காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக் கொலை

ஜம்மு: காஷ்மீரின் சம்பா பகுதியில் நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஒருவர் ஊடுருவ முயன்றார். பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறி அவர் எல்லைக் கட்டுப்பாட்டை தாண்டிச் செல்ல முயன்றார். இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரிடமிருந்து ரூ.450 மதிப்பிலான பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இத்தகவலை எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். Source link

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேலும் 2 மாவட்டங்களை பார்வையிட்டார் அமித் ஷா

குவாஹாட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் வன்முறை யால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாவட்டங்களை நேற்று பார்வையிட்டார். பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இரு குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதுவரை பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மத்திய … Read more

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை – ராகுல்காந்தி

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபரும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று கூறியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என நினைத்ததில்லை என்றாலும், அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் செயல்படும் விதம் இதுதான் … Read more

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையில் மறுமலர்ச்சி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்துஸ்துக்கான 370-வது சட்டப் பிரிவை கடந்த 2019-ல்ரத்து செய்த பிறகு அங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது. காஷ்மீரின் ஸ்திரத்தன்மையை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஜி20 நாடுகளின் சுற்றுலா தொடர்பான மாநாடு கடந்த மே 22-24 தேதிகளில் நடத்தப்பட்டது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. 370-வது சட்டப்பிரிவு நீக்கத் துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் கலை மற்றும் விளையாட்டு துறைகளும் மீண்டும் புத்துயிர் … Read more

112 வயது திம்மக்காவுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து: கர்நாடக முதல்வர் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமக்கூருவை அடுத்துள்ள கூதூர் கிராமத்தை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா (112). இவர் தனக்கு பிள்ளைகள் இல்லாததால் கூதூர் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன் சாலைஓரத்தில் ஆலமரக் கன்றுகளை நட்டார். பிறகு இவற்றை பிள்ளைகளை போல பத்திரமாக வளர்த்தார். இவ்வாறு 385 ஆலமரங்களை வளர்த்த திம்மக்காவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு திம்மக்காவின் பிறந்தநாளின் போது அவருக்கு, கர்நாடக முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை கேபினட் அமைச்சர் … Read more

பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்று கடவுளுக்கே விளக்கம் தருவார் பிரதமர் மோடி – அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சான்டா குரூஸ் பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் நகரில் இந்தியர்களுடன் நேற்று கலந்துரையாடினார். ‘வெறுப்பு சந்தையில் அன்புக்கடை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் கூறியதாவது: நான் மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை தடுக்க மத்திய அரசு … Read more

”இந்தியா – நேபாளத்துடனான உறவு இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல முயற்சி..” – பிரதமர் மோடி..!

இந்தியா – நேபாளத்துடனான உறவை இமய மலையின் உயரத்திற்கு கொண்டு செல்ல கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த நேபாள பிரதமர் பிரசன்டாவை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், நேபாள பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் இரு நாடுகளின் உறவை சூப்பர்ஹிட்டாக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறினார். … Read more

கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருள் தயாரிக்கும் 2-வது ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு

கிரேட்டர் நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உயர்தர போதை மருந்துகளை தயாரிப்பதற்கான ஆய்வகத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர், கடந்த 2 வாரங்களுக்குள் கிரேட்டர் நொய்டா பகுதியில் கண்டுபிடிக்கப்படும் 2-வது போதை மருந்து ஆய்வகம் இதுவாகும். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பீட்டா-2வில் உள்ள மித்ரா என்கிளேவ் காலனியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, ரூ.150 கோடி மதிப்புள்ள சுமார் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் … Read more

எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை – ராகுல் காந்தி

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபரும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று கூறியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என நினைத்ததில்லை என்றாலும், அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் செயல்படும் விதம் இதுதான் … Read more

கார் தீப்பிடித்ததில் புதுமணத் தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு

போபால்: மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் நேற்று திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கார் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் புதுமணத் தம்பதியும் அடங்குவர். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு … Read more