உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. ஆலைக்கு வெளியே கொட்டப்பட்ட கழிவு அட்டைகள், பாலத்தீன் கவர்கள் போன்றவற்றில் தீப்பிடித்து அது பயங்கர சூறாவளி காற்றுவீசியதன் காரணமாக தீப்பிடித்த குப்பை ஆலைக்குப் பறந்து தீப்பிடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. 5 தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் லாரிகள் போன்றவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள் குவியல் குவியலான குப்பைகளை புல்டோசர்களை வைத்து அகற்றினர்.இந்த விபத்தால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. Source … Read more

‘அந்தப் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் விட்டுவிடுவோம் ’ – பிறந்தநாளில் ஆதரவாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார் 

பெங்களூரு: கர்நாடக பிரதேச காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்த தனது ஆதரவாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்க மணிக்கணக்கில் பலர் கேக்குகளுடன் காத்திருந்தனர். தனது பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஆதரவாளர்களை சந்தித்த டிகே சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது,” நாங்கள் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம். முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சி மேலிடத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளோம். நான் இன்னும் டெல்லி செல்வது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு … Read more

சித்தராமையா டெல்லி பிளான்… கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார்? முக்கிய முடிவு!

கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் 135, பாஜக 66, மதச்சார்பற்ற ஜனதா தளம் 19, மற்றவை 4 என வெற்றி பெற்றன. இதன்மூலம் 1989ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் புதிய வரலாறு படைத்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தென்னிந்தியாவில் … Read more

நீயா-நானா சண்டை போதும் சிவகுமார் மற்றும் சித்தராமையா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?

Who Is Next Chief Minister of Karnataka: நீயா-நானா சண்டை போதும் சிவகுமார் மற்றும் சித்தராமையா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? கார்கே கையில் இறுதி முடிவு. டெல்லி செல்லும் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்கள்.

ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மான்யா குப்தா..!

சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு நடத்திய ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஹெரிடேஜ் பள்ளியை சேர்ந்த மாணவியான மான்யா குப்தா, 12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 99.75 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்திய அளவில் முதல் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.2 … Read more

பிரான்ஸுக்கு ஜெலன்ஸ்கி திடீர் பயணம்: ஆயுத உதவி செய்வதாக அதிபர் மக்ரோன் உறுதி

பாரீஸ்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழக்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உறுதியளித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அதிபர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நடந்தது. உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றபட்ட பகுதிகளை மீட்க ஜெலன்ஸ்கி தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரான்ஸிடம் ஆயுத உதவிக்கான கோரிக்கையை அவர் வைத்திருக்கிறார். அதன்படி, பீரங்கி டாங்கிகள், கனரக வாகனங்கள், எரிபொருள், ஆயுதங்கள் வழங்க பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. … Read more

இந்தியக் குழுவை கான்ஸ் திரைப்படவிழாவுக்கு அழைத்துச் செல்கிறார் எல்.முருகன்

பிரான்ஸ் நாட்டின் ரிவெரியா நகரில் நாளை மறுநாள் தொடங்கும் கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியக் குழுவினர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் பங்கேற்கின்றனர். நடிகைகள் மனுஷி சில்லார், இஷா குப்தா உள்ளிட்டோருடன் அவர் சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்க உள்ளார். அனுராக் காஷ்யப்பின் கிரைம் படமான கென்னடி, யுதாஜித் பாசுவின் நெஹமிச் மணிப்பூர் இயக்குனர் அரிபம் ஷியாமின் இஷனோவ் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் இந்தியத் திரைப்படப் பிரிவில், திரையிடப்பட உள்ளன. Source link

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமனம்..!!

சி.பி.ஐ. இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மூன்று மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை பிரதமர் தலைமையிலான … Read more

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.24 கோடி மதிப்புள்ள1.2 கோடி சிகரெட்கள் பறிமுதல்

மும்பை: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.2 கோடி வெளிநாட்டு சிகரெட்களை மும்பையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.24 கோடி என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தரக்கட்டுப்பாட்டு விதிப்படி இந்த வெளிநாட்டு சிகரெட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இந்த சிகரெட்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளன. இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சரக்குகளை ஏற்றிச் … Read more

மனதின் குரல் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஜன சக்தி கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜன சக்தி கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். இதில் மனதின் குரல் நிகழ்ச்சியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. … Read more