குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் 64 காங்கிரஸ் தலைவர்கள் விலகல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்தவரும் கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவருமான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடர்பாக அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் … Read more

மும்பையில் பிரபலமான 14 அடி உயர லால்பாக்-சா-ராஜா விநாயகரை வழிபட திரண்ட பக்தர்கள்!

மும்பையில் லால்பாக்-சா-ராஜா என்று அழைக்கப்படும் 14 அடி உயர விநாயகர் சிலையை பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டதால் விநாயக சதுர்த்தி விழா மீண்டும் உற்சாகத்துடன் களை கட்டியுள்ளது. 2 ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை நகர மக்கள் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகின்றனர். வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதுடன் இனிப்புகளையும் படையலிட்டு வருகின்றனர். மும்பையின் கணேஷ் மண்டல் லால்பாக்-சா-ராஜா பிரம்மாண்டமான விநாயகரை வழிபட ஏராளமானோர் வருகின்றனர். 1934 முதல் மிகப்பழைய கணபதி சிலையாகவும் மிகப் … Read more

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி: ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம் என விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் என்றும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு திறந்து வைத்த அண்ணா கேன்டீன் மீது தாக்குதல்

குப்பம்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பஸ் நிலையம் அருகே கட்சி சார்பில் ‘அண்ணா கேன்டீனை’ அவர் திறந்து வைத்தார். ஆனால், அவர் திறப்பு விழா நடத்துவதற்கு முதல் நாள் இரவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் பரத் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், அங்கிருந்த பேனரை கிழித்து, அண்ணா … Read more

போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதால் ஆத்திரம் பஞ். துணை தலைவரை கொன்ற மாவோயிஸ்ட்: தெலங்கானாவில் பதற்றம்

திருமலை: தெலங்கானாவில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதாக ஆத்திரமடைந்த மவோயிஸ்டுகள், பஞ்சாயத்து துணை தலைவரை கடத்திக்கொன்று சடலத்தை கிராமத்தில் வீசினர். மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கடிதம் வைத்திருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கொத்தகூடம் மாவட்டம், செர்லா மண்டலம், குர்னப்பள்ளி கிராம பஞ்சாயத்து துணை தலைவர் இர்பா ராமாராவ். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்டு இயக்கத்தை  சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். இரவு நேரத்தில் அவரது மனைவி கனகம்மாவை எழுப்பி, ராமராவை தங்களுடன் அழைத்து … Read more

கணவரின் ஆபிஸுக்கு சென்று திட்டுவது கொடுமைப்படுத்துவதற்கு சமம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் அரசு ஊழியராக உள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ராய்ப்பூரைச் சேர்ந்த 34 வயது கைம்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண் மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்தியதோடு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நபர் ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் … Read more

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை – டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி காவல்துறையின் தலைமையகத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்தக் கூட்டத்தின்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா விவாதித்தார். Source link

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்முவில் காங்கிரசார் கூண்டோடு ராஜினாமா 64 பேர் விலகினர்

ஜம்மு: ஜம்முவில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய கட்சியை தொடங்க உள்ளதாக இவர் அறிவித்துள்ளார். இந்நிலையில்  காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜம்முவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஜம்முவில் 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் உயர்வு – 2021-ல் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு

புதுடெல்லி: கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 15.3% அதிகம். இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. … Read more

ஆட்சி கலைகிறதா? செப்.,3ல் காத்திருக்கும் பரபரப்பு… தட்டி தூக்கப் போகும் கே.சி.ஆர்!

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலம் உருவான 2014ல் இருந்து தற்போது வரை சந்திரசேகர ராவ் தான் முதல்வராக இருக்கிறார். கடந்த 2018 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென பதவி விலகிய கே.சி.ஆர், ஆட்சி கலைப்பிற்கு வித்திட்டார். இதையடுத்து நடந்த தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் மக்களின் பேராதரவை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார். இதுவொரு தேர்தல் யுக்தி என்று பேசப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு … Read more