தெலுங்கானாவில் பரபரப்பு..!! பெண் கான்ஸ்டபிளை அறைந்த ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா..!!

தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தெலுங்கானா வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் … Read more

கொச்சி | நாட்டின் முதல் ’வாட்டர் மெட்ரோ’ போக்குவரத்து சேவை: சிறப்பம்சங்கள் என்ன?

கொச்சி: கேரள மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.25) நாட்டின் முதல் ‘வாட்டர் மெட்ரோ’ சேவையைத் தொடங்கிவைக்கிறார். முன்னதாக நேற்று (ஏப்.24) பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலம் வந்தார். ஐஎன்எஸ் கருடா விமான தளத்தில் கேரள பாரம்பரிய உடையில் தரையிறங்கிய அவர், சேக்ரட் ஹார்ட் கல்லூரி வரை நடந்து சென்றார். சுமார் 1.8 கி.மீ. தொலைவு வரை நடந்து சென்ற பிரதமர் மோடியை சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மலர் தூவி வரவேற்றனர் … Read more

திருப்பதி பக்தர்கள் ரெடியாருங்க… ஆன்லைனில் வெளியாகும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருமலை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இதையொட்டி போதிய முன்னேற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. வார நாட்களில் சராசரியாக தினசரி 60 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் 75 ஆயிரம் பேரும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தரிசனம் இதேபோல் உண்டியல் காணிக்கை 3.5 கோடி ரூபாய் என்ற அளவில் கிடைத்து … Read more

நாங்கள் தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து : அமித்ஷா..!!

தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அமித்ஷா, “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி மஹ்லிஸ் ஒவைசியிடன் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். கே சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த … Read more

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மாற்றுவோம் : ராகுல் காந்தி..!!

கர்நாடகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, இப்போது 2 – 3 கோடீஸ்வரர்கள் மீது மட்டுமே அரசின் கவனம் உள்ளது. ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில்கள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. வங்கிகளிலிருந்து கோடீஸ்வரர்கள் எளிதில் கடன் பெற முடிகிறது. செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அரசு அதனை … Read more

தன்பாலின திருமணத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது: பார் கவுன்சில் ஆப் இந்தியா தீர்மானம்

புதுடெல்லி: தன்பாலினத்தவர்களின் திருமணத்துக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் பார் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பல்வேறு மாநிலங்களின் பார் கவுன்சில் நிர்வாகிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: … Read more

காசர்கோடு டூ திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… ராஜ்தானி தோத்துச்சு போங்க… டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை குறித்த பேச்சு தான் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இது கேரள மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதியை முழுவதுமாக இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் கண்ணூர் முதல் திருவனந்தபுரம் வரை இயக்க திட்டமிடப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதன்பிறகு காசர்கோடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க … Read more

பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏக்கள் கிடைக்கும்! ராகுல் காந்தியின் கர்நாடக தேர்தல் கணிப்பு

Karnataka Election 2023: பாஜகவுக்கு 40 இடங்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கை நிறைவேறுமா? சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் களம்

மத்தியில் காங். ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் – ராகுல் காந்தி

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், நாட்டில் உள்ள வசதிபடைத்தவர்களுக்கு ஆதரவாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், இதனால் சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதாகவும் விமர்சித்தார்.  Source … Read more

பிரதமர் மோடி அலை கர்நாடக தேர்தலிலும் தொடரும்: மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா நம்பிக்கை

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2 தொகுதிகளில் போட்டியிடும் கர்நாடக வருவாய்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது… மூத்த தலைவர்களுக்கே தொகுதிகள் கிடைக்கவில்லை. உங்களுக்கும் சோமண்ணாவுக்கும் மட்டும் 2 தொகுதிகள் எப்படி கிடைத்தது? ஆச்சரியமாக இருந்தது. நானும் சோமண்ணாவும் பெங்களூருவை மையமாக வைத்து அரசியல் செய்தவர்கள். என்னை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கனகப்புராவிலும், சோமண்ணாவை முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வருணாவிலும் நிறுத்தி இருக்கிறார்கள். இது … Read more