பட்ஜெட் 2023: பச்சை வால் நட்சத்திரமும் நிர்மலா சொன்ன ஒளிரும் நட்சத்திரமும்!

ஒன்றிய அரசின் 2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவரது உரையில் அவர், “ உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் இந்தியா. 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் இந்தியாவை உலக நாடுகள் ஒளிரும் நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளன” என்று கூறினார். ஒன்றிய அரசின் அமைச்சர் நாட்டை இவ்வாறு புகழ்ந்து கூறுவது வாடிக்கையான ஒன்று தான் என்றாலும் அவர் குறிப்பிட்ட ஒளிரும் நட்சத்திரம் என்ற வார்த்தை இன்றைய தினத்தில் முக்கியத்துவம் … Read more

Budget 2023: நல்ல செய்தி!! KYC செயல்முறை எளிதாகிறது, PAN அட்டைக்கு அதிக முக்கியத்துவம்

பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த மத்திய பட்ஜெட் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஆகையால், இந்த பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கும் அனைத்து துறைகளுக்கும் மிக அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் காகிதமில்லா வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது. … Read more

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடி அளிக்க திட்டம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9,000 கோடி அளிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 50 இடங்களை தேர்வு செய்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2023: 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடு ‘இந்தியா’ – நிதியமைச்சர்

2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே. நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்தபோது, “கடந்த பட்ஜெட்டுகல் அமைத்த அடித்தளத்தின்மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், தொழில்துறையினருக்கான … Read more

திருமலையில் அத்துமீறி மாட வீதிகளில் சுற்றி வந்த கார் – மீண்டும் தலைதூக்கிய பாதுகாப்பு பிரச்சினை

திருமலை: திருமலையில் மீண்டும் பாதுகாப்பு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. நிபந்தனைகளுக்கு மாறாக ஒரு கார், திருமாட வீதிகளில் நேற்று சுற்றி வந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள திருமலையில் உள்ள மாட வீதிகள் மிகவும் பவித்ரமாக, சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுகிறது. இந்த திருமாட வீதிகளில் பக்தர்கள் யாரும் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. விஐபிக்கள் கூட திருமாட வீதியில் தேர் நிறுத்தம் உள்ள இடத்தில் தங்கள் காரை நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கோயிலுக்குள் செல்வது வழக்கம். ஆனால், வயதான பக்தர்கள், … Read more

Budget 2023: நாட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட் 2023: இன்று நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனைத்து தரப்பினரும், சாமானியர்களும் பல வித சலுகைகளுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முக்கியமாக, வரி வகைகளில் பல வித சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, … Read more

நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது: * உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. … Read more

மத்திய பட்ஜெட் 2023: ரயில்வேத்துறையில் நிலவும் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமுமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே துறையினர் கோரிக்கைகள் என்னவாக இருக்கிறது? இதோ பார்ப்போம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக … Read more

கர்நாடகாவில் தனித்து போட்டி – ஆம் ஆத்மி அறிவிப்பு

பெங்களூரு: டெல்லி எம்எல்ஏவும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி சிங் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆட்சியை பார்த்து மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் 3 கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. ஊழல், வாரிசு அரசியல், தொலைநோக்கு இல்லாத திட்டங்கள் ஆகியவற்றால் அந்த கட்சிகள் மீது கோபம் கொண்டுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய மொஹல்லா கிளினிக் போன்று ‘நம்ம கிளினிக்குகளை’ பாஜக அரசு … Read more

2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லியில் இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, சற்றுநேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்துக்கு விமானப்படை லாரியில் பட்ஜெட் ஆவண நகல்கள் கொண்டு வரப்பட்டன நாடாளுமன்ற வளாகத்தில் … Read more