இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர். தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி … Read more

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவின் ஜாமீன் நீட்டிப்பு

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவின் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பட்டியலின சமூகத்தினருக்கும், மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மோதலை தூண்டிவிட்டதாக இடதுசாரி ஆர்வலர்களை கைது செய்தனர். இதில் கவிஞர் வரவர ராவும் ஒருவர். இதனிடையே, தனது உடல்நிலையை காரணம் காட்டி … Read more

கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் அவலம்: உயிரைப் பணயம் வைக்கும் பள்ளி செல்லும் ஒடிசா கிராம மாணவர்கள்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பள்ளி மாணவர்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் பத்ராபூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால், பள்ளிச் செல்லும் மாணவர்கள் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி, அதன் துணையுடன் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அதிகமான மழை மற்றும் ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் … Read more

சிறுவனை உயிரோடு விழுங்கிய முதலை… குளிக்க சென்றபோது நிகழ்ந்த அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலம், ஷியோபோர் எனும் இடத்தில் ஓடும் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான் 10 வயது சிறுவன். திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது ஆற்றில் இருந்த முதலை அந்த சிறுவனை உயிரோடு அப்படியே விழுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், முதலையிடமிருந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சிறுவனை முதலை மொத்தமாய் விழுங்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் முதலையை கயிறு வீசி பிடித்து கரைக்கு இழுத்து … Read more

வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்த பெண் யுடியூபர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் யுடியூபர் அமலா அனு வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் புனலூர் வனப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததுமன்றி ஹெலிகேம் மூலம் வனப்பகுதி மற்றும் வன விலங்குகளை யுடியூபர் அமலா அனு வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்மீது அம்பானூர் வனத்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   Source link

இலங்கைக்கு 44,000 டன் யூரியா அனுப்புகிறது இந்தியா

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஒன்றிய அரசு 44,000 டன் யூரியா அனுப்ப உள்ளது. ஏற்கெனவே எரிபொருள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்ட நிலையில் யூரியா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.  

அசோகச் சின்னத்தில் செய்யப்பட்ட மாற்றம்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! முழு பின்னணி இதோ!

புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட தேசிய சின்னமான அசோகச் சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். 6.5 மீட்டர் உயரமுள்ள இந்த சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 9,500 கிலோ எடை கொண்டது. இது கட்டிடத்தின் மைய முகப்பின் உச்சியில் வார்க்கப்பட்டுள்ளது. மேலும் அதை தாங்கும் வகையில் சுமார் 6,500 கிலோ எடையுள்ள எஃகு தூண் அமைப்பு கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அசோகச் சின்னம் எதிர்க்கட்சிகளிடையே பல எதிர்வினைகளை … Read more

“முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை”… விளக்கம் கோரி பொறுப்பு அதிகாரிக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பருகுவதற்காக வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை என, அதற்கான பொறுப்பு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற சிவராஜ் சிங் சவுஹானிற்கு கஜுராஹோ விமான நிலையத்தில் தேநீர் மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அது குறித்த பணி ராகேஷ் என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்பாடு செய்த தேநீர் குளிர்ச்சியாகவும் தரம் குறைந்ததாகவும் இருந்துள்ளது. இதனையடுத்து, ராகேஷிடம் விளக்கம் கோரி … Read more

தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜார்க்கண்ட்: தற்போது குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குறுக்குவழி அரசியலில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினர்.