திருப்பதி லட்டு பிரசாதம்; புதிய மாற்றம் கொண்டு வரும் தேவஸ்தானம்!

திருப்பதி லட்டு என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அதன் சுவை, மணம், தயாரிப்பு ஆகியவை தனி ரகம் என்று சொல்லத் தோன்றும். ஏழுமலையானை தரிசிப்பது பக்தி மயமான நிகழ்வு என்றால், லட்டு வாங்கி சுவைப்பது ருசிகரமான நிகழ்வு. இந்த பிரசாதத்திற்காகவே பலர் திருப்பதி செல்வது உண்டு. அதேசமயம் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கூட்டம் அலைமோதும் சூழல்களில் தவறாமல் லட்டு பிரசாதத்தை மட்டும் வாங்கி கொண்டு வந்து விடுவர். திருப்பதி பக்தர்கள் ஆந்திர … Read more

விவசாயிகள் உதவித் தொகையாக ரூ 16,000 கோடி வழங்குகிறார் பிரதமர் மோடி.. நாளை 8 கோடி வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது..!

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் 13வது தவணை உதவித்தொகையை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவில் புதிதாகக் கட்டப்பட்ட சிவமொக்கா விமான நிலையத்தைப் பார்வையிட உள்ள பிரதமர், மாநிலத்தின் பெல்காவி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். சிவமொக்காவில் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 300 பயணிகளை இந்த விமானநிலையம் கையாள முடியும். அத்துடன் விவசாயிகளுக்கான உதவித் … Read more

ஆந்திரா மாநிலம் குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் குப்பம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி உயிரிழந்துள்ளனர். கார்-லாரி மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விகாஸ் ரெட்டி. சாய் கிருஷ்ணா, பிரவீன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் போருக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

புதுடெல்லி: ‘‘உக்ரைன் போருக்கு தீர்வு காணும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது’’ என ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்து பேசிய பின் பிரதமர் மோடி கூறினார். ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸகால்ஸ் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் 4-வது முறையாக சந்தித்து கொண்டனர். இந்திய வருகை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஓலப் ஸகால்ஸ், ‘‘இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே நல்ல உறவு உள்ளது. … Read more

இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா, இலங்கை இடையேயான 7வது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி டெல்லியில் தொடங்கியது. 2 நாள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அரமானே, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னே ஆகியோர் தலைமை வகித்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டுப் பயிற்சியின் போது இருநாடுகளும் தங்களது அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இருதரப்பு ராணுவப் … Read more

குவியும் வாழ்த்துக்கள்..!! சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் இயந்திரங்கள் மூலம் அகற்றும் முதல் மாநிலம்..!!

சாக்கடைக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவது சமூக அநீதி என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், அந்த பணியை இயந்திரங்களின் மூலம் செய்ய பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாக்கடைக் கழிவுகளை முற்றிலும் ரோபோ இயந்திரங்கள் மூலமாக அகற்றும் முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் கழிவுகளை அகற்ற பண்டிக்கூட் (Bandicoot) என்ற ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தியதன் மூலம் இந்த பெருமையை கேரளா பெற்றுள்ளது. கழிவுகளை … Read more

மாணவர் தற்கொலை சம்பவங்கள் – தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை

ஹைதராபாத்: மும்பை ஐஐடி-யில் முதலாமாண்டு படித்த தர்ஷன் சோலங்கி என்ற குஜராத் மாணவர் கடந்த12-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். பட்டியலினத்தை சேர்ந்த இம்மாணவர் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்று பேசியதாவது: மும்பை ஐஐடி தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக சமீபத்தில் படித்தேன். … Read more

அடிப்பட்டு கிடந்த நாரைக்கு மறுபிறவி கொடுத்த இளைஞர்.. நண்பனாக மாறிய நாரை – பறவையின் பாசப்பிணைப்பு..!

அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாரையை மீட்டு இளைஞரொருவர் காப்பாற்றிய நிலையில், கடந்த ஒரு வருடமாக அந்த பறவை விட்டுப் பிரிய மனமின்றி, அவரை பின்தொடர்ந்து பறப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரீஃப் என்பவர் ஓராண்டுக்கு முன்பு, சாலையோரத்தில் காயமடைந்து கிடந்த நாரையை மீட்டு சிகிச்சை அளித்து, நாரை குணமாகும் வரை தனது வீட்டில் வைத்து, உணவளித்து வந்துள்ளார். இதனால், அந்த நட்பு மிகுந்த நாரை, ஆரிஃப் எங்கு சென்றாலும் நிழல் … Read more

ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் எம்ஜிஆரின் கொள்கை செத்து விட்டதா?.. எடப்பாடிக்கு கவிஞர் காசி முத்து மாணிக்கம் கேள்வி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதன் மூலம், எம்ஜிஆரின் கொள்கையும் செத்து விட்டதா என்று எடப்பாடி பழனிசாமிக்கு, கவிஞர் காசி முத்து மாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக வர்த்தகர் அணி சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமைதாங்கினார். இதில், இணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்எல்ஏ, முத்துச்செல்வி, துணை தலைவர் … Read more

ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி…?

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறக் கூடிய இம்மாநாட்டில், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி உரையாற்றினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி சீரழித்து வருகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது. இது காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சவாலான காலமாகும். எனது பயணம் பாரத் ஜோடோ யாத்திரையுடன் முடிவடைந்துவிட்டது. 2004 … Read more