ஆர்எஸ்எஸ். கூட்டத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை: ஆண்டு கூட்டத்தில் ஆலோசனை

சமால்கா: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பெண்களை அதிகளவில் பங்கேற்க செய்வது குறித்து அரியானாவில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் உள்ள சமால்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின்  ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன. அடுத்தாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் பங்கேற்று பேசிய அதன் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, ‘‘தற்சார்பு இந்தியா, … Read more

லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லங்கள் என 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத், அவர் மகன் தேஜஸ்வி  மற்றும் லாலுவின் குடும்பத்தினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 24 இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்கம், வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ரயில்வே வேலைக்கு லாலு குடும்பத்தினர் நிலம் பெற்றதில் 600 கோடி ரூபாய்க்கான பொருளாதாரக் குற்றம் நடந்திருப்பதாக சோதனைகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே சம்மன் … Read more

ஜம்முவில் பெண்ணை கொன்று உடலை கூறு போட்டு புதைத்தவர் கைது

ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரின் சோய்புக் பகுதியை சேர்ந்த தன்வீர் அகமத் கான் என்பவர், பயிற்சி வகுப்புக்கு சென்ற தன் 30 வயது சகோதரியை காணவில்லை என சோய்புக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) உள்ளிட்ட சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷபீர் அகமது வானி, காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணை கொலை செய்து, உடல் பாகங்களை … Read more

மாநிலங்களுக்கு பதிலாக மருந்து தயாரிப்பை ஒன்றிய அரசே கட்டுப்படுத்தும்: புதிய மசோதா விரைவில் தாக்கல்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு பதிலாக ஒன்றிய அரசே மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் புதிய வரைவு மசோதாவை அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஆலோசனைக்கு ஒன்றிய அரசு அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒன்றிய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ், நாட்டில் வழங்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. மேலும், மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் இணைந்து, மருந்து உற்பத்தி அலகுகளில், கூட்டு ஆய்வு … Read more

நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு சிவிங்கிப் புலிகள் குனோ வனப்பகுதியில் விடுவிப்பு!

நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் நேற்று விடுவிக்கப்பட்டன. ஓபன் மற்றும் ஆஷா என்று பெயரிடப்பட்ட சிவிங்கிப் புலிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன.  தற்போதைய சூழலுக்கு பழக்கிய பின் வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்து போன சிவிங்கிப் புலிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 20 சிவிங்கிப் … Read more

மனுக்கள் மீது இன்று விசாரணை ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: ஒரே பாலின திருமணங்கள் சட்டவிரோதமானவை அல்ல என்ற போதிலும் அதற்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒரே பாலின உறவு சட்டத்துக்கு எதிரானது என்ற 377வது சட்டப்பிரிவை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டில் ஓரின சேர்க்கை குற்றமில்லை என தீர்ப்பளித்தது. அத்துடன் 377வது சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இதன் மூலம், நாடு முழுவதும் ஒரே பாலின உறவு … Read more

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் இன்று விவாதிக்க கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் குடியரசு … Read more

கர்நாடகாவில் ரூ.16,000 கோடியில் மக்கள் நலத்திட்டங்கள்.. பிரதமர் மோடி அடிக்கல்..!

கர்நாடகாவில், 16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலை, தார்வாத் ஐஐடி வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச்சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் நின்று, பொதுமக்களும், பாஜகவினரும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக, பிரதமர் மோடி, கார் படியில் நின்று, கைகளை அசைத்தவாறு நீண்ட தூரம் சென்றார். … Read more

கள்ளநோட்டு வழக்கில் கைதான விவசாயத்துறை பெண் அதிகாரிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?: பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவாவில் விவசாயத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜிஷா மோள் (38). கடந்த சில தினங்களுக்கு முன் ₹500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் இவரை போலீசார் கைது செய்தனர். எடத்துவா பகுதியை சேர்ந்த ஒரு வியாபார நிறுவனத்திலிருந்து ஆலப்புழாவில் உள்ள ஒரு வங்கியில் ₹50 ஆயிரம் பணம் முதலீடு செய்யப்பட்டது. அதில் இருந்த ₹500 நோட்டுகளில் 7 நோட்டுகள் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது.இது குறித்து வங்கி அதிகாரிகள் … Read more

‘என் நிலத்தில் என் மொழி தான் பேசனும்’ – கெத்து காட்டிய ஆட்டோ ஓட்டுநர்.!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அது பிரதமர் நேரு என்றாலும் சரி மோடி என்றாலும் சரி. இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் கண்ட மாபெரும் போராட்டங்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு உள்ளூர் மொழிகளை அழித்து தான் இந்தி மொழி பரவியது என்பது மொழியியளார்களின் குற்றச்சாட்டு. இந்தியை தேசிய மொழியாக்குவதன் மூலம் தமிழ், குஜராத்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிகளை பேசும் மக்கள் … Read more