கக் கோரி என்சிஆர்டி-க்கு கடிதம் எழுதி உள்ளனர்.அதில் தங்களுடைய கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இயக்குநர் தினேஷ் சக்லானிக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “மூல புத்தகத்தில் இருந்து தற்போது உள்ள புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள், அப்புத்தகங்களை வேறு ஒன்றாக உருவாக்கிக் காட்டுகின்றன. இதனால் அவைகள் … Read more