2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். பொருளாதார சவால்களை எதிர்நோக்கிய பட்ஜெட்டாகவும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல், 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் வரிக்குறைப்பு, வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களைக் கவரும் அறிவிப்புகளும் சலுகைகளும் பட்ஜெட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சமூக நீதித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு … Read more

காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக கர்நாடகா அரசு தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதர்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்து மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை … Read more

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்..!!

2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். பா.ஜ.க. தலைமையிலான அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான திட்டங்கள் இதில் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக ரூ.2.5 … Read more

இந்த அறிய நிகழ்வை இன்று முதல் 4 மாதங்களுக்கு வானில் பார்க்கலாம்..!!

சூரிய குடும்பத்தின் பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களை கூட கண்டறியும் ஜூவிகி என்ற தொலைநோக்கி மூலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பச்சை நிற வால் நட்சத்திரம் வரவுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடந்த 12-ந்தேதி சூரியனை கடந்து வந்துள்ளது. இது,இன்று (புதன்கிழமை) பூமிக்கு மிக அருகாமையில் வரும். இந்த அறிய நிகழ்வை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம்.கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதுகுறித்து நேற்று காலை விஞ்ஞானிகள் … Read more

ஆந்திராவின் புதிய தலைநகரமாகிறது விசாகப்பட்டினம் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த விஷயம்தான் தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: மார்ச் மாதம் 3, 4-ம் … Read more

பெண் சீடர் பலாத்காரம் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள்தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. வயது 81. அகமதாபாத் புறநகரில் உள்ள இவரது ஆசிரமத்தில்  சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண்  சீடராக இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.  இந்த வழக்கில்  ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். ஆசாராம் … Read more

ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சரை சுட்டு கொன்றது ஏன் ? எஸ்ஐ பரபரப்பு வாக்குமூலம்!!

ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டம் பரஜராஜ் நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில், நடைபெற்ற பிஜு ஜனதா தளம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சென்றார். காரில் இருந்து இறங்கிய அமைச்சர் மீது பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால் தாஸ், துப்பாக்கியால் சுட்டதில், அமைச்சரின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அமைச்சரை கவலைக்கிடமான நிலையில் மீட்டு சக … Read more

முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷன் காலமானார்..!

முன்னாள் சட்டத்துறை மந்திரியும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 97.மொரார்ஜி தேசாய் அரசில் 1977 முதல் 1979 வரை சட்ட மந்திரியாக பணியாற்றியவர்.பின்னர் அவர் 1980 இல் நன்கு அறியப்பட்ட NGO ‘Centre for Public Interest Litigation’ ஐ நிறுவினார். இந்த அமைப்பு அதன் தொடக்கத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பல குறிப்பிடத்தக்க பொது நல வழக்குகளை சமர்ப்பித்துள்ளது. சாந்தி பூஷனின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் … Read more

பொதுமக்கள் விருப்பத்தை பட்ஜெட் பூர்த்தி செய்யும் – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு நடுவிலும், பொதுமக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக மத்திய பட்ஜெட் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலையில் நாடாளுமன்றம் வந்தபிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டு நலனும், குடிமக்களின் நலனும்தான் முதல் என்ற குறிக்கோளுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதே தத்துவத்தை மையமாகக் கொண்டதாகவே மத்திய நிதியமைச்சர் … Read more

ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: ஆன்லைனில்  பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அரசு பெண் டாக்டர் முன் வாலிபர்  நிர்வாண போஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு சுகாதாரத்துறை சார்பில் இ சஞ்சீவினி என்ற ஆன்லைன் பரிசோதனைத் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம்  பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பத்தனம்திட்டா  மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஒரு பெண்  டாக்டர் வழக்கம்போல நோயாளிகளுக்கு ஆன்லைன்  பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். … Read more