பிரியாணியில் எலும்புத் துண்டு இருந்ததால் போலீசை நாடிய நபர்.. மேனேஜர் மீது பாய்ந்த FIR!

குஸ்கா என்ற ப்ளைன் பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதில் தவறுதலாக சிக்கன் அல்லது மட்டன் பீஸ் இருந்தால் அசைவ பிரியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால் இப்படியான சம்பவம் ஒன்று சைவ பிரியருக்கு நடந்ததோடு, அது காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் தூபே என்பவர்தான் தனக்கு கிடைத்த சைவ உணவில் எலும்புத் துண்டு இருந்ததாக குறிப்பிட்டு உணவக உரிமையாளர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதன்படி, வெஜ் … Read more

'இந்திய ஒற்றுமை யாத்திரை பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளது' – மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன தினம், புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், மணிசங்கர் ஐயர், அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

'ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு' – துப்பாக்கியால் திணறிய போலீஸ் ; கலாய்க்கும் நெட்டிசன்கள்

உத்தரப் பிரதேசத்தின் கோத்வாலி மாவட்டத்தில் உள்ள சண்ட் கபிர் நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்,  காவல் துறை ஐஜி ஆர்.கே. பரத்வாஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது,கலிலாபாத் காவல் நிலையத்தில், சென்ற அவர், ரைஃபிள் துப்பாக்கியை லோட் செய்யுமாறு அந்த காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளரிடம் ஐஜி கூரியுள்ளார். ஆனால், அந்த உதவி ஆய்வாளர் துப்பாக்கி லோட் செய்ய தெரியாமல் திணறியுள்ளார்.  அதுமட்டுமின்றி, துப்பாக்கியின் குண்டை, குழாய் வழியாக வைத்து லோட் செய்ய வேண்டும் … Read more

ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை?

ஸ்ரீநகர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு? மத்திய சுகாதாரத்துறை தகவல்

உலகமெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,41,43,483 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,468 … Read more

கர்நாடகாவில் மராத்தி பேசும் கிராமங்களை சட்டப்பூர்வமாக இணைக்க நடவடிக்கை – மகாராஷ்டிர பேரவையில் தீர்மானம்

நாக்பூர்: மகாராஷ்டிரா, கர்நாடகா இடையேஎல்லைப் பிரச்சினை கடந்த 1957-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி, முன்பு பாம்பேவின் ஒரு பகுதியாக இருந்தது. மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக பகுதியில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் மராத்தி பேசுகின்றனர். அதனால் இந்தப் பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா கூறுகிறது. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழி அடிப்படையில் செய்த வரையறை தொடர்பாக மகாஜன் ஆணையம் கடந்த 1967-ம் ஆண்டு தாக்கல்செய்த … Read more

பெங்களூருவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டிசம்பர் 24,25,26 தேதிகளில் இந்தியா வந்த 39 பேருக்கு தொற்று

கர்நாடகா: வெளிநாடுகளில் இருந்து கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் இந்தியா வந்த பயணிகளில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் ஓமிக்ரான் பி.எப்.5 வைரஸ், பி.எப்.7 வைரசாக உருமாற்றமடைந்து சீனா மட்டுமில்லாது பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த உருமாறிய வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் … Read more

மூணாறில் அதிர்ச்சி – வனப்பகுதியில் அடுத்தடுத்து பலியான மூன்று குட்டி யானைகள்

இடுக்கி மாவட்டத்தில் மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து முன்று குட்டி யானைகள் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் சுற்றுலா தலமான மூணாறு வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. குறிப்பாக யானைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளன. மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் குட்டிகளுடன் வரும் யானைக் குட்டிகளை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் மூணாறு அருகே தேவிக்குளம் வனசரகத்திற்க்கு உட்பட்ட புதுக்கடி வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குட்டியானையும் தொடர்ந்து குண்டலா வனப்பகுதியில் … Read more

நடிகையை தொடர்ந்து இன்ஸ்டா பிரபலம் தற்கொலை!!

இன்ஸ்டா பிரபலமான சத்தீஸ்கரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராய்கரில் கெலோ விஹார் காலனியில் வசித்து வந்த லீனா நாக்வன்ஷி (22) என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து … Read more

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல -மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாள் மண்டலம் நேற்றுடன் நிறைவடைந்து மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி 453 பவுன் கொண்ட ஐயப்பனுக்கான ‘தங்க அங்கி’ கோயிலை அடைந்தது. அதற்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரும் பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு … Read more