விரைவில் பிஎஸ்என்எல் 4G சேவை : ஒன்றிய அரசு

டெல்லி :நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4G சேவை செயல்பாட்டுக்கு வந்த பின்னர், பிஎஸ்என்எல் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று -மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் தேவ்சிங் சௌஹான் பதில் தெரிவித்துள்ளார். மேலும் 1 லட்சம் பகுதிகளில் 4G சேவை வழங்க கடந்தாண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு இளைஞர்களை தூண்டிய 2 பிஎஃப்ஐ உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: மூளைச் சலவை செய்து தீவிரவாத செயல்களில் முஸ்லிம் இளைஞர்களை ஈடுபடத் தூண் டியதாக பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உறுப்பினர் கள் 2 பேர் மீது தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியிலுள்ள பிஎஃப்ஐ அமைப் பின் உறுப்பினர் முகமது ஆசிப் (எ) ஆசிக். பரான் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் சராப். இவர்கள் இருவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டியதாகவும், அவர்களை தங்களது … Read more

ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி

மூத்த குடிமக்களுக்கு இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் சலுகை: ரயில்வேயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு மீண்டும் ஒருமுறை தொங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாடாளுமன்றக் குழு அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் போது வழங்கப்படும் சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்பி ராதா மோகன் சிங் … Read more

இளைஞரின் வயிற்றிலிருந்த 56 பிளேடுகள் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த யஷ்பால் சிங் (26) என்ற இளைஞரின் வயிற்றிலிருந்த 56 பிளேடுகள் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம் செய்யப்பட்டுள்ளது. பதட்டம் அல்லது மனச்சோர்வு காரணமாக இளைஞர் இவ்வாறு பிளேடுகளை விழுங்கியிருக்கலாம் எனவும், கவருடன் மூன்று பாக்கெட் பிளேடுகளை விழுங்கி இருந்ததாகவும் 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு விளக்கம் அளித்துள்ளது.

மும்பையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடங்கள் ரூ.252 கோடிக்கு விற்பனை

மும்பை: தெற்கு மும்பை பகுதியில் தொழிலதிபர்கள் வீடு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதால் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறியது: கடந்த மாதம் வெல்ஸ்பன் குழுமத் தலைவர் பி.கே.கோயங் காவுக்கு வோர்லி பகுதி டவர் ‘பி’யில் உள்ள 63,64,65-ஆவது தளங்களை வாங்கினார். இவை 30,000 சதுர அடி பரப்பளவை கொண்டவை. ரூ.240 கோடியில் வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தம்தான் நாட்டின் அதிகபட்ச மதிப்புடைய குடியிருப்பு மனை விற்பனை ஒப்பந்தமாக கருதப்பட்டது. இந்த நிலையில் அதனையும் … Read more

பிரதமர் மோடியைப் பற்றி பாஜக தயாரித்துள்ள அனிமேஷன் வீடியோ.!

பிரதமர் மோடியின் வளர்ச்சி, ஆட்சி போன்றவற்றை குறிக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கி குஜராத் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் உயர்ந்த அவர், இந்தியாவை வலிமையான பொருளாதாரம் நோக்கி வழிநடத்திச் செல்வதாக அந்த வீடியோ விவரிக்கிறது. எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் யாவும் மோடியிடம் பலிக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.

எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு பீகார் பேரவையை புறக்கணித்து பாஜ எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

பாட்னா: பீகாரில் பாஜ எம்எல்ஏ லக்கேந்திர ரோஷன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் பேரவையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் சட்டப்பேரவையில், தலித் எம்எல்ஏவை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது  பாஜ எம்எல்ஏ லக்கேந்திர ரோஷன் மைக்கை பிடுங்கி கீழே போட்டார். இதனால், அவர் 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று பீகார் சட்டப்பேரவை கூடும்முன், பேரவை வளாகத்தில் பாஜவினர் கூடி ரோஷன் சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை கூடியதும், … Read more

விமானத்தை தொடர்ந்து ரயிலிலும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, … Read more

5 பேரை காவு வாங்கிய செங்கல் சூளை தீ..!! சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!!

சத்தீஸ்கர் மாநிலம் மஹசாமுண்ட் மாவட்டம் காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் நேற்று இரவு செங்கலை சுட தொழிலாளர்கள் தீ வைத்துள்ளனர். பின்னர், தொழிலாளர்கள் 6 பேர் செங்கல் சூளையில் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பிற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு சக ஊழியர்கள் 6 பேர் படுத்து கிடப்பதை பார்த்து … Read more

இந்தியாவில் முதுநிலை மருத்துவம் படிக்க புதிய நிபந்தனைகள் – ‘நீட் பி.ஜி.’க்குப் பதில் ‘நெக்ஸ்ட்’ தேர்வு

புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் பயில்பவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) பல்வேறு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘நீட் பி.ஜி.’ தேர்வுக்கு பதில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயிலும் இந்திய மாணவர்கள் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகும் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ‘நீட்’ … Read more