ராமநவமி ஊர்வல வன்முறை: மேற்கு வங்க ஆளுநரிடம் விவரம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ஹவுரா மாநகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் நேற்றுமாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. … Read more

பிரதமரின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத்தேவையில்லை-கெஜ்ரிவாலுக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கும் குஜராத் உயர்நீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. பிரதமரின் கல்வித்தகுதி குறித்த சான்றிதழ்களைக் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் மத்திய தகவல் ஆணையமும் பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்திடம் விவரங்களை கேட்டிருந்தது. இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் … Read more

மோடி குறித்த மற்றொரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராக ராகுலுக்கு சம்மன்: பாட்னா நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.  கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின்  கோலாரில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் (மோடி)  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவ்விவகாரத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தொடர்ந்து ராகுலின் எம்பி பதவி … Read more

பயங்கரவாதத்தை இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லா

புதுடெல்லி: இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் அழைப்பை ஏற்று, இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஒஹானா தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இக்குழுவை, சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லியில் இன்று வரவேற்றார். அப்போது பேசிய ஓம் பிர்லா, ”இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு … Read more

மோடி சர்டிபிகேட் வேணுமா.. 25000 ஃபைன் கட்டுங்க.. கேஜ்ரிவாலை அலறவிட்ட குஜராத் ஹைகோர்ட் – என்னாச்சு?

காந்திநகர்: குஜராத் உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை பற்றிதான் ஒட்டுமொத்த நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழை கேட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். ஏற்கனவே ராகுல் காந்தி விவகாரத்தில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே பெரும் பேசுபொருளாகிய நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இந்த தீர்ப்பால் … Read more

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், தாவர பூஞ்சை நோயால் பாதிப்பு..!

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், உயிரைப்பறிக்கும் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 61 வயதான அந்த நபர், தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுடன் மருத்துவமனைக்குச்சென்றுள்ளார். சி.டி.ஸ்கேனில் அவரது கழுத்தின் வலது பக்கத்தில் சீழ் கட்டியிருந்தது தெரியவந்தது. சீழை எடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுக்கு அனுப்பியதில், தாவரங்களுக்கு ஏற்படும் “காண்ட்ரோஸ்டீரியம் பர்பூரியம்” ( Chondrostereum purpureum ) என்ற தாவர பூஞ்சை நோய் பாதித்திருந்தது தெரியவந்தது. தாவர பூஞ்சையியல் ஆராய்ச்சியாளரான … Read more

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் மோடியின் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என ஒன்றிய தகவல் ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. … Read more

ஒரு கொசு வர்த்தியால் ஆறு பேர் உயிரிழந்த சோகம்!!

கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை அப்பகுதி மக்கள் வழங்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு கொசுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு அனைவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், கதவை … Read more

முதலமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!!

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கோரிய வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து அறிந்து கொள்ள, அவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். கேட்கப்பட்ட தகவல் 3ஆம் தரப்பினருடையது எனக்கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் … Read more

அவுரங்காபாத்தில் ராமநவமி விழாவில் வன்முறை: அரசியல் சாயம் பூசவேண்டாம் என பட்னாவிஸ் வேண்டுகோள்

அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீஸார் மீது 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. அவுரங்காபாத் கிரத்புரா பகுதியில் புனரமைக்கப்பட்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமநவமி விழா நேற்று முன்தினம் இரவே களைகட்டியிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு அருகில் இளைஞர்கள் சிலர் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அங்கிருந்த போலீஸார் மீது … Read more