7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்…மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசு அவர்களது மனதை குளிர்விக்கும் வகையில் பல நல்ல செய்திகளை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இது தவிர பழைய ஊதியத் திட்டத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய ஓய்வூதிய முறையிலும் … Read more

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

ஏன் பயப்படுகிறீர்கள்? – ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்ஐசி, எஸ்பிஐ வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் ஓய்வூதிய பணம் கூட அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒய்வூதிய பணத்தை ஏன் அதானிக்கு வழங்க வேண்டும். ‘மோதானி’ தொடர்பு பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு கூட, இபிஎப்ஓ பணம் அதானிக்கு வழங்கப்படுவது ஏன்? இதுகுறித்து எந்த விசாரணையும் இல்லை; … Read more

பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு

டெல்லி: பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. பி.எஃப் வட்டி வட்டி உயர்வால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரிய கவிதா மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினரு மான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கவும், அமலாக்கத் துறையின் தொடர் விசாரணையிலிருந்து விலக்குக் கோரியும் கவிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகிதலைமையிலான அமர்வு, … Read more

புராதன நினைவுச்சின்னங்களில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு: ஒருநாள் மட்டுமே அனுமதி

புதுடெல்லி: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி எழுதுப்பூர்வமான பதில்: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை அனுமதிப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இருப்பினும்  இந்திய தொல்பொருள் ஆய்வு மையம்   நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள நிலத்தில் வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க விரும்பவில்லை. இருப்பினும் உரிய விதிவிலக்கு அடிப்படையில் குறிப்பிட்ட … Read more

அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு கெடு : வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும்..!!

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரதமர் நரேந்திரமோடி, நீரவ்மோடி, லலித் மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி … Read more

மாடுகளுக்கு ஒரு நாள் வார விடுமுறை – ஜார்க்கண்டில் கிராம மக்கள் பாசம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுக்களுக்கு ஒரு நாள் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். துரிசோத் கிராமத்தைச் … Read more

திருப்பதியில் ஏப்ரல் 1 முதல்… மீண்டும் வருகிறது அலிபிரி இலவச தரிசன டோக்கன்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விரைவில் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அலிபிரி இலவச டோக்கன்அதில், அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச டோக்கன்கள் (Divya … Read more

ரூ.8 கோடி சிக்கிய வழக்கில் கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது

பெங்களூரு: லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவன அலுவலகத்தில்  தனியார் நிறுவன பங்குதாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரியும் பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவின் மகனுமான பிரசாந்த் மாடாலை லோக்ஆயுக்தா போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.8.10 கோடி பணம், தங்கம், … Read more