மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுக்கத்தக்க பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ‘மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு வெறுப்பு பேச்சுக்களை தவிர்ப்பதே அடிப்படை தேவை’ என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகாருக்காக காத்திருக்காமல் வழக்குகளை பதிவு … Read more

சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து : 64 பேர் படுகாயம்..!!

மயிலாடுதுறையில் இருந்து பேருந்து மூலம் 64 பெரியவர்கள் , 9 குழந்தைகள் என 73 ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுள்ளனர். சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய அவர்கள், நிலக்கல் அருகே இலவுங்கல் எருமேலி வரும்போது 3 வது வளைவில் பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்ட் துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் களமிறங்கினர். உள்ளூர் … Read more

ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா கருத்து

புதுடெல்லி: ராகுல் காந்தியின் வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.  பிரதமர் மோடியின் பெயர் குறித்த சர்ச்சையில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து  அமெரிக்க வௌியுறவுத்துறையின்   இணைசெயலாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்துக்கு மரியாதை செலுத்துவது எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் … Read more

சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

புதுடெல்லி: ராகுல் காந்தி  விவகாரத்தில் ஒருதலை பட்சமாக  செயல்பட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர  எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன ராகுலின் எம்பி. பதவி பறிப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் ஒருதலை பட்சமாகவும் அவசர கதியிலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடந்து கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின்  ஆலோசனை கூட்டத்தில், சபாநாயகர் ஓம் பிர்லா மீது ஏப்ரல் … Read more

சாவர்க்கர் பற்றிய விமர்சனம் – ராகுலுக்கு சரத் பவார் அட்வைஸ்

புதுடெல்லி: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார். இந்த பேச்சு காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். “சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை … Read more

முதற்கட்டமாக 2,585 அக்னிவீரர்கள் தேர்வு

சிலிக்கா: பாதுகாப்பு படையில் உள்ள காலியிடங்களுக்கு 4 ஆண்டு பணி அடிப்படையில் அக்னிவீரர்கள் தேர்வு செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதில் முதல்கட்டமாக 2585 அக்னிவீரர்கள் தேர்ச்சி பெற்று ஒடிசா மாநிலம் சிலிக்கா ஐஎன்எஸ் மையத்தில் பயிற்சி பெற்றனர். 4 மாதங்கள் பயிற்சி பெற்று அவர்கள் இனிமேல் படைகளில் இணைக்கப்பட உள்ளனர். இதில் 272 பேர் பெண்கள் ஆவர்.

எந்தவகையில் அடிப்படை உரிமை மீறப்படுகிறது? முன்னாள் எம்பி முகமது பைசலுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவர்  தேர்தலின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக் என்பவரை, முகமது பைசல் சிலருடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.   இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முகமது பைசலை … Read more

ஒன்றிய அமைச்சர் மீது தாக்குதல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கம் கூச் பெஹார் தொகுதி பாஜ எம்எல்ஏவான நிசித் பிரமாணிக், ஒன்றிய இணையமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கூச் பெஹாரில் உள்ள பாஜ அலுவலகத்துக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி சென்றபோது கார்மீது கற்கள் வீசப்பட்டன.  இதுதொடர்பாக பாஜ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை  விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமாணிக் மீதான தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த நேற்று உத்தரவிட்டது.

தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி யாருடைய கட்டளைப்படியும் செயல்படவில்லை

கவுகாத்தி: ‘தேர்தல் ஆணையம் யாருடைய கட்டளைக்கும் கீழ்பட்டு செயல்படவில்லை, எதிர்காலத்திலும் அப்படி இருக்காது’ என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் கூறி உள்ளார். அசாமில் 126 சட்டப்பேரவை மற்றும் 14 மக்களவை தொகுதிகளின் எல்லை மறுவரையறை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜவின் உத்தரவுப்படி தேர்தல் குழு செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான 3 நாள் ஆய்வுப்பணிகளுக்குப் பிறகு கவுகாத்தியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் … Read more

சட்டீஸ்கர், ஆந்திராவில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி:  சட்டீஸ்கரில் நிலக்கரி வரி வசூல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளில் ரூ.540 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரி சவுமியா, நிலக்கரி வர்த்தகர் சூர்யகாந்த் திவாரி உட்பட  9 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.