மக்களிடம் வரிவசூல் செய்வதில் மோடி ஒரு ‘பிக்பாக்கெட்’

ஐதராபாத்: ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் மா.கம்யூ கட்சி சார்பில் தேசப் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இதில் மா.கம்யூ கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏழை மக்களிடம் இருந்து ஒன்றிய அரசு ரூ.2 லட்சம் கோடி வசூல் செய்கிறது. பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட்; அவர் ஜிஎஸ்டி முறையில் மக்களின் பாக்கெட்டில் ஓட்டை போடுகிறார். … Read more

ச்சைக்…! சட்டசபையில பாஜக எம்எல்ஏக்கள் செஞ்ச காரியத்தை பாருங்க!

உத்தர பிரதேச மாநிலத்தில், சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏக்கள் ஆன்லைன் ரம்மி விளையாடியதும், புகையிலை பொருட்களை பயன்படுத்தியதும் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சபை நடவடிக்கையின் போது, பாஜக … Read more

அழவும் இல்லை; உடல் அசைவும் இல்லை; வாய் மூலம் சுவாசிக்க வைத்து குழந்தை உயிரை காப்பாற்றிய டாக்டர்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

ஆக்ரா: பிறந்த குழந்தைக்கு வாய் மூலம் சுவாசிக்க வைத்து அந்த குழந்தையை காப்பாற்றிய உத்தரபிரதேச மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ெபண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தவுடன் பல நிமிடங்கள் ஆகியும் அழவில்லை; எவ்வித உடல் அசையுமின்றி இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவ குழுவினர், அந்த குழந்தைக்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். இருந்தாலும் கூட அந்த குழந்தையானது அசையவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்த … Read more

8 மாதக்குழந்தை தொண்டையில் சிக்கிய நெயில் கட்டர் – அறுவைசிகிச்சையில் போராடிய மருத்துவர்கள்!

மகாராஷ்டிராவில் 8 மாத குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது நெயில் கட்டரை விழுங்கியது. அதனை மருத்துவர்கள் மிகுந்த சிரத்தைக்குப்பிறகு அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி திங்கட்கிழமை 8 மாத குழந்தை 5 செ.மீ நீளமுள்ள நெயில் கட்டரை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அதை விழுங்கிவிட்டது. அதனை கவனித்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அத்கோனிலுள்ள டாக்டர் வசந்த்ராவ் பவார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட … Read more

500 ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனை.. மனைவியை பயமுறுத்திய கணவர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் மேற்கு வீர்சாவர்க்கர் மார்க் லஷ்மி நிவாஸ் என்ற கட்டித்தில் வசித்து வந்தவர் ராம்ஜி சர்மா (36). இவரது மனைவி சாந்தினிதேவி (26). ராம்ஜி சர்மா பயந்தரில் உள்ள துணி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மனைவி சாந்தினி தேவியிடம் புதிதாக துணி வாங்க ரூ.2 ஆயிரம் கொடுத்து இருந்தார். பின்னர், அதில் 500 ரூபாயை தனக்கு திருப்பி தருமாறும் சில நாட்கள் கழித்து தருவதாக சாந்தினி தேவியிடம் தெரிவித்தார். … Read more

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்: அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டிருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் … Read more

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10 ஆயிரம் பேர் தங்கும் விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன என திருமலை தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சூப்பாரெட்டி பேட்டியளித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2014-க்கு பின் தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்க கூடாது என முடிவு செய்யப்பட்டதாக சுப்பு ரெட்டி தெரிவித்தார். திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை … Read more

இந்தியாவில் 5 ஜி சேவை: அக்.1இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அன்று இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் … Read more

தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பிஎஃப்ஐ சதி திட்டம்: என்ஐஏ

கேரளா: தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சதி திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். 15 மாநிலங்களில் 93 இடங்களில் … Read more

மாணவர்களுக்காக தனி ஆளாக பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர்: வைரலாகும் வீடியோ

தனி ஆளாக தனியார் பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர் ஒருவரது வீடியோ வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியரின் செயல் அப்பகுதியில் பெரும் செய்தியாக பேசப்பட்டு, பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி தனியாக போராடிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பஸ் பாஸ், அரசு பேருந்தில் அதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மாத கால கட்டணம் செலுத்தி வாங்கப்படுகிறது. தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள … Read more