காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீ கைலாசநாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘போஸ்டர்’ ஒட்டியதாக 8 பேர் கைது

புதுடெல்லி: குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இது குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது: “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது … Read more

கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட விபரீதம்-6 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு கொசுவர்த்தி சுருளை ஏற்றிவைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது, கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து தீப்பிடித்துள்ளது. நச்சுப்புகையால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சுய நினைவை இழந்துள்ளனர். தீ விபத்து மற்றும் மூச்சுத்திணறலால் உறங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஆபத்தான … Read more

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கான்பூரின் பாஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசிக் கொண்டு இருந்ததால் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீப் பரவியது. இதனால் அருகில் இருந்த மசூத் டவரின் 2 கட்டிடங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த … Read more

''தப்பி ஓடவில்லை; விரைவில் உலகின்முன் தோன்றுவேன்'': அம்ரித்பால் சிங்

சண்டிகர்: தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார். அம்ரித்பால் சிங் மீது உள்ள வழக்குகள் காரணமாக அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை … Read more

டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவத்தி சுருளில் இருந்து வந்த நச்சு புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். சென்னை சாஸ்திரி பூங்கா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொசு விரட்டி மருந்தில் இருந்த நச்சு வாயுவை சுவாசித்ததின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொசு விரட்டியை எரியவிட்டு தூங்கிய நிலையில் கொசு விரட்டியின் சுருள் மெத்தையின் மீது விழுந்ததில் தீ பற்றி … Read more

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் விழா: முதல்வர் அறிவிப்பு..!!

முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது., “மத்திய அரசு உதவியோடும் உறுதுணையோடும் அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுச்சேரியை முன்னேற்றுவோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர். புதிய சட்டப்பேரவைக்கு வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கு என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட முடிவு எடுக்கப்பட்டு பூமி பூஜை போடப்படும். அரசானது காலி பணியிடங்களை நிரப்புவதே எண்ணம். பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தது. ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி, சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா … Read more

அரியானாவில் கோபுர ஓட்டலில் தீ விபத்து..!!

அரியானா: அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அமராவதி அங்காடியில் கட்டிடத்தின் உச்சியில் உள்ள வட்டவடிவ ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள ஓட்டலில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போஸ்டர்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாடு முழுவதும் நேற்று போஸ்டர் ஒட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் நேற்று கூறியதாவது. ஆம் ஆத்மி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது. ‘மோடியை அகற்றுவோம் நாட்டைக் காப்போம்’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு நாட்டின் 22 மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. … Read more