அடுத்த வாரம் வெப்ப அலை இல்லை; மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைக்கு வாய்ப்பில்லை. மாறாக அடுத்த வாரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மழைக்கு வாய்ப்புள்ள மாநிலங்கள் குறித்து மண்டல வாரியாக இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியுள்ளவதாது: மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு … Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட்டதை உறுதி செய்யும் கருவி..!

மகாராஷ்டிராவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நவீன இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் தோட்ஷா ஆஸ்ரம் அரசுப்பள்ளியில் இந்த நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், மாணவி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவுடன் அந்த இயந்திரத்தில் ஏறி நின்றதும், மாணவியை புகைப்படம் எடுக்கும் அந்த கருவி, அவரது உயரம், எடைக்கு ஏற்ப தட்டில் உள்ள உணவுகள் ஊட்டச்சத்து உள்ள உணவா? என்பதை செயற்கை நுண்ணறிவு … Read more

அறிக்கை என்னவானது?- டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்

புதுடெல்லி: பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாகக் கூறி கடந்த ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாததைக் கண்டித்தும், ஏற்கெனவே நடந்த விசாரணைக் குழுவின் அறிக்கை விவரத்தைக் கோரியும் வீராங்கனைகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் … Read more

’நோ’ சொன்ன அமித் ஷா… லிங்காயத்து வேண்டாம்… கர்நாடக பாஜகவில் புது குழப்பம்!

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே 13 வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்காக ஒட்டுமொத்த நாடும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. ஆளும் பாஜக மீது ஊழல் புகார்கள், ஹிஜாப் சர்ச்சை, 40 சதவீத கமிஷன் விவகாரம் என பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கின்றன. இவற்றை சாதகமாக பயன்படுத்தி கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த சூழலில் சீட் கிடைக்காத விரக்தியில் பலரும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் , மதச்சார்பற்ற … Read more

திருப்பதி தரிசன டிக்கெட் – போலி இணையதளம் கண்டுபிடிப்பு..!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளம் போன்று மேலும் ஒரு போலி இணையதளம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக இணையதளம் வாயிலாக பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி போலி இணையதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு போலி இணையதளம் தொடர்பாக காவல்நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது போன்று 40 இணையதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more

மஸ்க் எனக்காக பணம் செலுத்தினாலும் நல்லதுதான்: ப்ளூ டிக் நீக்கப்படாதது குறித்து ஒமர் அப்துல்லா ட்வீட்

ஜம்மு: ட்விட்டர் ப்ளூ டிக் அங்கீகாரத்துக்கு பணம் செலுத்தாத போதிலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் மீண்டும் இடம்பெற்றுள்ளது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா. இவரை ட்விட்டரில் 3.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “ட்விட்டர் ப்ளூ டிக் அங்கீகாரத்துக்காக நான் பணம் செலுத்திவிட்டேன். சரிபார்ப்பதற்காக எனது … Read more

கர்நாடகா சட்டசபை தேர்தல்: ‘நாங்க இருக்கோம்.. நண்பேன்டா’ – குஷியில் காங்கிரஸ்.!

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி வேலை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தல் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே மீதம் உள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கர்நாடகாவில் முகாம் இட்டு, தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட ஆளும் கட்சியின் தேசிய … Read more

திருப்பதியில் ரூ.2.85 கோடியாக குறைந்த உண்டியல் வசூல்! கடந்த ஓராண்டில் மிக குறைந்த தினசரி வருமானம்!

திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை குறைப்பதற்காகவும் பல மாற்றங்களை கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது

நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாபின் மோகா பகுதியில் இன்று (ஏப்ரல் 23) காலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “35 நாட்களுக்குப் பின்னர் இன்று அம்ரித்பால் … Read more

அம்ரித்பால் சிங் எல்லாம் ஜுஜுபி.. பிந்தரன்வாலே யாருனு தெரியுமா..? அது என்ன 'ப்ளூ ஸ்டார் ஆபரேஷன்'..

டெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் பதற்றத்தையும், அதிர்வலைதளையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, அம்ரித்பால் சிங்கை ‘பிந்தரன்வாலே 2.0’ என மீடியாக்கள் குறிப்பிடுவதை பார்க்க முடிகறது. சரி.. யார்தான் அந்த பிந்தரன்வாலே.. அப்படி என்ன அவர் செய்தார்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ப்ளூ ஸ்டார் ஆபரேஷனில் என்ன நடந்தது.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதாவது 1940-களிலேயே பஞ்சாபை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று … Read more