பேருந்து – டிரக் ஓட்டுனர்களிடையே இடையே தகறாறு.. கேரள எல்லையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

கேரள அரசு பேருந்து ஓட்டுனருக்கும் டிரக் ஓட்டுனருக்கும் இடையே தகராறு பல மணி நேரம் வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு, வாகன ஓட்டிகள் அவதி. தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வருகின்றன. திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் திடீரென உடைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் அந்த பகுதியில் ஏற்கனவே, பல நேரங்களில், பல மணி … Read more

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த காவல்துறை அதிகாரி!…

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த காவல்துறை அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி காவல் துறையில் மெட்ரோ காவல் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி. இவர் தனது 24 -வது வயதில் காவல்துறை பணியில் சேர்ந்தார். அப்போது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர மானியின் உடல் எடை நாளடைவில் அதிகரிக்க தொடங்கியது. ஆரம்பத்தில் இதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் நாளுக்குநாள் அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அவரின் … Read more

வரும் 1-ம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்..!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை … Read more

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலியான விவகாரம்: இந்திய மருந்து உற்பத்தித் துறை குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: இந்திய மருந்து உற்பத்தித் துறை நம்பிக்கையானது என்று வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: ”இந்திய மருந்து உற்பத்தித் துறை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மருந்துகளையும் மருந்து பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது. நமது நாட்டின் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நம்பத்தகுந்தவை. … Read more

கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியீடு

டெல்லி: கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவிகள் என பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இந்து பெண் கொடூர கொலை: சிறுபான்மையினரை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரை அரசு பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த தயா பீல் என்ற 40 வயது இந்து பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, தயா பீல் கொல்லப்பட்ட அவரது கிராமத்திற்குச் சென்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

ரிலையன்ஸ் குழுமம் தலைவரான முகேஷ் அம்பானி பதவியேற்று 20 ஆண்டுகள் முடிவு

மும்பை: ரிலையன்ஸ் குழுமம் தலைவரான முகேஷ் அம்பானி பதவியேற்றி 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் அவரின் தலைமையில் ரிலையன்ஸ் பெரும் வளரச்சி அடைந்துள்ளது. 2002 ரிலையன்ஸ் குழுமம்தின்  நிறுவனர் திருபாய் அம்பானி மரணம் அடைந்த பின்,  முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிருவாக இயக்குனர் மற்றும் சேர்மனாக, பதவியேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் ரிலையன்ஸின் வருவாய் ஆண்டுகளுக்கு 15% அதிகரித்துள்ளது. தற்போது 7.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிகர லாபம் ஆண்டுக்கு 16% அதிகரித்து, தற்போது ரூ 67,845 … Read more

எந்தெந்த நாட்டில் இருந்து வந்தால் பரிசோதனை கட்டாயம்?…

6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.   இந்த நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து … Read more

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புறப்படும் முன்பே RT-PCR பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு

புதுடெல்லி: சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தப் பரிசோதனை, இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்தப் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RT-PCR பரிசோதனை கட்டாயம்: சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT-PCR … Read more

மீண்டும் லாக்டவுன்?; பகீர் கிளப்பிய மத்திய சுகாதார துறை!

சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனையை வழங்கின. இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் … Read more