8 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு தெலங்கானாவில் எம்பிபிஎஸ் இடம் 4 மடங்கு அதிகரிப்பு: முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்

திருமலை: தெலங்கானாவில் எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக 8 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். தெலங்கானா மாநிலத்தில் 8 புதிய மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் வகுப்புகளை பிரகதி பவனில் இருந்தபடி மெய்நிகர் சேவையில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தெலங்கானா வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். தெலங்கானா நாட்டிற்கு வழிகாட்டியாக மாறி வருகிறது. புதிதாக 8 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது பெருமைக்குரியது. … Read more

குஜராத் முதல் கட்ட தேர்தலுக்கு 1362 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

அகமதாபாத்:  குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கும் என மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது. குஜராத் முதல்வரும், பாஜவின் முதல்வர் வேட்பாளருமான பூபேந்திர படேல் அகமதாபாத்தின் காட்லோடியா தொகுதியிலும், ஆத் … Read more

மிசோரமில் பரிதாபம் குவாரியில் பாறை சரிந்து 8 தொழிலாளர்கள் பலி

அய்சால்: மிசோரம் மாநில கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேரை தேடும் பணி நடக்கிறது.மிசோரமின் ஹனதியால் மாவட்டத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இதில், 13 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் குவாரியில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. பணியில் இருந்த தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். ஆனால் அதிகளவில் பாறைகள் சரிந்து அவர்களை மூடியது. இதில் ஒருவர் … Read more

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அறைகள் முன்பதிவுக்கு இன்று ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு

திருமலை: திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கு அறைகள் முன்பதிவு செய்ய இன்று ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், ஆர்ஜித சேவை உள்ளிட்ட டிக்கெட்  டிசம்பர் மாதத்திற்கு  ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த  பக்தர்களுக்காக திருமலையில் அறைகள்  முன்பதிவு செய்யும் விதமாக 16ம் தேதி (இன்று) மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பழைய சாதனையை பாஜ முறியடிக்கும்: அமித்ஷா திட்டவட்டம்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் இதற்கு முன் உள்ள சாதனைகளை பாஜ முறியடித்து, அதிக தொகுதி, வாக்குகளை கைப்பற்றும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பிரசாரம் செய்தார். காந்திநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சனாந்த் சட்டமன்ற தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருந்தவர் கனுபாய் படேல். இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கனுபாய் … Read more

ரூ. 200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலினுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ரூ. 200 கோடி மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன் டெல்லி திகார் சிறையில் இருந்தபடி, தொழிலதிபர்களை மிரட்டி ரூ.200 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. விசாரணையின் போது, சுகேஷும், பாலிவுட் நடிகை ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதனால், ரூ.  200 கோடி மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு … Read more

மண்டல பூஜைக்காக இன்று நடை திறப்பு சபரிமலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்:  மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நாளை முதல் சபரிமலையில் மண்டல காலம்  தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் தற்போது பொறுப்பில் உள்ள மேல்சாந்தியான பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடை திறப்பார். இதன்பின் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் … Read more

கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது! சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது

திருவனந்தபுரம்: கேரளாவில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் பட்டியல் இது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பருவமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடும் என்பதால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் … Read more

தமிழக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீது 260 கிரிமினல் வழக்குகள்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி: எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 260 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 260 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், … Read more

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து 61,873 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு

மும்பை: தொடக்கத்திலிருந்தே ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீடு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்ந்து 61,873 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 18,403  புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.