மாடியில் இருந்து தவறி விழுந்த சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றிய மற்றோரு சகோதரன்

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்குட்பட்ட சங்கரம் குளம் என்ற இடத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சகோதரனை கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு சகோதரன் தனது மார்பில் தாங்கி காப்பாற்றிய காட்சிகள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இரு சகோதரர்களும் தங்களது வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது மாடியில் நின்று சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ஷபீக் கால் இடறி கீழே விழுந்தார். இதைக்கண்டதும் உடனடியாக சுதாரித்த சாதிக் தனது சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றினார். இந்த காட்சிகள் … Read more

அமைச்சர் கைது எதிரொலி மம்தா அமைச்சரவை நாளை விரிவாக்கம்: புது முகங்களுக்கு வாய்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் தொழில்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சியில் அதிரடியாக மாற்றங்களை செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள அவர் … Read more

'பென்சில், மேகி விலையை நீங்கள் உயர்த்தி வீட்டீர்கள்’-பிரதமருக்கு 1ம் வகுப்பு சிறுமி கடிதம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயது சிறுமி, விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் ‘கஷ்டம்’ குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் பெயர் கிருத்தி துபே. நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எனது பென்சில் மற்றும் ரப்பர் (அழிப்பான்) விலை உயர்ந்து … Read more

என்டிஆரின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் இளைய மகள் காந்தாமனேனி உமா மகேஸ்வரி இறந்த நிலையில், அவரது ஹைதராபாத் இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான மறைந்த என்டிஆரின் 12 பிள்ளைகளில் இளையவர்தான் உமா மகேஸ்வரி. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர் ஆந்திர மாநில … Read more

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 10 பேர் பலி!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் தீயில் சிக்கி நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ முதலில் மருத்துவமனையின் … Read more

என்.டி.ஆர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். என்.டி.ஆரின் 12 பிள்ளைகளில் இளையவரான உமா மகேஸ்வரி, ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி: மும்பை போலீஸ்

மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் ராவத்தை 8 நாள் விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 4 நாட்கள் விசாரிக்க மும்பை போலீஸ் அனுமதி அளித்துள்ளது. சஞ்சய்  ராவத்தை மீண்டும் ஆக.4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை உத்தரவு விடுத்துள்ளது. நிலமோசடி வழக்கு தொடர்பாக சிவசேனா மூத்த மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பிரதமர் மோடி அவர்களே… அந்த ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு பதில் என்ன?” – மக்களவையில் கனிமொழி ஆவேசம்

புதுடெல்லி: “பொருளாதரச் சரிவிற்கு பிறகும் கறுப்பு பணம் கைப்பற்றப்படுவது ஏன்?” என மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். திங்கள்கிழமை தொடங்கிய விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றினார். இதுகுறித்து மக்களவையின் திமுக குழுத் துணைத் தலைவரும், எம்பியுமான கனிமொழி பேசியது: “தற்போது பேசி அமர்ந்திருக்கக் கூடிய பாஜகவின் நிஷிகாந்த் துபே கறுப்பு பணத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். கோடி கோடியாக கறுப்பு பணம் பாஜக ஆளாத மாநிலங்களில் … Read more

பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: மக்களவை விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பதில்

டெல்லி: பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என நிர்மல சீதாராமன் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மக்களவை விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். உலகிலேயே அதிக வேகத்துடன் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இன்று கூடிய நாடாளுமன்ற கூட்ட தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு … Read more

'காய்கறிகளை பச்சையாக சாப்பிடணுமா?'..விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் காரசார விவாதம்!

மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கம் திங்கட்கிழமையான இன்று ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் இதுவரை நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விலைவாசி உயர்வு மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் திங்கட்கிழமை காலை இரண்டு முறை ஒத்திவைப்பு நடைபெற்றதால் முடங்கிய நிலையில், இடை நீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தால் அவர்களுடைய இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் … Read more