தலித் பெண்ணை எழுத்தாளர் தொட்டிருக்க வாய்ப்பில்லை – மற்றொரு பாலியல் வழக்கிலும் கேரள நீதிபதி கருத்தால் சர்ச்சை

கோழிக்கோடு: கேரளத்தில் பாலியல் வழக்கில் பெண்ணின் உடையை காரணம் காட்டி நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மற்றொரு பாலியல் வழக்கிலும் அந்த நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது தெரியவந்துள்ளது. கேரளத்தை சேர்ந்த 74 வயது மாற்றுத்திறனாளி எழுத்தாளர் சிவிக் சந்திரன். இவர் கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த புத்தக கண்காட்சியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோழிக்கோடு அமர்வு நீதிபதி … Read more

வங்கிகள் தனியார்மயம் ஆபத்துக்கு வழிவகுக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘பொதுத்துறை வங்கிகளை அவசர கதியில் தனியார்மயமாக்குவது ஆபத்துக்கு வழிவகுக்கும்’ என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், ‘பெருமளவு வங்கிகளை அவசர கதியில் தனியார் மயமாக்குவது நல்லதற்கு பதிலாக தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயம், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள படிப்படியான தனியார் மயம் சிறந்த விளைவுகளையே ஏற்படுத்தும்,’ என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘ரிசர்வ் … Read more

குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை – வீரர்களிடம் மனம் திறந்தார் ராஜ்நாத் சிங்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவும் சென்றுள்ளார். அங்கு அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினரை சந்தித்த ராஜ்நாத் சிங் அவர்களிடம் பேசியதாவது: நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். இதற்காக குறுகிய கால சேவையில் பணியாற்ற தேர்வும் எழுதினேன். அந்த நேரத்தில் என் தந்தை இறந்தார். எனது குடும்பத்தில் நிலவிய சில சூழல் காரணமாக என்னால் ராணுவத்தில் சேர … Read more

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: ‘கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்தில் கிராமப்புற வீடுகளில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில், பனாஜியில் நடந்த விழாவில் காணொலி மூலமாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளில் 3 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் … Read more

மைத்துனருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஹார் அமைச்சர் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த புதன்கிழமை தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க லாலு மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியின் … Read more

இரண்டு அல்ல; ஒன்று மட்டும்தான் பாங்காங் ஏரி பகுதியில் சீனா பிரமாண்ட பாலம்: 100 அடி அகலம் கொண்டது செயற்கைக்கோள் மூலம் உறுதி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் சீனா 2 பாலங்கள் கட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில், அங்கு அது ஒரு பாலத்தை மட்டுமே கட்டுவதாகவும், அது மிகவும் பெரியது என்றும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியை 2 ஆண்டுகளுக்கு முன் சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது, இந்திய ராணுவ வீரர்கள் அதை தீரத்துடன் முறியடித்தனர். இருப்பினும், இந்த ஏரிக்கு அருகில் உள்ள அசல் கட்டுப்பாடு எல்லை … Read more

மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க குறி கேட்ட போலீஸார் – வீடியோ வைரலானதால் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க துறவியிடம் போலீஸார் குறி கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதால், எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் ம.பி.யின் சத்ரபூரில் உள்ளது பமிதா காவல் நிலையம். கடந்த ஜுலை 28-ம் தேதி ஒண்டா பூர்வா கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் 12 வயது சிறுமியின் உடல் கிடந்தது. புகாரின் அடிப்படையில் ஐபிசி 302 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி கொலையில் எந்த … Read more

இரட்டை கட்டிடம் தகர்ப்பு 5 ஆயிரம் மக்கள் வெளியேற உத்தரவு

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடத்தை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி இதை வெடி வைத்து தகர்ப்பதற்கான ஏற்படுகள் மும்முரமாக நடக்கிறது. இதற்காக 3,500 கிலோ வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்டிடம் இடிக்கப்படும் நாளன்று காலை 7.30க்குள், அதை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பேரை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள 2500 … Read more

ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் தமிழகம், ஆந்திரா உட்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் அந்த மாநிலங்கள் மின் சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்வற்கும், மத்திய மின் சந்தையை நிறுவியுள்ளன. இந்த சந்தையை கண்காணித்து நிர்வகிப்பதற்காக, மத்திய மின்துறை அமைச்சகம் ‘பவர் சிஸ்டம் … Read more

போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு 24 ஆண்டுக்கு பின் மாஜி எம்எல்ஏ கைது

மோதிஹரி: பீகார் மாநிலம், கோவிந்த்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரஞ்சன் திவாரி. இவர், 1998ம் ஆண்டு உபி மாநிலம்  கோரக்பூரில் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். கடந்த 24 ஆண்டுகளாக நாடு முழுவதும் போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவித்தனர். இந்நிலையில், பீகார் – நேபாள எல்லையில் ரக்சோல் என்ற இடத்தில் திவாரியை  உபி., பீகார் போலீசார் நேற்று கைது செய்தனர். இது … Read more