மேகாலயா தேர்தல் 2023: வாக்குகளை பிரிக்கும் மம்தா; ராகுல் காந்தி சாடல்.!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகாலயாவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாஜக, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 … Read more

அதானி உடனான தொடர்பு குறித்து பிரதமர் பதில் கூறாதது ஏன்?: மேகாலயாவில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் சாடிய ராகுல்

ஷில்லாங்: ஒவ்வொரு மாநிலத்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்கி வருகிறது என்றும் ஒரே சித்தாந்தம் அனைத்து மாநிலங்களிலும் திணிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயாவில் பரப்புரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தலைநகர் ஷில்லாங்கில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். கர்நாடகாவில் சட்டமாக்கப்பட்டுள்ள மதமாற்ற தடைச்சட்ட மசோதா மற்றும் முண்டர்கள் மூலமாக தாக்குதல் வழியாக சமூக பிளவை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக … Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

சென்னை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய உள்துறை மந்திரி அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் … Read more

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!!

நீண்ட இழுபறிக்கு பிறகு நடைபெற்ற டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டெல்லி மாநகாரட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநாகாரட்சி பாஜக வசம் இருந்த நிலையில், அதை ஆம் ஆத்மி தட்டிப்பறித்தது. … Read more

பிரபல நடிகையை ரகசியமாக புகைப்படம் எடுத்த மர்ம நபர்கள்!!

பக்கத்து வீட்டு மாடியில் இருந்து நடிகை ஆலியா பட்டை புகைப்படம் எடுத்து வெளியிட்ட நபர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார். நடிகை ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளதால், ஆலியா நடிப்புக்கு தற்காலிகமாக இடைவெளி எடுத்துள்ளார். அவர் வீட்டில் இருந்து குழந்தையை கவனித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஆலியா, வீட்டில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தபோது, பக்கத்து … Read more

சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடு: எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டணி ‘பார்முலா’ என்னாகும்? அரசியல் தடைகளை உடைப்பது குறித்து முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரசின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரசின் கூட்டணி பார்முலா குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more

அக்னிவீர் திட்டத்தில் நுழைவுத்தேர்வு – திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் பேட்டி

அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முதல் கட்டமாக ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு நடத்தவிருப்பதாக ராணுவ ஆள்சேர்ப்பு முகமையின் திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் பேட்டியளித்துள்ளார். இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ”ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் … Read more

‘100 மோடி வந்தாலும் வெற்றி எங்களுக்கே’ – காங்கிரஸ் தலைவர் சூளுரை.!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனே திரிபுரா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி.) தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது. ஆனால் … Read more

தலைமைச் செயலகத்துக்கு சைக்கிளில் சென்ற பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ்..!

பீகார் தலைமைச் செயலகத்துக்கு சைக்கிளில் சென்ற அம்மாநில அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ், மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் தனது கனவில் வந்ததாகவும் தாமும் அவரும் சைக்கிளில் பயணித்து அவர் பிறந்த கிராமத்துக்குச் சென்றதாகவும் வினோத விளக்கம் அளித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சரான லாலு பிரசாத் யாதவ்வின் மகனான தேஜ் பிரதாப் யாதவ், பீகாரின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். காலை திடீரென பாதுகாவலர்களுடன் சைக்கிளில் தலைமைச் செயலகம் சென்ற … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பெஞ்ச் ‘பொதுக்குழு செல்லும்’ என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி … Read more