முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20% பேர் பெண்களாக இருப்பர்: இந்திய கடற்படை தகவல்

புதுடெல்லி: முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20% பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை வந்த விண்ணப்பங்களில் தகுதியானோரை அலசி ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்திய கடற்படை இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதேபோல் விமானப்படையில் சேர இதுவரை 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவலும் வெளியாகியுள்ளது. இன்று மாலையுடன் விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு பெறுகிறது. 20% பெண்கள்: இந்நிலையில், இந்திய கடற்படை தான் இதுவரை பெற்ற விண்ணப்பங்களில் ஏற்கத்தக்க தகுதியுள்ளவற்றில் 20% … Read more

டெல்லி விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம் – நடுவானில் நடந்தது என்ன?

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியயதாவது: விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அவசரநிலை … Read more

அக்னிபத் திட்டத்தின் முதல் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவர்-இந்திய கடற்படை அறிவிப்பு

இந்திய கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் முதல் batch-ல் 20 சதவிகிதம் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர கடந்த ஒன்றாம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு மூவாயிரம் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்களுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

வரலாற்றில் முதன்முறையாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில்; ஒரேநாளில் ரூ. 6.18 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதன்முறையாக ஒரேநாளில் ரூ. 6.18 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. வழக்கமாக ஜூன் 2வது வாரத்திலேயே பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். ஆனால் இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் தொடங்கியும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் திருமலை முழுவதும் பக்தர்கள் … Read more

பழ வியாபாரியின் வேடிக்கையான வியாபார உத்தி.. விழுந்து விழுந்து சிரிக்கும் இணையவாசிகள்!

சந்தைகளில், சாலைகளில் காய்கறி பழங்கள் விற்கும் வியாபாரிகள், விதவிதமாக பேசி, பாடல்களாக பாடி மக்களை கவர்ந்து வியாபாரம் செய்வது வழக்கம். அந்த வகையில் பழ வியாபாரி ஒருவர் தன் கடையில் இருக்கும் பழங்களை விற்க வித்தியாசமான, வேடிக்கையான செயல்களை செய்த வீடியோ ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத பழ வியாபாரி ஒருவர், தள்ளுவண்டியில் பழங்களை வைத்து வேடிக்கையான முறையில் விற்பதைக் காணலாம். ஒவ்வொரு முறையும் பழங்களை வெட்டி காண்பிக்கும் … Read more

ஸ்வப்னாவுக்கு மிரட்டல்… அமலாக்கத்துறை சம்மன்: யார் இந்த சாஜ் கிரண்!

கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். வாக்குமூலத்தை அடுத்து ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல் செய்தும், கருப்புக்கொடி … Read more

விவோ செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

சீனாவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சீனாவை சேர்ந்த நிறுவனங்களின் பூர்வீகத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று காலை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஜியோமி நிறுவனமும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Source link

அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள்; இந்திய கடற்படை

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வாகும் பெண்கள் பல இடங்களில் கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இந்துக்கடவுள் உள்ள நியூஸ்பேப்பரில் அசைவம் மடித்து கொடுக்கிறார்’- கைது செய்த உ.பி போலீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாம்பல் என்ற பகுதியில் ஹோட்டல் நடத்திவந்த ஒருவர், `வேண்டுமென்றே இந்துக் கடவுள்கள் படம் பதிந்த நியூஸ்பேப்பரில் சிக்கன் வைத்து மடித்துக்கொடுத்தார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உ.பி.யை சேர்ந்த தலிப் ஹூசைன் என்பவர், தனது கறிக்கடையில் கறிகளை கடவுள் படம் இருக்கும் நாளிதழில் வைத்து மடித்து விற்பதாக இணையம் வழியாக சிலர் பதிந்திருந்தனர். அவர் வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி அவரது புகைப்படத்தையும், அவருடைய கடையிலிருந்த புகைப்படத்தையும் சிலர் … Read more

பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

பீமவரம்: ஆந்திர மாநிலம் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, ரூ.3 கோடியில் 30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர், தெலுங்கில் தனது உரையை தொடங்கினார். இதனை கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: … Read more