Karnataka CM: முதல்வராய் முந்தும் சித்தராமையா! துணை முதல்வராகும் டிகே சிவக்குமார்

Siddaramaiah To Be Karnataka CM: ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி! கர்நாடகாவை முன்னாள் முதல்வர் சித்தராமையா வழிநடத்துவார், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக மாநிலத்தை வழிநடத்துவார்

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

கேரள மாநிலம் கொல்லத்தில் மருந்து சேமிப்பு கிடங்கில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாயின. உளிய கோவில் பகுதியில் மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து சேமிப்பு கிடங்கில் மருந்துகள்  மட்டும் இன்றி மருந்து தயார் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல் வகைகளும் பாதுகாத்து வைக்கப்படுவது வழக்கமாகும். இந்த கிடங்கில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிய துவங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த … Read more

கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே கடும் போட்டி

பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி. பாட்டீல் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. ஒக்கலிகா, லிங்காயத், குருபா, பட்டியலின‌ சாதி சங்கங்களும், மடாதிபதிகளும் தங்களது சாதியை சேர்ந்தவருக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். முஸ்லிம் அமைப்பினர் தங்களது … Read more

மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் குழந்தை சடலத்துடன் பேருந்தில் பயணித்த தந்தை: அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் மம்தா உத்தரவு

கொல்கத்தா: ஆம்புலன்ஸில் செல்ல பணம் இல்லாததால் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தனது 5 மாத குழந்தையின் சடலத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் தங்கிபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ் சர்மா. இவரது 2 மகன்களுக்கும் கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரு குழந்தைகளும் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குணமடைந்த ஒரு குழந்தையுடன் தேவ் சர்மாவின் மனைவி சொந்த ஊர் … Read more

சவுரவ் கங்குலிக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கும் மேற்கு வங்க அரசு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை ‘Z’ பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கங்குலிக்கு வழங்கப்பட்டு வந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு காலாவதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவிஐபி-யான கங்குலிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு சார்ந்த மறு ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய முடிவின் படி கங்குலிக்கு 8 … Read more

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க 2 நிறுவனங்கள் ஆர்வம்…!

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் மருத்துவமனை பரிசோதனைக்காக இரு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பனாஸியா பயோடெக் ஆகிய நிறுவனங்கள் 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளன. இதனையடுத்து வயது வந்தோருக்கான தடுப்பூசி சோதனை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதாகத் மருத்துவக் … Read more

கர்நாடகா முதல்வர் பதவி இழுபறி | இன்று ராகுலை சந்திக்கும் சித்தராமையா, சிவகுமார்

புதுடெல்லி: கர்நாடகவின் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி மூன்று நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இன்று (புதன்கிழமை) ராகுல் காந்தியை சந்திக்கின்றனர். கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கு மே 10ம் தேதி நடந்த தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தலைதூக்கத் தொடங்கியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, … Read more

உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!

உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய கொலீஜியம், இரு காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான பரிந்துரைகளை வழங்க ஒருமனதாக தீர்மானித்தது. அதன்படி, ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா … Read more

பழைய சம்பவங்களை திரும்பிப் பாருங்கள் – கர்நாடகா விவகாரத்தில் பாஜக விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அதுகுறித்த பாஜகவின் விமர்சனத்திற்கு,”பழைய சம்பவங்களைத் திரும்பிப் பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,” குறிப்பாக பிரதமரின் முரசறைபவர்களின் ஞாபகத்திற்காக இது. 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை முடிவுகள் வெளியானது மார்ச் 11-ம் தேதி. யோகி ஆதித்யநாத் 8 நாட்கள் கழித்து மார்ச் 19-ம் தேதிதான் … Read more

உயிரிழந்த மகளின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுப்பு.. மோட்டார் சைக்கிளில் எடுத்துசென்ற தந்தை!

மத்தியப்பிரதேசத்தின் ஷதோலில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால், உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு தந்தை எடுத்து சென்றுள்ளார். தங்களது கிராமம் மருத்துவமனையிலிருந்து 15 கிலோ மீட்டருக்கு மேல் இருந்ததால், ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதாகவும், பண வசதி இல்லாததால் தனியார் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார். இதனிடையே, கிராமத்தை அடைய 20 கிலோ மீட்டர் இருந்த … Read more