பஞ்சாப் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம்; முதல்வர் பகவந்த் மான் காட்டம்.!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரியாக நியமிக்கப்பட்ட நரீந்தர் சிங் தலிவால், டிரான்ஸ்போர்ட்டர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக மாநில ஊழல் தடுப்பு பிரிவால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரி சட்ட விரோதமாகவும், தவறாகவும், தன்னிச்சையாகவும், உரிய நடைமுறையும் இல்லாமலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியது. இந்தநிலையில் சக சிவில் சர்வீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலத்தில் உள்ள அரசுப் பணியார்கள் … Read more

ரூபே கார்டு & குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைக்கு ரூ.2600 கோடி ஊக்கத்தொகை!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் வங்கிகளின் இணைய சேவைகளை விட அதிகளவில் UPI சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். மால்களின் உள்ள பெரிய கடை முதல், தெருவோர காய்கறி வியாபாரிகள் வரை எங்கு பார்த்தாலும் UPI பரிவர்த்தனைக்கான QR கோடுகள் போர்டினை காண முடிகிறது. இந்நிலையில், இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில், சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2600 கோடி ஊக்கத்தொகை வழங்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ரூபே … Read more

2022ம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 30,900 வழக்குகள் பதிவு: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

புதுடெல்லி: கடந்தாண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக  30,900 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 6,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2020ல் கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை … Read more

ஜோஷிமத் நிலவரம் | அரசு இடைக்கால நிவாரண நிதி அறிவிப்பு; என்டிபிசி-க்கு எதிராக மக்கள் போராட்டம்

ஜோஷிமத்: ஜோஷிமத் நகரில் நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்கள் விரிசல் விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, என்.டி.பி.சி-யை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் செயலாளர் ஆர். மீனாட்சி சுந்தரம், ”நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால், பலர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.1.5 லட்சம் இடைக்கால … Read more

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

டெல்லி: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். முன்னாள் அமைச்சர் கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார். மங்களூரு நகரில் நடந்த ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாரிக்கிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சாரிக் சொந்த ஊரான சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் … Read more

பிஹார் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: ஜன.20-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: பிஹாரில் நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், அவசர வழக்குகளாக வரும் 20-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் … Read more

யார் இந்த ஜிலேபி பாபா? 100 பெண்களுக்கு மேல்… நாட்டையே உலுக்கிய பயங்கரம்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏதேனும் ஒரு வகையில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. எங்காவது ஒரு மூலையில் அவலக் குரலும், கண்ணீர் கதையும் வெளியாகி நெஞ்சை உலுக்கி விடுகிறது. அந்த வரிசையில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் என்ற அடையாளத்துடன் ஒரு பெயர் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. ஜிலேபி பாபா… இதென்ன வித்தியாசமான பெயர்? எனக் கேட்பதை விட இவரது பின்னணி குறித்து அறிந்தால் இவ்வளவு மோசமான நபரா? என நடு … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஜனவரி.16-ம் தேதிக்குள் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரும் சோகம்.. ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. மூன்று வீரர்கள் உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில், மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (ஜன.10-ம் தேதி) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி, ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா … Read more

“நான் அன்றே எச்சரித்தேன்… இனி நமது பொறுப்பு…” – ஜோஷிமத் பேரிடர் குறித்து உமா பாரதி

ஜோஷிமத்: கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தராகண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒருநாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி தெரிவித்துள்ளார். பாஜவைச் சேர்ந்த உமா பாரதி, நிலவெடிப்பு காரணமாக மண்ணில் புதைந்துவரும் ஜோஷிமத் நகருக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளனர். இந்தக் கொள்கை வகுப்பாளர்கள் உத்தராகண்டை ஒருநாள் இல்லாமல் செய்துவிடுவார்களோ என்று … Read more