மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி, சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து இன்று வீடு திரும்பினார். காங்​கிரஸ் நாடாளு​மன்ற கட்சி தலை​வர் சோனியா காந்​திக்கு வயிறு தொடர்​பான பிரச்​சினை ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனு​ம​திக்​கப்​பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் … Read more

3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: கூட்ட நெரிசல் சம்பவங்களை கையாள கர்நாடகா திட்டம்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள், மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று பல்வேறு விதிகளை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையில், நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் நிகழ்ச்சி நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. புகார் அளித்த ஊழியர்கள் பணிநீக்கம்!

ஏர் இந்திய விமான ஊழியர்கள், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை புகாராக தெரிவித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுத்தி உள்ளார். 

“விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் நன்கு பராமரிக்கப்பட்டதே” – ஏர் இந்தியா சிஇஓ

புதுடெல்லி: விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு, விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். … Read more

“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவர்…” – அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் … Read more

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தமிழகத்துக்கு 9,875 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன‌ மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக‌ அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து 445 கன அடி நீரும் … Read more

நீதிபதி வர்மா வீட்டில் பணக்கட்டுகள் இருந்தது உண்மை: விசாரணைக் குழு அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி வர்மாவின் டெல்லி இல்ல கிடங்கில் அதிக அளவில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது, கடந்த மார்ச் 14-15 அன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், கிடங்கினுள் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்ததைக் … Read more

அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம் அமைகிறது. 150 வருட கால தொழிலை அங்கீகரிக்கும் வகையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார். இந்தியாவின் பூட்டுகளின் நகரமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் கருதப்படுகிறது. இந்நகரம் டெல்லிக்கு 150 கி.மீ தொலைவில் மிக அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அலிகர் நகரில் முஸ்லிம் கைவினை கலைஞர்கள் அதிகம் இருந்தனர். இதனால், அரசின் கோப்புகளை பாதுகாக்க வேண்டி பெரிய அளவிலான தகரம் மற்றும் இரும்பு … Read more

Kerala Lottery: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் பிற்பகல் 3 மணிக்கு.. 1 கோடி யாருக்கு?

Kerala Lottery Karunya Plus KN-577 Result: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற உள்ளது.

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன கொள்கை கைவிடப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் … Read more