ஊரைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்ட தலித் சமூகத்தினர்… ஜார்க்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வுருகிறது. இந்த நிலையில், தமது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்கள் நிலக்கரி சுரங்கத்தை ஹேமந்த் சோரன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க, இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அண்மையில் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் எந்த நேரமும் முதல்வர் பதவியை … Read more

கனமழை காரணமாக பெங்களூரு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள மராத்தல்லி-சில்க் போர்டு சாலையில் ஆறு போல் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடியாததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Source link

பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிறுதானிய கொள்முதல் இலக்கு இரட்டிப்பு; மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் கொள்முதலை இரட்டிப்பாக்கவும் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் வேளாண் பருவம் என்பது ஜூலை மாதம் தொடங்கி ஜூனில் நிறைவடைகிறது. இதில் கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்திலும், அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலம் ரபி பருவமாக உள்ளது. கரீப் பருவ சாகுபடி பணிகள் தென்மேற்கு … Read more

இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பசு பரிதாபமாக உயிரிழப்பு!

கருவுற்றிருந்த பசுமாட்டை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கி வன்கொடுமை செய்ததில் பசுமாடு உயிரிழந்த கொடூர சம்பவம் வங்காளத்தில் நடந்தேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வட சந்தன்பிடி பகுதியிலுள்ள நாம்கானா ப்ளாக்கில் வசித்து வருபவர் ப்ரத்யுத் புயியா. 29 வயதான இவர்மீது அண்டை வீட்டுக்காரர் ஆர்த்தி புயியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நள்ளிரவில் தங்கள் வீட்டிற்குள் பின்னால் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுமாட்டை … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார். இத்தாலியில் வசித்து வந்த பாலோ மைனோ அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 90 வயதை தாண்டிய தனது தாயாரை காண கடந்த வாரமே சோனியா காந்தி இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி சனிக்கிழமை பாலோ மைனோ காலமானார். ஞாயிற்றுகிழமை அவரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி சடங்கில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். சோனியாகாந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் … Read more

வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை.. பாஜக மகளிரணி நிர்வாகி கைது..!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை செய்த புகாரில் பாஜக மகளிரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா, தனது வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த சுனிதா என்ற பெண்ணை கொடுமையாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த வாரம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பணிப் பெண், மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் சீமாவை கைது செய்த … Read more

பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளம் உறவு பீகாரை போல் மணிப்பூரிலும் முறிவு? செப். 3ல் நடக்கும் தேசிய செயற்குழுவில் முடிவு

கவுகாத்தி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்  கட்சி விலகியது. அதனால் பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி  முறிந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி  அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி … Read more

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 13.5% உயர்வு!

2022-23 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 36.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் இடையிலான முதல் காலாண்டில் … Read more

பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி ‘ஐஸ்’ போதை பொருள் பறிமுதல்

இம்பால்: பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த ரூ.50 கோடி மதிப்பிலான  ‘ஐஸ்’ போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான … Read more

’என்னை திருமணம் செய்துகொள்’.. மறுத்த காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞரும் விபரீத முடிவு!

மத்திய பிரதேசத்தில் திருமண புரோபசலை நிராகரித்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் கவலைக்கிடமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்திலுள்ள இந்திரா சாகர் டேம் கிராமத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர் பக்கத்து கிராமத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது கிராமத்திலுள்ள 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அணுகியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பப்லு திங்கட்கிழமை அந்த … Read more