பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து – ராகுல் காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

டெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது, “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார் என்றும், “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய … Read more

அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகள் பலி

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் 2 விமானிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். அருணாசலப்பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோருடன் சங்கே கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டு அசாமின் சோனிப்பூர் மாவட்டத்தில் மிசாமாரி நோக்கி சென்றது. காலை 9.15மணிக்கு விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு கமேங் மாவட்டத்தில் உள்ள மண்டாலா அருகே போம்டிலாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை … Read more

முதலிரவில் எதுவும் நடக்கல… வார்த்தையை விட்ட 2k கிட் மணப்பெண் – கொடூரமாக கொன்ற மாப்பிள்ளை!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். பி.டெக் பட்டதாரியான சரவணன் ஹைதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநிலம் வனபதியை சேர்ந்த 20 வயது பெண்ணான ருக்மணிக்கும், இவருக்கும் கடந்த மாதம் 1ஆம் தேதி திருமணம் நடந்தது.  உறவினர்கள் கிண்டல் திருமணம் முடிந்ததும், அன்று இரவே மணமகள் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சரவணன் மறுத்ததால் முதலிரவு நடக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு சரவணன் முதலிரவுக்கு மறுத்ததை ருக்மணி … Read more

ஆவணம் இல்லாமல் காரில் எடுத்து சென்ற ரூ.50 லட்சம் சிக்கியது

பெங்களூரு: பெங்களூருவில் காரில் வைத்திருந்த ஆவணம் இல்லாத ரூ.50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மாநில சட்டப்பேரவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பெங்களூரு வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார், அரசு மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் சமீபத்தில் இருப்பதால், வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு, பணம் கொடுப்பதை இப்போதிலிருந்த போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதையேற்று … Read more

இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70,000 கோடியில் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70,000 கோடியில் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடற்படைக்கு 60 மேட் இன் இந்தியா யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள், சூப்பர் சோனிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு பல்வேறு முக்கிய தளவாடங்களை கொள்முதல் செய்வதைக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தற்போது பல்வேறு பரிசோதனைகளை … Read more

விண்வெளிக்கு சுற்றுலா போகணுமா! ரூ.6 கோடி செலவில் பயணம் – இஸ்ரோவின் அசத்தல் திட்டம்

விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ”இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் பாதுகாப்பானது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய … Read more

அதிர்ச்சி! பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!!

இரவு பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா பரவல் காரணமாக அவர் வீட்டிலிருந்தே வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் அவர் மனைவியுடன் சுல்தான் பேட்டைக்குச் சென்று ஹோட்டலில் பரோட்டா மற்றும் பிரைடு ரைஸ் பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். விடியற்காலை சத்தியமூர்த்தியை அவரது மனைவி எழுப்பிய போது அவர் … Read more

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது: இஸ்ரோ

பெங்களூரு: சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்திற்கான தொழில்நுட்ப பணிகள் கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் என்ஜினின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ம் … Read more

மராட்டியத்தில் இன்ஃபுளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவர் உயிரிழப்பு

மராட்டியப் பேரரசு: மராட்டியத்தில் இன்ஃபுளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிம்பிரி சின்சாவத் மாநகராட்சி பகுதியில் இன்ஃபுளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.    

பிரதமர் மோடி திறந்து வைத்து வெறும் மூன்றே நாளில் சேதமடைந்த அதிவிரைவு சாலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு.!

கர்நாடகா: மூன்று நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட பெங்களூரு – மைசூரு விரைவுசாலையின் சேதமடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை ரூ.8,480 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. பிரதான சாலை 6 வழியாகவும், மீதமுள்ள 4 வழி அதன் இருபுறமும் தலா 2 வழி என்ற அளவில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையால் பெங்களூரு-மைசூரு இடையே பயண நேரம் 3 மணி நேரத்தில் … Read more