டிவிட்டரை நம்பி மோசம் போனதாக புலம்பல் இந்தியாவில் 90 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

புதுடெல்லி: டிவிட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது ஊழியர்களில் 90 சதவீதம் பேரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனத்தை நம்பி மோசம் போனதாக நீக்கப்பட்ட ஊழியர்கள் புலம்புகின்றனர். உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50 சதவீதம் பேரை நீக்கம் செய்தார். செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவரது இந்த முடிவால், இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

ஆம் ஆத்மி மீதான புகார் பற்றி சிபிஐ விசாரணை கோரி சுகேஷ் ஆளுநருக்கு கடிதம்: சிறையில் தனக்கு அசம்பாவிதம் நடக்கலாம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியில் முக்கிய பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி உறுதி அளித்ததாகவும் இதற்காக கட்சிக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இது குறித்து … Read more

சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட வீடுகளை பார்க்க சென்ற பவன் கல்யாண்

ஆந்திராவில், சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட சென்ற நடிகர் பவன் கல்யாண், காரின் மேல் அமர்ந்து பயணித்த காட்சி, இணையத்தில் பரவி வருகிறது. குண்டூர் மாவட்டத்தில் வீடிழந்த மக்களை சந்திக்க, பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது, காரின் மேல் பவன் அமர்ந்திருக்க, காரை சுற்றி சிலர் தொங்கியபடி பயணித்தனர். இக்காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், சாலை விதிகளை மீறியதாக பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. Source link

மோர்பி பாலம் விபத்து குஜராத் அரசு பதிலளிக்க கெடு: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

அகமதாபாத்:  குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் 7 நாட்களில் அரசு, நகராட்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் மோர்பியில், பழமை வாய்ந்த தொங்கு பாலம் கடந்த 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு … Read more

சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

* 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம்  * அன்னதான கூடத்தில் கோயில் சேர்மன் ஆய்வு சித்தூர் : காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலை மோதியது. இதனால் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் கோயில் சேர்மன் ஆய்வு மேற்கொண்டார்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலாகும். இக்கோயிலில் சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, … Read more

சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-மாநில கமிஷன் தலைவர் பேட்டி

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கமிஷன் தலைவர் கூறினார்.  சித்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஆந்திர மாநில எஸ்சி, எஸ்டி கமிஷன் சேர்மன் விக்டர் பிரசாத் நேற்று வருகை தந்தார். அவருக்கு சங்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த … Read more

’பழி தீர்த்தேன்’ – நாக்கை வெட்டிய நபரை கொடூர கொலைசெய்த இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூருவில் 5 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து 38 வயது நபரை அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தலையில் கல்லால் அடித்து கொடூரமாக கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. உத்தரஹள்ளி அருகேயுள்ள ரவுகோத்லு பகுதியில் வசித்து வந்தவர் சந்தரமௌலி என்கிற சந்துரு எஸ்(38). இவரது தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது மகன் சந்துருவை மணி, லோகேஷ், விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து கொலைசெய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரில், ‘’கிட்டத்தட்ட … Read more

காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கேஜிஎஃப் – 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கி வைக்க, ட்விட்டர் நிறுவனத்திற்கு பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, … Read more

மதுபோதையில் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 4 பெண்கள்.. போலீசார் வழக்குப்பதிவு.!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், பெண் ஒருவரை மதுபோதையில் கண்மூடித்தனமாக தாக்கிய 4 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்தூரின் தேனு சந்தையில் உள்ள பூச்சி மருந்து கடையில் விற்பனையாளராக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவில், மதுபோதையில் இருந்த 4 பெண்கள், சாலையில் அவரை சூழ்ந்து தலைமுடியை பிடித்தும், பெல்ட்டால் அடித்தும், தரையில் தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான பெண், தன்னை எந்த காரணமும் இல்லாமல் நால்வரும் தாக்கியதாக … Read more

ஆந்திராவில் முதல்வர் பிரஜா சங்கல்ப யாத்திரை தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவு திருப்பதியில் முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

*எம்எல்ஏ தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் திருப்பதி : ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் பிரஜா சங்கல்ப யாத்திரையை தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று திருப்பதியில் எம்எல்ஏ  கருணாகர ரெட்டி தலைமையில் முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார்.  ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் திருப்பதி சென்னா ரெட்டி காலனி மாருதி … Read more