ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்களுக்கு தடை – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்கள்வைக்க உடனடி தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். வரும் 2027-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்த மாநிலமாக ஆந்திரா இருக்கும் என அவர் உறுதி அளித்தார். ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய பிரபல பார்லே நிறுவனத்துடன் நேற்று ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்நிகழ்ச்சி யில் கலந்துக்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது, திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் … Read more

உச்ச நீதிமன்ற 49வது தலைமை நீதிபதி: பதவியேற்றார் உதய் உமேஷ் லலித்

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உதய் உமேஷ் லலித் பதவி ஏற்றார். உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித் என்பவரை நியமிக்க, மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு, என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் … Read more

கேரளாவில் சோதனை சர்ச்சை விவகாரத்தில் மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு

கேரளா; சோதனை சர்ச்சை விவகாரத்தில் கொல்லத்தில் 6 இடங்களில் மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4-ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7-ல் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் கேரளாவில் 6 இடங்களில் மறுதேர்வு நடைபெறவுள்ளது.

பெண் ஓட்டுநர்களுக்கு ரயில் இன்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்த பரிசீலனை

புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சகத்தில் ஆண் இன்ஜின் டிரைவர்களைப் போலவே, ஏராளமான பெண் இன்ஜின் டிரைவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பணி நேரத்தின்போது போதுமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பெண் இன்ஜின் டிரைவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவில் கழிப்பறைகளை … Read more

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். தலைமை நீதிபதியாக பதவியேற்ற லலித்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிராமாணம் செய்து வைத்தார். 2014-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித், வழக்கறிஞராக இருந்து தலைமை நீதிபதியாகும் 2-வது நபர் ஆவார்.

'நான் ஒரு பழங்குடி; எனக்கு பயம் கிடையாது ' -ஜார்க்கண்ட் முதல்வர் சூளுரை

‘என் உடலில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன்’ என சூளுரைத்துள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக … Read more

காங்கிஸுக்கு வெறும் கைப்பாவை தலைவர் தேவையில்லை: மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான் கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கைப்பாவை தலைவர் தேவையில்லை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான தலைவரே தேவை என்று கூறியுள்ளார் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் நேற்று அறிவித்தார். இதனை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த பிருதிவிராஜ் சவான், “காங்கிரஸ் காரிய கமிட்டியில் வெறும் துதிபாடுவோர்கள் மட்டுமே இருந்தால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவருக்கு அவர்களால் சரியான அறிவுரையை வழங்கமுடியாது. வெத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைவிட உள்ளார்ந்து சிந்திக்க வேண்டும். … Read more

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி

டெல்லி: உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% வாக்கு பெற்று மீண்டும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5 வது இடத்திலும், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 6-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ரூ.640 கோடி மதிப்பில் கடற்கரை வில்லா.! விலைக்கு வாங்கியிருக்கும் அம்பானி

ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் துபாயில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடற்கரையோர வில்லாவை வாங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பாம் ஜுமேராவில் உள்ள இந்த மாளிகை துபாயின் மிகப்பெரிய குடியிருப்பு சொத்தாகும். அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்காக வாங்கியதாகக் கூறப்படும் இந்த வில்லாவில் 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு பிடித்த சந்தையாக துபாய் உருவாகி வருகிறது. … Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் – பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

புதுடெல்லி: உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் சர்வே என்ற அமைப்பு மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 சதவீத ஓட்டுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஆப்ரடர் 63 சதவீத ஓட்டுக்களுடன் 2-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 54 சதவீத … Read more