2014 முதல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 8 ஆண்டில் எதிர்கட்சி ஆண்ட மாநிலங்களில் நடந்தது என்ன? 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல்

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல் நடப்பதால் பாஜக தனது வியூகங்களை வகுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் மத்தியில் … Read more

பறவை மீது ஏறி தப்பிய சாவர்க்கர்?; பள்ளி மாணவர்கள் ஷாக்!

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 1883ம் ஆண்டு பிறந்தவர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்ட வீரர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து இருந்தாலும், 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார். இதன் பின்னணியில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என கடந்த பல ஆண்டுகளாகவே தகவல் பரவி வருகிறது. அப்படி இருக்கையில், சாவர்க்கரை வீர புருஷனாக மாற்றும் முயற்சியை பாஜக கடந்த சில … Read more

நீட் தேர்வின் போது உள்ளாடையை அகற்ற வைத்த மாணவிக்கு செப்.4-ல் மறுதேர்வு

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு, கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள ஆயூர் மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவிகளில் ஒருவரை ‘மெட்டல் டிடெக்டர்’ கொண்டு சோதனை நடத்தியபோது, அவரது உள்ளாடையில் இருந்த கொக்கியை ‘மெட்டல் டிடெக்டர்’, ‘பீப் ‘ஒலி எழுப்பியது. இதையடுத்து அந்த மாணவி தேர்வு எழுத வேண்டுமானால், உள்ளாடையை அகற்றியாக வேண்டும் என்று … Read more

வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நபர் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 2021 ஏப்ரல் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப் பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் … Read more

தெலுங்கானா மாநிலம் டேங்கர் லாரி விபத்து: குடம், குடமாக பெட்ரோலை பிடித்துச் சென்ற மக்கள்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான நிலையில் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்துள்ளது. லாரியிலிருந்து பெட்ரோலை குடம், குடமாக  போட்டிப் போட்டு அப்பகுதி மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.

உடலின் மீதேறி ஒய்யாரமாக படமெடுத்து நின்ற நாகப்பாம்பு..அசையாமல் கட்டிலில் படுத்திருந்த பெண்

பாம்பு என்றதுமே படையே நடுங்கும் என்ற சொற்றொடர்தான் பாம்பு தொடர்பான வீடியோக்கள் சமூல வலைதளங்களில் பார்க்கும் போது நினைக்க வைக்கும். ஆனால் வயலில் வேலை பார்த்து முடித்துவிட்டு ஆசுவாசமாக படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஒரு நாகப்பாம்பு ஒன்று தலையை தூக்கி படமெடுத்து நின்றிருந்த காணொலி காண்போரின் விழியை பிதுங்கச் செய்திருக்கிறது. கர்நாடகாவின் கல்புர்கி அருகே உள்ள மல்லபா கிராமத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பங்கம்மா ஹனமந்தா என்ற பெண் தனது விவசாய வேலைகளை முடித்துவிட்டு வயல்வெளியில் … Read more

முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதிநீக்கப் பிரச்சினை – ஜேஎம்எம், காங். எம்எல்ஏக்களை பாதுகாக்க தீவிர முயற்சி

ராஞ்சி: முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கப் பிரச்சினையால் ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். 2021 மே மாதம் ராஞ்சியின் அன்காரா வட்டத்தில் 0.88 … Read more

நொய்டா இரட்டை கோபுர இடிப்பு சம்பவம்..!- சேதமடைந்த பக்கத்து கட்டிடங்கள்..!

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது . இதன் விளைவாக இந்த கட்டிடத்திற்கு அருகே உள்ள சில கட்டிடங்களில் ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் அதிர்வினால் சேதமடைந்ததாக கூறபடுகிறது. இந்த கட்டிடத்திற்கு அருகே உள்ள 10மீட்டர் சுவரும் கண்ணாடி ஜன்னல்களும் இதனால் சேதமடைந்தாக இந்த கட்டிட இடிப்பு கண்காணிப்பாளர் டிசிபி ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதை கண்காணிக்கும் பொறுப்பு நிர்வாகிகள் ஸெஇதியுஆலர்கலிடம் தெரிவிக்கையில் “ இந்த கட்டிட இடிபாட்டால் சுமார் 55,000 டன் கட்டிட … Read more

போதை பார்ட்டியில் மரணமடைந்த பாஜக நடிகை; உதவியாளருடன் ரகசிய மனைவியாக வாழ்ந்தது அம்பலம்.! குடியிருப்பு ஆவணத்தில் பகீர் தகவல்

குர்கிராம்: போதை பார்ட்டியில் மரணமடைந்த பாஜக நடிகை சோனாலி, தனது உதவியாளருடன் ரகசிய மனைவியாக வாழ்ந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் அம்பலமாகி உள்ளது. இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். அரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த திங்கள்கிழமை இரவு கோவாவில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். போதை பார்ட்டியின் போது சோனாலி போகத்துடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் … Read more

சீன எல்லையின் மலைப் பகுதிகளில் இலகு ரக பீரங்கி வாகனம், ட்ரோன்களை பயன்படுத்த இந்திய ராணுவம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் நிலவுகிறது. எதிர்காலத்தில் இந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி வாகனங்களை இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் 40 முதல் 50 டன் எடை உள்ளன. சில பீரங்கி வாகனங்கள் கைலாஷ் மலைப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பீரங்கி வாகனங்கள் குறிப்பாக சமவெளிப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் போர் நடவடிக்கைகளுக்காக … Read more