"நான் என் வேலையைத்தான் செய்தேன்" – ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீஸ் அதிகாரி விளக்கம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறியதால் சர்ச்சைக்கு ஆளான போலீஸ் அதிகாரி அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மாலை முதல் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பல்வேறு … Read more

மணிப்பூரில் பயங்கர கலவரம்.. கட்டிடங்களுக்கு தீ வைப்பு.. அவசரமாக பேசிய அமித் ஷா.. என்னதான் நடக்கிறது?

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பயங்கர கலவரமாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொள்வதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வீடுகள், கட்டிடங்கள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருவதால் மணிப்பூரே போர்க்கோலம் பூண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு முதல்வர் பிரென் சிங் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதேபோல, பல்வேறு இனக் … Read more

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் 404 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள்..!

கர்நாடக சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 404 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் 31 சதவீதமும் பாஜகவில் 30 சதவீதமும் மதசார்பற்ற ஜனதா தளத்தில் 25 சதவீதமும் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்களாக உள்ளனர். Source link

வரும் 6 ஆம் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்த திட்டம்..!!

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி முதியவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்கவில்லை. அதிகளவில் புதுமுகங்களை களத்தில் அக்கட்சி இறக்கியுள்ளது. மேலும் கட்சி எங்கெல்லாம் பலவீனமாக உள்ளதோ அந்த பகுதிகளில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பிரசார கூட்டங்களை … Read more

முதல் முறையாக தீவிர இணைய பயனர்களாக மாறிய 75 கோடி இந்தியர்கள் – ஆய்வில் தகவல்

முதல் முறையாக 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர இணைய பயனர்களாக மாறியிருப்பதாகவும், குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது இணையத்தை அணுகுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொழில்துறை அமைப்பான IAMAI மற்றும் சந்தை தரவு பகுப்பாய்வு நிறுவனமான காந்தார் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் படி, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது 75 கோடி இந்தியர்கள் தீவிர இணைய பயன்பாட்டாளர்களாக இருப்பதாகவும், இவர்கள் … Read more

11 dead: கோர விபத்து… குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி.. திருமணத்திற்கு சென்றபோது சோகம்!

சத்தீஷ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் தம்டரி மாவட்டம் சோரம்-பட்கான் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கான்கேர் மாவட்டம் மர்கட்டோலா கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று மாலை காரில் புறப்பட்டுள்ளனர். நள்ளிரவில் பலோட் மாவட்டத்தில் சென்ற போது கார் விபத்துக்குள்ளானது. Vijayabaskar: தொடரும் சோகம்… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை திடீர் மரணம்! பலோட் மாவட்டம் ஜகத்ரா என்ற இடத்தில் சென்றபோது எதிரே … Read more

கட்சிப் பிளவிற்கு முயன்ற அஜித் பவார்: ராஜினாமா மூலம் முறியடித்த சரத்பவார்

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) பிளவிற்கு அஜித் பவார் முயன்ற நிலையில், அதனை. தனது ராஜினாமா கடிதம் மூலம் தடுத்த தலைவர் சரத் பவாருக்கு வெற்றி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. மகராஷ்டிராவில் மக்களவை 48 , சட்டப்பேரவை 288 தொகுதிகள் உள்ளது . மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தின் பங்கு கணிசமாக உள்ளது. இதன் காரணமாக, மத்தியில் ஆட்சி அமைக்க முயலும் கட்சிகள் பார்வையில் இம்மாநிலம் முக்கிய இடத்தைப் பிடிப்பது வழக்கம். இந்தவகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கும் (தேஜமு) … Read more

டெல்லியில் நள்ளிரவு பதற்றம்: யார் காரணம்? போலீசார், குத்துச்சண்டை வீரர்கள் திடீர் மோதல்!

தலைநகர் டெல்லியில் குத்துச்சண்டை வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, பாஜக எம்.பியும், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷன் பதவி விலக வேண்டும். உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போராட்டம் இந்நிலையில் நேற்று இரவு … Read more

கர்நாடகத்தில் தடம் புரண்ட என்ஜினை சரி செய்யவே தேர்தல் நடக்கிறது..!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் களை கட்டி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் வழக்கம்போல அங்கு ‘இரட்டை என்ஜின்’ அரசு பிரசாரத்தை முன்வைக்கின்றனர்.அதாவது, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி அரசு இருந்தால்தான், அது ‘இரட்டை என்ஜின்’களாக செயல்பட்டு மாநிலத்தில் மக்கள் நல்ல பல பலன்களைப் பெற முடியும் என்று கூறி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் … Read more

தொடரும் சோகம்..!! இதற்கு எப்போ ஒரு தீர்வு வருமோ ?

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் கானா கவுந்தியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அயான் (12) என்ற சிறுவன் விசத்து வந்தான். இந்த சிறுவன் நேற்று தனது நண்பர்களுடன் வழக்கம் போல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென தெருநாய்கள் சிறுவர்களை தாக்கியது. சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து ஓடினர். சிறுவன் அயான் ஓடும்போது தரையில் விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்து கடித்தன. இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் படுகாயம் … Read more