விதி மீறி இடமாற்றம் கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்: 5 லட்சம் பேர் பங்கேற்பு

புதுடெல்லி: விதிமுறைகளை மீறி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் நாளை ஒரு நாள் வங்கி பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட சில வங்கிகளில் வெளி முகமை (அவுட்சோர்ஸிங்) மூலம் பணியாளர்களை அமர்த்துவதை கண்டித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், நவம்பர் 19ம் … Read more

கவுதம் நவ்லகாவுக்கு வீட்டுச் சிறை – உத்தரவைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்ற என்.ஐ.ஏ-வின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மகாராஷ்ட்ராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா, தன்னை வீட்டுச் சிறையில் வைக்க அனுமதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் … Read more

நெல் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: வேளாண்துறை அறிவிப்பு

டெல்லி: முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளான (15.11.2022) அன்று  தவறிய விவசாயிகளுக்கு மீண்டும் (21.11.2022) வரை பயிர் காப்பீடு பதிவு செய்ய கூடுதலாக 4 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் உரத் தட்டுப்பாடு? – மத்திய அமைச்சகம் விளக்கம்!

தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட சிலப் பகுதிகளில் உர தட்டுப்பாடு உள்ளதாக வெளியான வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், ராஜஸ்தானில் சிலப் பகுதிகளில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சொல்லப்படுவதும் தவறு எனவும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரபி பருவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப … Read more

ராகுல் காந்தி படுகொலை செய்யப்படுவார்; மர்ம கடிதத்தால் பரபரப்பு.!

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள ஸ்ரீ குஜராத் ஸ்வீட்ஸ் கடைக்கு, நேற்று தபாலில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. ‘இந்தூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாத யாத்திரை நுழையும் நாளில், குண்டு வெடித்து ராகுல் காந்தியும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவர். 1984ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நினைவு படுத்தி கொள்ளுங்கள். ராகுல் காந்தி வருகையின் போது, அவரது அப்பாவும் முன்னாள் இந்திய பிரதமருமான … Read more

முதுகு தண்டுவடத்தில் காயமடைந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி மரணம்; சட்டீஸ்கரில் ஒரு மாதத்தில் 3 வீரர்கள் சாவு

ஜாஷ்பூர்: முதுகு தண்டுவடத்தில் காயமடைந்த சட்டீஸ்கர் கபடி வீரர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், மாநிலத்தில் ஒரு மாத இடைவெளியில் 3 வீரர்கள் காயமடைந்து இறந்ததாக கூறப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கபடி போட்டியின் போது முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயம் அடைந்த சமரு கெர்கெட்டா (28) என்ற கபடி வீரர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட கடந்த ஒருமாதமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி … Read more

53 வயது நபரின் சிறுநீரகத்தில் கால்பந்து சைஸ் கட்டி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

ஹைதராபாத்திலுள்ள ஆசிய நெப்ராலஜி மற்றும் யூரோலஜி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் 53 வயது நபரின் சிறுநீரகத்திலிருந்து கால்பந்து சைஸ் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர். வியாழக்கிழமை நடந்த இந்த அறுவைசிகிச்சையை டாக்டர் மல்லிகர்ஜூனா சி, டாக்டர். டைஃப் பெண்டிகேரி மற்றும் டாக்டர் ராஜேஷ் கே. ரெட்டி ஆகிய சிறுநீரக நிபுணர்கள் அடங்கிய குழு வெற்றிகரமாக முடித்திருக்கிறது. கடப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றில் வீக்கம் ஏற்படவே மருத்துவ பரிசோதனைக்காக AINU மருத்துவமனையை அணுகியிருக்கிறார். பரிசோதனை செய்து பார்த்ததில் … Read more

இனிப்பு கடை வாசலில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 8-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கிய நடைபயணம் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தை கடந்து மகாராஷ்டிராவில் நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில் ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தை எழுதியவர்கள் யார்? கடை வாசலில் … Read more

இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவை உருவாக்க கோரி போராட்டம்.. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல்!

ஹரியான மாநிலம் குருகிராமில், இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவை உருவாக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட முயற்சித்ததை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர் போலீசார் மீது கல் வீசியதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் காயமடைந்த நிலையில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். Source link

ரூ.1,000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம், ஜார்கண்ட் முதல்வரிடம் 9 மணி நேரம் விசாரணை; ராஞ்சி அமலாக்கத்துறை ஆபீஸ் முன் நேற்றிரவு பரபரப்பு

ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தியது. இந்நிலையில் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ராஞ்சியில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகம் முன் … Read more