தீவிரவாத நிதி உதவி காஷ்மீரில் 8 இடங்களில் எஸ்ஐஏ ரெய்டு

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரை சேர்ந்த மத பிரசாரகரான மவுல்வி சர்ஜன் பர்கதி, காஷ்மீர் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடவும், இந்திய அரசை வீழ்த்தவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்து பேசுபவர். இவர் மீது தேச விரோத பேச்சு மற்றும் சட்டவிரோத நிதி வசூல் குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பான எஸ்ஐஏ கடந்த ஆண்டு வழக்கு பதிந்தது. இவர் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதோடு, திரட்டப்படும் நிதியை தனது சுய லாபத்திற்காகவும் பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. … Read more

ஒவ்வொரு மது பாட்டில் மீதும் 10 ரூபாய் பசு வரி விதிப்பு – இமாச்சல் முதல்வர் அறிவிப்பு

சிம்லா: ‘‘ஒவ்வொரு மது பாட்டில் மீதும் இனிமேல் ரூ.10 செஸ் வரி விதிக்கப்படும்’’ என்று இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் அறிவித்தார். இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். இந்நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நேற்று சுக்விந்தர் தாக்கல் செய்தார். 2023 -24-ம் ஆண்டுக்கான ரூ.53,413 கோடி பட்ஜெட்டை அவர் சமர்ப்பித்தார். பேரவையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். … Read more

மும்பை மாதோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயுடன் ரஜினி திடீர் சந்திப்பு

மும்பை: முன்னாள் முதல்வரும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவருமான  உத்தவ் தாக்கரேயை மும்பை புறநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர்  ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சிவசேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ்  தாக்கரே  மும்பை பாந்த்ராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் வசித்து  வருகிறார். அவரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். சிவசேனா நிறுவனர்  பால்தாக்கரே மீது நடிகர் ரஜினி காந்த் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதே போல் அவரது குடும்பத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். … Read more

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்திற்கான இணையதளம் – அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: குஜராத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று சென்னையில் வெளியிடுகிறார். அப்போது இதற்கான இணைய தளத்தை அவர் தொடங்கி வைக்கிறார். உ.பி.யின் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அதுபோன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’, ஏப்ரல் 14 முதல் 24-ம் தேதி வரையில் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் உரத்துறை … Read more

போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடி, ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங்..!

பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதாகி உள்ளனர். அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாத போதகராக அம்ரித்பால் சிங், பஞ்சாபைத் தனிநாடாக அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்திவரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தீவிர ஆதரவளராகவும் உள்ளார். இந்நிலையில், ஜலந்தர் மாவட்டத்தில் ஷாகோட் பகுதியில் தொண்டர்களுடன் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்-கை, தடுத்து நிறுத்திய பஞ்சாப் சிறப்பு … Read more

விமானம் விழுந்து விபத்து பெண் விமானி உட்பட 2 பேர் பலி

பாலகாட்: மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த பெண் விமானி உட்பட 2 பேர் பலியானார்கள். மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டம், பிர்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் ஒரு பெண் விமானி உட்பட 2 விமானிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் நொறுங்கி விழுந்தது.  இதுகுறித்து பாலகாட் … Read more

”இன்டெர்நெட்டை சரியாக பயன்படுத்திய ஆட்டோ டிரைவர்..” அப்படி என்ன செய்தார்?

இன்டெர்நெட் உலகம் மூலை முடுக்கெங்கிலும் பரவிக் கிடப்பதற்கு பெங்களூருவின் இந்த ஆட்டோ டிரைவரும் ஒரு காரணமாக இருக்கலாம். உபெரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டே முதலீடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான தரவுகளுக்கான யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார் ஜனார்தன். சுஷாந்த் கோஷி என்பவரது ட்விட்டர் பதிவு மூலம் தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் ஜனார்தன் பொதுவெளிக்கு தெரிய வந்திருக்கிறார். அதில், “இன்றைக்கான என்னுடைய உபெர் ஆட்டோ டிரைவர் ஒரு யூடியூப் இன்ஃப்ளூயன்சர். அதுவும் நிதி தொடர்பான பொருளாதார சிக்கல்களை, … Read more

3-வது முறையாக மோடி பிரதமராவார் – அமித் ஷா உறுதி

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு தீவிரவாத செயல் 70% குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நான் சென்றுள்ளேன். அங்குள்ள நிலைமையை பார்க்கும் போது, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி … Read more

2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நேற்று சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை டெல்லியில் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அஞ்சல் தலை ஒன்றையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ற்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றையும் வெளியிட்டார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் இந்தியா முன்னிலை வகிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு போன்ற நிகழ்வுகள், சர்வதேச நலன்களுக்கு தேவையானது மட்டுமின்றி உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்புணர்வுக்கான அடையாளமும் ஆகும். இந்தியாவின் … Read more

காசி கோயிலுக்கு 100 முறை சென்ற உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்

வாரணாசி: கடந்த 2017-ம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார். இந்நிலையில் யோகி ஆதித்ய நாத் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் வாரணாசி சென்றார். கடந்த 6 ஆண்டில் இது அவரது 113-வது பயணம் ஆகும். வாரணாசி சென்ற யோகி, நேற்று அங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டார். கடந்த 6 ஆண்டில் அவர் விஸ்வநாதரை வழிபட்டது 100-வது முறை ஆகும். இதன்மூலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 100 முறை சென்ற முதல் உ.பி. … Read more