கர்நாடகாவில் இன்று 24 மந்திரிகள் பதவியேற்பு..!!

கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடித்து … Read more

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்: சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார். … Read more

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் 224 பயணிகளை அச்சமூட்டிய கொந்தளிப்பு…!

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் தொடர்பான விசாரணையில் அன்று விமானத்தை ஓட்டிய இரண்டு விமானிகளையும் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை பணியிடை நீக்கம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மே 16ம் தேதி அந்த விமானத்தில் பலமுறை ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக ஏழு பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானத்தில் மொத்தம் 224 பயணிகள் இருந்தனர்.  Source link

நாளை டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்படும் : காவல்துறை தகவல்..!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை 28-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வரும் 28-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடைபெறும் என மஹிலா பஞ்சாயத் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நாளை … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஜெயா சுகின் வாதிடுகையில், … Read more

வர சொன்னது ஸ்பெஷல் கிளாஸ்… சொல்லி கொடுத்தது பாலியல் கிளாஸ்.. மனைவியுடன் சிக்கிய ஆசிரியர்..!!

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு இரண்டு மாணவிகள் தங்கள் உறவினர்களுடன் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில், தங்களை தனியார் பள்ளி ஆசிரியர் அமித்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியிருந்தனர். புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. தனியார் பள்ளி ஆசிரியரான அமித்குமார் தன்னிடம் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறுவதை … Read more

நாளை வெளியாகிறது 75 ரூபாய் நாணயம்.. ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவான 25 கட்சிகள் பங்கேற்பதாக … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பை முன்னிட்டு சிறப்பு ரூ.75 நாணயம்: நிதியமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுவதை நினைவுகூரும் வகையில் சிறப்பு ரூ.75 நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. இந்த சிறப்பு நினைவு நாணயம் இந்தியாவின் 75-வது சுதந்திரதின ஆண்டு கொண்டாட்டத்திற்கான அர்ப்பணிப்பாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த சிறப்பு நினைவு நாணயம், 44 மில்லிமீட்டர் விட்டமும், விளிம்பில் 200 தொடர் வரிசைகளைக் கொண்டதாக இருக்கும். அதேபோல் இந்நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 தாமிரம், … Read more

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான போர்: காங்கிரஸின் ஆதரவைக் கோரும் அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.”பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜனநாயக விரோதமான அரசியலமைப்புக்கு எதிரான அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு … Read more

புதிய நாடாளுமன்றம் திறப்பு விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொது நலவழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தலையிட விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more