மகாராஷ்டிராவில் தொடங்கியது மீண்டும் பெயர் மாற்றும் அரசியல்!

மகாராஷ்டிரா அமைச்சரவை சனிக்கிழமை அன்று மீண்டும் அவுரங்காபாத்தை சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றியது. இது ஏற்கனவே முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தான். ஏனெனில் ஏக்நாத் ஷிண்டே தனது கடைசி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முந்தைய முடிவு ‘சட்ட விரோதம்’ என்று கூறினார். உஸ்மானாபாத் தாராசிவ் என மறுபெயரிடப்பட்டது மற்றும் நேவி மும்பை விமான நிலையத்தின் புதிய பெயர் ‘டிபி பாட்டீல்’ விமான நிலையம் என மாற்றப்பட்டது. ஜூன் 29 அன்று, உத்தவ் தாக்கரே … Read more

திடீர் சர்ச்சை கிளம்பியதால் பிரபல வணிக வளாகத்தில் மத வழிபாட்டுக்கு தடை; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

லக்னோ: லக்னோவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சிலர் மத வழிபாடு செய்ததால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், மால் நிர்வாகத்தினர் மத வழிபாட்டுக்கு தடை விதித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபல வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஊழியர்கள் திறந்தவெளியில் வழிபாடு செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ … Read more

பாஜகவின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிப்பு

புதுடெல்லி: குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜூலை18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிது. இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் … Read more

Vice President Election: குடியரசு துணை தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து உள்ளார். குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்தியில் … Read more

மழை பாதிப்பை பார்க்க சென்ற போது பாஜக எம்பி விரட்டியடிப்பு; கான்வாய் வாகனம் மீது கல்வீச்சு

கரீம்நகர்: தெலங்கானாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்க்க சென்ற பாஜக எம்பி அரவிந்தை, அப்பகுதியினர் விரட்டிய நிலையில், கான்வாய் வாகனம் மீது கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பாஜக எம்பி அரவிந்த் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது பாஜகவினருக்கும், கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும் எம்பியின் கான்வாய் வாகனம் மீது கல் வீசப்பட்டதால், அந்த வாகனம்  சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. … Read more

இனிப்பு தருவது போல வெளியாகும் இலவச அறிவிப்புகள் – விழிப்பாக இருக்க மோடி அறிவுரை!

ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை தருவதாக கூறி வாக்கு கோரும் போக்கு நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பந்தேல்கண்ட் அதிவிரைவுச் சாலையை தொடங்கிவைத்து பிரதமர் பேசினார். இனிப்பு தருவது போல இலவச திட்டங்களை வழங்கும் அறிவிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். மக்கள் நலனுக்கு இலவசங்களை விட ரயில்கள், சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளே அவசியமானவை என்றும் அவர் பேசினார். உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இரட்டை … Read more

பா.ஜ.க. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கர் போட்டி என அறிவிப்பு டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பின்னர் வேட்பாளர் பெயர் அறிவிப்பு மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கரை வேட்பாளராக நிறுத்துகிறது பாரதிய ஜனதா குடியரசுத்துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது Source link

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த 141 தொகுதிகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்; 2024ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமானது பாஜக

புதுடெல்லி: கடந்த பொதுத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 141 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, ஒன்றிய அமைச்சர்கள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது. பிரதமர் மோடியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சி வகுக்கத் தொடங்கியது. இதன் கீழ், கடந்த முறை அதாவது 2019 மக்களவைத் தேர்தலில் தோற்ற மற்றும் … Read more

’ 10 வருடங்களுக்கு முன்பு மகளையும் கொன்றேன்’ – மகனையே கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

பஞ்சாபிலுள்ள ஒரு கிராமத்தில் தனது 4 வயது மகனை கொன்று மூட்டை கட்டி குளத்தில் போட்ட ஒரு கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 10 வருடங்களுக்கு முன்பு தனது 6 வயது மகளையும் தான் கொலை செய்ததாக அந்த பெண் ஒத்துக்கொண்டுள்ள சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பபிதா(45). இவர் திருமணமாகி பஞ்சாபிலுள்ள முல்லன்புர் தகாவிற்கு உட்பட்ட பனோகார் கிராமத்தில் கணவருடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர் ஷாம் லால் அதே பகுதியில் … Read more

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் … Read more