சட்டசபையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ..!!

வடக்கு திரிபுராவை சேர்ந்தவர் ஜதப் லால் நாத். முதல் முறை எம்எல்ஏவான இவர், பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இந்த ஜதப் லால் நாத் தனது செல்போனில் ஆபாச படம் பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதும், சபாநாயகர் பிஸ்வ பந்து சென் உள்ளிட்டோர் குரலும் தெளிவாக கேட்கின்றன. சக உறுப்பினர்கள் சூழ்ந்திருக்க, சற்று நேரம் மடியில் செல்போனை விரித்து ஆபாச படம் பார்க்கும் ஜதப் லால், அதன் … Read more

கொலை குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவரின் ஜாமீன் வழக்கில் ‘சாட்ஜிபிடி’ உதவி நாடிய பஞ்சாப் நீதிமன்றம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியாணாவைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் உள்ளிட்ட சிலர் சேர்ந்து கடுமையாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷிமல்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் ஜஸ்விந்தர் சிங் மீது மேலும் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ஜஸ்விந்தர் சிங் ஜாமீன் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் … Read more

திருப்பதி: கோடைகாலத்தில் குளு குளு ஆஃபர்; ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

திருப்பதிக்கு கோடை காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் வைணவ திருக்கோயில்களில், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கும் திருப்பதி கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், திருப்பதியில் எப்போது பக்தர்கள் கூட்டம் இருக்கும். அதிலும் கோடைகாலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசின் சாலை போக்குவரத்து கழகம் … Read more

PF Withdrawal Rules:இவர்களுக்கு 20% டிடிஎஸ் கழிக்கப்படும், விதிகள் இவைதான்!!

PF Withdrawal Rules: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பான் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு இபிஎஃப் -லிருந்து பணத்தை திரும்ப எடுக்க, டிடிஎஸ் (TDS) விகிதத்தை தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைப்பதாக அவர் அறிவித்தார். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கும்போது அளிக்கப்படும் இந்த வரிக் குறைப்பு, இபிஎஃப்ஓ ​​(பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பதிவேடுகளில் பான் புதுப்பிக்கப்படாத … Read more

கூட்ட நெரிசலால் கோயில் தரைக்கு கீழிருந்த கிணறுக்குள் விழுந்த பக்தர்கள்.. இந்தோரில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், கோயில் தரையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், ஏராளமான பக்தர்கள் அடியிலிருந்த படிகிணறுக்குள் விழுந்தனர். படிகிணறுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சிவன் கோயிலில், ராம நவமி வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பாரம் தாங்காமல் கோயில் தரை சரிந்ததால், அங்கு நின்றவர்கள் அடியிலிருந்த கிணறுக்குள் விழுந்தனர். கிணற்றில் சிக்கிய 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Source link

குமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு விருது: அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார்

டெல்லி: கன்னியாகுமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி விருதினை வழங்கினார். புதுதில்லியில் ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் கடந்த 28ம் தேதி அன்று  நடைபெற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பொது தனியார் துறை கூட்டாண்மை குறித்த தேசிய பயிலரங்கத்தில்,  மாண்புமிகு ஒன்றிய  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி அவர்கள் சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக … Read more

“ராமர் வெறும் சிலையல்ல… அவர் நமது நாட்டின் அடையாளம்” – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பகவான் ராமர் நமது நாட்டின் அடையாளம் என்றும், அவர் கல் அல்லது மரத்தால் ஆன வெறும் சிலை அல்ல என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராமநவமியை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது, ”அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்புவதற்கான நிலை உருவானபோது பலரும் பல்வேறு விதமான யோசனைகளைத் தெரிவித்தார்கள். அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்று சிலர் … Read more

மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா தொற்று: பழைய நிலை திரும்புமா?

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேர் புதிதாக கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட 40 சதவீதம் அதிகமாகும். தினசரி நேர்மறை விகிதம் 2.7 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 1.71 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. வியாழனன்று வெளியான தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் காணப்படாத மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் … Read more

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்!

டெல்லி: யானைகள் பற்றிய குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற இயக்குநர், தயாரிப்பாளர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா டெல்லியில் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் கடந்த மார்ச் 13ம் தேதி நகரில் நடைபெற்றுது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலை … Read more

“காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”- தேவேந்திர பட்னாவிஸ்

நாக்பூர்: “சத்ரபதி சம்பாஜிநகர் என அழைக்கப்படும் அவுரங்காபாத் நகரில் காவல் துறையினர் தாக்கப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தலைவர்கள் அதற்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்துள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அங்கு அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. … Read more