ஒயாத வரதட்சணை கொடுமை! இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..நடந்தது என்ன?

Bengaluru Woman Died Dowry Harassment : பெங்களூருவில், இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர், ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக பிஆர்எஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், … Read more

தந்தை கேசிஆர் கட்சிக்கு எதிராக ‘கலகம்’ – கவிதாவின் அரசியல் எதிர்காலம் என்ன?

பிஆர்எஸ் கட்சியில் இருந்து தனது மகள் கவிதாவை கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது, தெலங்கானா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், கவிதாவின் அரசியல் எதிர்காலம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக கவிதா செயல்படுவதாக பிஆர்எஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வர, அதனால் அவருக்கு எந்த அரசியல் ஆதாயமும் இருக்க வாய்ப்பில்லை. இப்போதைய ஒரே வழி, கவிதா தனக்கான அரசியல் ஆதரவை வலுப்படுத்துவது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கவிதா தெலங்கானாவில் நன்கு … Read more

மராத்தா சமுதாயத்தின் 6 கோரிக்கைகள் ஏற்பு: உண்ணாவிரதத்தை முடித்தார் ஜாரங்கே

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் மராத்தா சமூகத்​தினர் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். இந்த சமூகத்​தில் 96 குலி மராத்​தா, குன்பி ஆகிய இரு பிர​தான பிரிவு​கள் உள்​ளன. இதில் 96 குலி மராத்தா முன்​னேறிய வகுப்​பின​ராக​வும், குன்பி சமு​தா​யத்​தினர் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பின​ராக​வும் (ஓபிசி) அங்​கீகரிக்​கப்​பட்டு உள்​ளனர். இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரி​வினரை​யும் ஓபிசி பிரி​வில் சேர்க்க வேண்​டும் என்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்கே பாட்​டீல் கோரிக்கை விடுத்​துள்​ளார். இதை முன்​னிறுத்தி கடந்த 29-ம் தேதி முதல் … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்! காப்பீடு உயர்வு.. புரிந்துணர்வின் முக்கிய அம்சம்

Indian Railways employees: பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சம்பளக் கணக்கு வைத்திருக்கும் இந்திய ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீட்டைப் பெறுவார்கள் என ரயில்வே அமைச்சகம் அறிக்கை.

வன்முறைக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்.13-ல் பயணம்?

புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது. 2023 … Read more

20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: நாடு முழு​வதும் எத்​த​னால் கலந்த பெட்​ரோல் பயன்​பாட்​டுக்கு எதி​ராக வழக்​கறிஞர் அக் ஷய் மல்​ஹோத்ரா உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். அவர் தனது மனு​வில், “2023-க்கு முன்பு தயாரிக்​கப்​பட்ட கார்​கள் மற்​றும் இரு சக்கர வாக​னங்​கள் மற்​றும் சில பிஎஸ்-6 மாடல் வாக​னங்​கள் அதிக எத்​த​னால் கலந்த எரிபொருள் பயன்​பாட்​டுக்கு ஏற்ற வகை​யில் வடிவ​மைக்​கப்​பட​வில்​லை. பெட்​ரோலில் 20 சதவீதம் எத்​த​னால் கலப்​ப​தால் இயந்​திர தேய்​மானம், எரிபொருள் இழப்பு மற்​றும் வாகன பராமரிப்பு செலவு அதி​கரிக்க … Read more

நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது: போலி விசாவுக்கு 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்​டம் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 7 ஆண்​டு​கள் சிறை, ரூ.10 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்​கப்​பட்​டது. இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி … Read more

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: செமிகான் இந்தியா மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிகச்சிறிய சிப் விரைவில் உலகின் மிகப் பெரிய மாற்றத்தை இயக்கும் என தெரிவித்தார். இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் செமிகான் இந்தியா 2025 மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கடந்த … Read more

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஜராங்கே – மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி என அறிவிப்பு!

மும்பை: மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார். மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர்கள் இன்று பிற்பகல் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை அடைந்து, மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் ஆசாத் மைதானத்தை காலி செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை எதிர்கொண்டுள்ள … Read more