புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் தற்கொலை முயற்சி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி  கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட  பல்நோக்கு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு, சமையல்,  சீருடை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்  பணிநிரந்தரம், ஊதிய உயர்வு கோரி 150க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென பணிகளை  புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது, 40 ஊழியர்கள்  மருத்துவக்கல்லூரியின் முதல்மாடியில் ஏறி முகப்பு பகுதியில் நின்று தற்கொலை முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற ஊழியர்கள்  கீழ்தளத்தில் நின்று கோஷங்களை எழுப்பினர். … Read more

‘உனக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் உயிரே’ – ஜாக்குலினுக்கு கிரிமினல் கடிதம்.!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். பெங்களுருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடயே இடைத் த்ரகராக செயல்பட்டு வந்த இவர், ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் பிளவு உண்டானபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தார். அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் … Read more

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக 42 போலி வீடியோக்களை பகிர்ந்தவர் பீகாரில் கைது: மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு கூடுதல் டிஜிபி விளக்கம்

பாட்னா: வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக கூறி 42 போலி வீடியோக்களை பகிர்ந்தவரை பீகாரில் போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களில் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் பீகார் உள்பட வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,’ சமூக வலைதளங்களில் பரவி வரும்  வீடியோ போலியானது’ என்று விளக்கம் அளித்தார். இதுபற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் … Read more

சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை: முதல்வருக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

லிபியாவில் சிக்கித் தவித்த 12 இந்தியர்கள் மீட்பு: அனைவரும் டெல்லி திரும்பினர்

புதுடெல்லி: லிபியாவுக்கு சட்ட விரோதமாக அழைத்து செல்லப்பட்ட பஞ்சாபை சேர்ந்த 12 பேர் பத்திரமாக நாடு திரும்பினர்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேருக்கு லிபியா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை முகவர் ஒருவர் அழைத்து சென்றார். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்கு அவர்கள் கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவு உள்ளிட்ட தேவைகள் கூட பூர்த்தி செய்து தரப்படவில்லை. தட்டி … Read more

5 பிள்ளைகள் இருந்தும் ரூ.1.5 கோடி சொத்தை அரசுக்கு கொடுத்த முதியவர்!!

பிள்ளைகள் கவனிக்காததால் முதியவர் ஒருவர் தனது 1.5 கோடி ரூபாய் சொத்தை மாநில அரசுக்கு எழுதி வைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பதானா கிராமத்தை சேர்ந்த நது சிங் (85) என்ற முதியவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார். மனைவி உயிரிழந்ததையடுத்து நது சிங் தனியாக வாழ்ந்து வந்தார். 5 பிள்ளைகள் இருந்தபோதும் தன்னை யாரும் கவனிக்காததால் இவர் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் … Read more

கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை: டெல்லி ஐகோர்ட் அறிவிப்பு

டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை என டெல்லி ஐகோர்ட் அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.   

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் மனு: டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை..!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமின் கோரி பாஜக செய்தி தொடர்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலையில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டது. அவை எல்லாம் வதந்தி என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டார். இதுபோல் … Read more

திரிபுராவில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகிறார் மாணிக் சாகா.!

திரிபுராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜகவின் மாணிக் சாகா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். வருகிற 8ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பு. திரிபுராவில் பாஜக இரண்டாம் முறை ஆட்சி அமைக்க உள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை … Read more

பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்ஜாமின் மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார்

டெல்லி: பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்ஜாமின் மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் உம்ராவ், கோவா பாஜக அரசின் வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். பொய்ச் செய்திக்கு தான் பலிகடா ஆகிவிட்டதாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை என்றும் கூறிள்ளார். பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அண்ணாவும் கூறியுள்ளார்.