சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய திட்டம்!

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை சூரத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி பெயர் குறித்ததான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த மாதம் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. அத்துடன் மேல்முறையீடு செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு 30 நாட்கள் ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி நாளை சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.!

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை … Read more

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! 2 பேர் பலி… 40 பேர் படுகாயம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த கீழையூர் அருகே கேரளாவில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

மீண்டும் அவதூறு வழக்கு.. இந்த முறை ஆர்எஸ்எஸ்.. 12ம் தேதி விசாரணை.. ராகுலுக்கு அடிமேல் அடி.!

ராகுல் காந்தி மீது மீண்டும் அவதூறு வழக்கு முன்னாள் எம்பியும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக அவர் கருத்து தெரிவித்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது . இந்தமுறை ஆர்எஸ்எஸ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கமல் பதவுரியாவின் புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் … Read more

சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஒருவர் கூட சிறையில் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதிகள் சிறையில் அடைக்கப்படும் காலம் தொடர்பான மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு  விசாரித்தது. ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட நாளில் இருந்து 60 அல்லது 90 நாட்களுக்கு ரிமாண்ட் காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குற்றத்தடுப்பு, பாதுகாப்பைப் பராமரித்தல் மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், சட்ட விதிகளை மீறி தனி நபர் எவரும் சிறையில் … Read more

28 வருட இடைவெளிக்குப் பிறகு 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற நாள் இன்று..!

மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் நினைவு செய்வோம். உலகக்கோப்பை இறுதிப் போட்டி … Read more

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என் பெயரை கெடுக்க முயற்சி: டெல்லி-போபால் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்து பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போபால்: எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம்விளைவிக்க தொடர்ந்து சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். மத்தியபிரதேச மாநிலம் போபால் – புதுடெல்லி இடையேயான புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி போபால் நகரில் நேற்றுகொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தற்போது போபால்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்தவந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1-ம் … Read more

பீகார் மாநிலத்தில் வன்முறை.! ஒருவர் உயிரிழப்பு, தொடர்ச்சியாக 80 பேர் கைது: கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்புகிறது ஒன்றிய அரசு

பாட்னா: நாடு முழுவதும் ராமநவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. இதன் ஒரு பகுதியாக பீகாரிலும் பல்வேறு நகரங்களில் சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்டவை நடந்தன. இதனை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், வன்முறை பரவியது. 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர … Read more

திருமலைக்கு மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேர்த்தி கடனாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மார்க்கங்கள் வாயிலாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்தே மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிப்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும். சில ஆண்டுகளாக இவ்விரு பாதைகளில் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், இரண்டு லட்டு பிரசாதங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. கரோனா தொற்றின் போது திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது நேற்று முதல் … Read more

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என்றும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய,  கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா குஜராத், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகளவில் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையத்தின் இயக்குனர் ஜெனரல் … Read more