எடைகுறைவு.. ஆற்றல் அதிகம்.. அலுமினியத்தால் தயாரிக்கப்படவுள்ள 100 வந்தே பாரத் ரயில்கள்..!

முதன்முறையாக அலுமினியத்தால் உருவாக்கப்படும் 100 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது. 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில்பெட்டி தயாரிப்பு மற்றும் 35 வருட பராமரிப்பு திட்டத்திற்கு, பிரான்சின் Alstom, ஹைதரபாத்தைச் சேர்ந்த Medha Servo Drives நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளன. தற்போது வந்தே பாரத் ரயில்கள், இருக்கை வசதியுடன், Stainless Steel-லால் தயாரிக்கப்படும் நிலையில், முழுக்க படுக்கை வசதியுடன், அலுமினியத்தால் தயாரிக்கப்படும் … Read more

சட்டீஸ்கரில் நக்சல் அட்டூழியம் :எஸ்ஐ உட்பட 3 காவலர் வீரமரணம்

சுக்மா :சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று மாவட்ட ரிசர்வ் காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஜகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களுக்கு இடையே இன்று காலை 9 மணியளவில் டிஆர்ஜி குழு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உதவி ஆய்வாளர் ராமுராம், காவலர் குஞ்சம் ஜோகா, மற்றும் சைனிக் … Read more

தேசிய தொழிற்பயிற்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 50 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை : பிரதமர் மோடி பெருமிதம்!!

டெல்லி : புதிய கல்வி கொள்கையில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இளைய சமுதாயத்தின் ஆற்றலே தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்தல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, வாழ்வியலுக்கு ஏற்றவாறு கல்வி நடைமுறையை மாற்றி அமைப்பதற்கும் இந்திய தொழில் துறையில் நமது மாணவர்கள் சாதனை புரிவதற்கும் ஏதுவாக நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தேசிய … Read more

'7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துங்கள்' – மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்

7th Pay Implementation: அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுள் ஒன்று, புதிய ஊதியக்குழுவான எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அரசு பழைய நடைமுறையான ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளையே மீண்டும் செயல்பபடுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு ஊழியர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களின் அரசு ஊழியர்களும் தொடர்ந்து இதனை கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.  பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுசார்ந்து முடிவெடுக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து வந்தன. ஆனால், இதுவரை எந்தவொரு … Read more

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் மரணித்த நடன மங்கை.. சடலத்தை கேட்டு கண்ணீர்..!

காரைக்காலில் இருந்து அபுதாபி சென்று அங்குள்ள நைட் கிளப்பில்  நடனமாடி வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அந்தப்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரி அவரது சகோதரிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்… உல்லாச பிரியர்களின் சொர்க்கபுரியான அபுதாபியில் ஏராளமான நைட் கிளப்புகள் உள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த நடன மங்கைகளை  நடனமாட வைத்து தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இங்குள்ள இரவு … Read more

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது மாநில உயர்நீதிமன்றம்

டெல்லி: டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறு தேர்தலுக்கு மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு தொடர்பாக துணைநிலை ஆளுநர், மாநகராட்சி மேயர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘இன்னிங்ஸ் நிறைவு’ – தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா சோனியா காந்தி? – ஒரு பார்வை

“ஒருவேளை இந்திய ஒற்றுமை யாத்திரையின் வெற்றி சோனியா காந்திக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சி இருக்கலாம். ஆனால், அவரில்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னவாகும்?” இந்திரா காந்தியின் மருமகள், ராஜீவ் காந்தியின் மனைவி, ராகுல், பிரியங்காவின் தாயார் இவையெல்லாம் தாண்டி நீண்ட காலமாக காங்கிரஸ் எனும் ஒரு பேரியக்கத்தின் தலைவராக இருந்தவர் என்றெல்லாம் அறியப்படும் சோனியா காந்தி தனது தீவிர அரசியல் வாழ்விற்கு விடை கொடுக்கப்போவதாக இன்றைய அவருடைய பேச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாத, விவாதங்கள் … Read more

திருமண விழா ஒன்றில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாக். நடிகை

மும்பை: பாகிஸ்தானில் திருமண விழா ஒன்றில் நாட்டு நாட்டு பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல், இந்தாண்டின் கோல்டன் குளோப் மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளை பெற்றது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி, நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த பாடலின் மெட்டுகளுக்கு மக்கள் ஆட்டம் போடும் வீடியோக்கள் … Read more

வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பின் குறைபாடே காரணம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

உதய்ப்பூர்: நீதிமன்றங்களில் வழக்குகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள சுகாதியா பல்கலைக்கழகத்தில் இந்திய சட்ட ஆணையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”இந்திய நீதிமன்றங்களில் 4.90 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த அளவுக்கு வழக்குகள் தேங்குவது எந்த … Read more

இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட போய் சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய நபர்: பீதியில் இரவெல்லாம் தவிப்பு

புலந்த்ஷாஹர்: இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்றவர், சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் பசேந்துவா கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால், குறிப்பிட்ட இடத்தில் வனத்துறையினரின் கூண்டு வைத்திருந்தனர். அந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்க வேண்டும் என்பதற்காக கோழி ஒன்றை கட்டி போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சிறுத்தையின் கூண்டுக்குள் இருந்த கோழியை பிடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், சிறுத்தையின் கூண்டுக்குள் சென்று கோழியை பிடித்தார். … Read more