சாதி மற்றும் மொழியை பயன்படுத்தி பிரிவினை; ராகுல் காந்தி சாடல்.!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார். இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி … Read more

உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கானுக்கு 4வது இடம்

நியூயார்க்: உலக பணக்கார நடிகர்களின் பட்டியில் இந்திய நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். உலகின் பணக்கார நடிகர்களின் பெயர் பட்டியலை ‘வேர்டு ஸ்டேடடிக்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர்கள் ஜெர்ரி சீன்ஃபீல்ட் ஒரு பில்லியன் டாலருடன் முதலிடத்திலும். டைலர் பெர்ரி ஒரு பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், டுவைன் ஜான்சன் 800 மில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 770 மில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். மீதமுள்ள … Read more

மருத்துவமனைக்கு வந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்

ஹபானியா: பல் மருத்துவரான திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, பத்து வயது சிறுவனுக்கு வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார். திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா பொறுப்பேற்பதற்கு முன், ஹபானியா நகரில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவர் முதல்வராக பதவியேற்றதை அடுத்து அவர் தனது மருத்துவப் பணியில் இருந்து விலகினார். இந்நிலையில், சுகந்தா கோஷ் என்பவரின் 10 வயது மகன் அக்‌ஷித் கோஷுக்கு … Read more

ஆந்திரா முதல்வர் பிரிவினைவாதி.?- பிரபல பாடகரின் கருத்தால் சர்ச்சை.!

திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படும் இந்த விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், மோஷன் பிக்சர் பிரிவில் சிறந்த பாடலாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதாக கோல்டன் குளோப் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் … Read more

மும்பையில் உள்ள அம்பானி பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை..!

மும்பை: மும்பையில் உள்ள அம்பானி பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா குர்லா வளாகத்தில், திருபாய் அம்பானி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் லேண்ட்லைன் தொலைபேசி எண்ணுக்கு மர்ம போன் கால் வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அழைப்பை துண்டித்தார். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், … Read more

“இஸ்லாமியர்கள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” – பிருந்தா காரத்

புதுடெல்லி: இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறிய கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். மோகன் பாகவத் நேர்காணல்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அந்த அமைப்பின் பத்திரிகைகளான ஆர்கனைசர் மற்றும் பாஞ்சசன்யாவுக்கு சமீபத்தில் நேர்காணல் அளித்திருந்தார். அதில், ”எளிமையான உண்மை இதுதான் – ஹிந்துஸ்தான் ஹிந்துஸ்தானாகவே தொடர வேண்டும். நமது நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் … Read more

பஞ்சாப் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம்; முதல்வர் பகவந்த் மான் காட்டம்.!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரியாக நியமிக்கப்பட்ட நரீந்தர் சிங் தலிவால், டிரான்ஸ்போர்ட்டர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக மாநில ஊழல் தடுப்பு பிரிவால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரி சட்ட விரோதமாகவும், தவறாகவும், தன்னிச்சையாகவும், உரிய நடைமுறையும் இல்லாமலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியது. இந்தநிலையில் சக சிவில் சர்வீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலத்தில் உள்ள அரசுப் பணியார்கள் … Read more

ரூபே கார்டு & குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைக்கு ரூ.2600 கோடி ஊக்கத்தொகை!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் வங்கிகளின் இணைய சேவைகளை விட அதிகளவில் UPI சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். மால்களின் உள்ள பெரிய கடை முதல், தெருவோர காய்கறி வியாபாரிகள் வரை எங்கு பார்த்தாலும் UPI பரிவர்த்தனைக்கான QR கோடுகள் போர்டினை காண முடிகிறது. இந்நிலையில், இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில், சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2600 கோடி ஊக்கத்தொகை வழங்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ரூபே … Read more

2022ம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 30,900 வழக்குகள் பதிவு: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

புதுடெல்லி: கடந்தாண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக  30,900 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 6,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2020ல் கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை … Read more

ஜோஷிமத் நிலவரம் | அரசு இடைக்கால நிவாரண நிதி அறிவிப்பு; என்டிபிசி-க்கு எதிராக மக்கள் போராட்டம்

ஜோஷிமத்: ஜோஷிமத் நகரில் நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்கள் விரிசல் விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, என்.டி.பி.சி-யை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் செயலாளர் ஆர். மீனாட்சி சுந்தரம், ”நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால், பலர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.1.5 லட்சம் இடைக்கால … Read more