76 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு; காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிமினல்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையேயான தொடர்பு குறித்து தேசிய புலானய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில். பஞ்சாப், அரியானா,டெல்லி,ராஜஸ்தான்,உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 76 இடங்களில் என்ஐஏ நேற்று  அதிரடி சோதனை நடத்தியது. இச்சோதனையில்  ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் லக்கி கோக்கர் என்ற டெனிசை என்ஐஏ … Read more

பிரதமர் மோடியை கிண்டல் செய்த காங். மூத்த தலைவர் பவன் கேரா கைது – இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கிண்டல் செய்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதால், அவரை அசாம் போலீஸார் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவருக்கு உச்சநீதிமன்றம் வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதானி குழுமத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்றார். அப்போது அவர் … Read more

ரூபா ஐபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பினார் ரோகினி ஐஏஎஸ்

கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மீது மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரூபா, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோகினி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களையும், தனிப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இருவரும் வலைதளங்களில் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்ததால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் ரூபாவின் செயல் தனக்கும், தனது குடும்பத்திற்கும் மனவேதனை … Read more

ரோகிணி ஐஏஎஸ்சுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் பதிவிட ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு தடை: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு எதிராக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் எந்த கருத்தும் பதிவு செய்யக்கூடாது என்று ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கர்நாடக மாநில அரசு துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுதிகல் இடையில் கடந்த 4 நாட்களாக மீடியா மற்றும் சமூகவலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவுகள் … Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு – நிலையான வளர்ச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நாம் ஒவ்வொருவரின் கூட்டுப்பொறுப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி 22 வது உச்சிமாநாட்டின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதுஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதனை உணர்ந்து, சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்தியா அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவே புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை கண்டறியும் பணியில் இந்தியா முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது. நகர்ப்புற சவால்களுக்கு … Read more

சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு இன்று துவங்குகிறது: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு துவங்க உள்ளது. இதில்,எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கூட்டணி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். ராஜஸ்தான் முதல்வர் … Read more

பாஜக மீது மம்தா பேனர்ஜி குற்றச்சாட்டு…!

மேகாலயா தேர்தலில் தனித்து களம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் தேசிய மக்கள் கட்சி பற்றி தனது விமர்சனத்தையும், பாஜக மீதான விமர்சனத்தையும் முன் வைத்தார். அவர் கூறுகையில், வெளியில் இருந்து வரும் யாரையும், உங்கள் மீது குடியுரிமை திருத்த சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ திணிக்க அனுமதிக்காதீர்கள் என குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், மேகாலயாவில் எந்த வளர்ச்சியும் … Read more

கர்நாடகாவை கலக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எ.ஸ் அதிகாரிகளின் குழாயடி சண்டை…!

கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி, பல ஊழல்களில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரூபா மீது ரோகிணி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உயர் அதிகாரிகள் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, இருவரையும் கர்நாடக அரசு காத்திருப்பு பட்டியலில் வைத்தது. இந்த நிலையில் ரூபா தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ரோகினி சிந்துரிக்கு எதிராக நான் எழுப்பிய ஊழல் விவகாரத்தில் … Read more

நாடு முழுவதும் என்ஐஏ சோதனை – 6 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கைது

புதுடெல்லி: என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 76 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா, பாம்பிகா உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் … Read more

திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதியில் மார்ச் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்  ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும், மே மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதேபோல், … Read more