இன்டர்போல் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு உலகளாவிய பதிலடி

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள், தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு இந்த உலகம் பாதுகாப்பான புகலிடமாக இருக்க முடியாது. அதற்கு உலகளாவிய பதிலடி தேவை’ என இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். சர்வதேச அளவில் விசாரணை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இன்டர்போல் அமைப்பு. இந்த அமைப்பில் 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர்போல் அமைப்பின் 3 நாள் பொதுச் சபை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை … Read more

கோதுமை, பருப்பு, உளுந்து உட்பட 6 தானியத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு

புதுடெல்லி: கோதுமை, கடுகு உள்ளிட்ட 6 தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி ஒன்றிய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 2022-23 பயிர் செய்யும் ஆண்டு (ஜூலை – ஜூன்) மற்றும் 2023-24 சந்தைப்படுத்துதல் பருவத்தில் (ஏப்ரல் – மார்ச்) 6 ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து தானியங்களை அரசு கொள்முதல் செய்யும் … Read more

சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு 3 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய தீவிரவாத அமைப்புகள், ஆதரவாளர்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள், பிரபல தாதாக்கள் ஆகியோர் இடையே வளர்ந்து வரும் தொடர்பு குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி டெல்லி காவல்துறை பதிவு செய்த 2 வழக்குகளின் அடிப்படையில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் சமீபத்தில் என்ஐஏ சோதனை … Read more

உடலை கத்தியால் கீறி, மசாலா தடவி ரசித்த கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை முகமது ஷாபி, பகவல் சிங், லைலா  ஆகியோர் கத்தியால் கீறி கறி மசாலா தடவி அவர்கள் துடிப்பதை  பார்த்து ரசித்த கொடூர தகவல் விசாரணையில் தெரிந்துள்ளது. கேரள  மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, கேரளாவை சேர்ந்த ரோஸ்லி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பகவல் சிங், லைலா, ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில்  விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில், நாளுக்கு நாள்  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. … Read more

தன் வர்ஷா காப்பீட்டு திட்டம்: எல்ஐசி அறிமுகம்

மும்பை: எல்ஐசி நிறுவனம், தன் வர்ஷா என்ற புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  இதுகுறித்து எல்ஐசி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம் ‘தன் வர்ஷா’ என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் கடந்த 17ம் தேதி முதல் அமலில் உள்ளது. பங்குச்சந்தை சாராத, லாப பங்களிப்பு அல்லாத, தனி நபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டு திட்டமாக இது உள்ளது. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால், குடும்பத்தினருக்கு … Read more

‘ஓஆர்எஸ்’ தந்தை என புகழப்பட்ட டாக்டர் திலீப் காலமானார்!

1934-ல் மேற்கு வங்கத்தில் பிறந்த டாக்டர் திலீப் மஹாலனாபிஸ் கொல்கத்தா மற்றும் லண்டனில் படித்தார், மேலும் 1960 களில் கொல்கத்தாவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான சர்வதேச மையத்தில் சேர்ந்தார். அங்கு அவர் மருத்துவர்கள் டேவிட் ஆர் நளின் மற்றும் ரிச்சர்ட் ஏ கேஷ் ஆகியோருடன் இணைந்து வாய்வழி மறுசீரமைப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவர்களுடைய தீவிர முயற்சியால் ‘ஓரல் ரீஹைட்ரேஷன் சொலூஷன்’ (ஓஆர்எஸ்) என்றழைக்கப்படும் உப்பு கரைசல் கண்டுபிடிக்கப்பட்டது. ஓஆர்எஸ் … Read more

கேதார்நாத் அருகே யாத்ரிகர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது..!

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், விமானி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து 5 யாத்ரிகர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக,  Garu Chatti பள்ளத்தாக்கு பகுதியில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். Source link

புதுச்சேரியில் தமிழ்வழியில் மருத்துவ படிப்பு கவர்னர் தமிழிசை உறுதி

புதுச்சேரி: புதுவையில்  கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி: புதுச்சேரியில் தமிழ்வழியில் மருத்துவ படிப்பை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். முதல்வரோடு ஆலோசனை செய்து குழு அமைக்கப்பட்டு முதல் முயற்சியாக புதுச்சேரியில் தமிழ்வழி மருத்துவ படிப்பு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு குழு அமைக்கப்பட்டு 6 மாதத்துக்குள் மருத்துவகல்வி  புத்தகங்கள் தமிழில் தயாரிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் எந்த மொழியையும் திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தொழிற்கல்வியைக்கூட தாய்மொழியில் படிக்க ஏற்பாடு … Read more

கொரோனா: பீதி கிளப்பும் புது வைரஸ்

புதுடெல்லி: ஒழிந்து விட்டதாக கருதப்படும் கொரோனா பரவல், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நாடுகளில் வேகமாக பரவி, மக்களை தாக்குகிறது. ஒமிக்ரான் வைரசில் இருந்து உருமாற்றம் பெற்று உருவானதுதான் பிஏ-5 வைரஸ். இப்போது, இந்த வைரஸ் பிஎப்-7 என்ற புதிய வைரசாக உருமாற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவில் ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குஜராத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாகி … Read more

ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்பட்டு தன் ரத்தத்தையே விற்க முயன்ற சிறுமி! – சிக்கியது எப்படி?

மேற்குவங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்பட்டு தனது ரத்தத்தை விற்க சிறுமி ஒருவர் துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஸ்மார்ட்போன் ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கொரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து மாணவர்களிடையே செல்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஆசையின் தொடர்ச்சியால் குடும்பத்தின் வறுமை காரணமாக தனது ரத்தத்தை விற்று ஸ்மார்ட்போன் வாங்க முயற்சித்துள்ளார் 16 வயது சிறுமி. தாபானைச் சேர்ந்த சிறுமி, … Read more