திருப்பதியில் பிரம்மோற்சவ விழா – பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள விழாவின்போது மாட வீதிகளில் காலையும், மாலையும் வாகன சேவை நடைபெறும். குறிப்பாக 27-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையும் நடைபெறும். 5-ம் நாளான அக்டோபர் 1-ம் தேதி 3-வது புரட்டாசி சனிக்கிழமை இரவு கருட சேவை நடைபெறும். … Read more

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிக்கப்பட்டது. ஆந்திராவில் மதுபாட்டில் விலை அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து முறைகேடாக மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறது.  Source link

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று சோனியா காந்தி 3-வது முறையாக ஆஜராக உள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளி – 19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். விதிகளை மீறியதாக 19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவையில் நேற்று முன்தினம் சபாநாயகரின் பேச்சைகேட்காமல், தொடர்ந்து பதாகைகளுடன் பேராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி, நேற்று அமளியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 19 பேர், … Read more

சோனியா காந்தி இன்று மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட அதே போன்ற கேள்விகள் சோனியாவிடமும் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந் நிலையில், இன்று அவர் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.   Source link

நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை :மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி : நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை என்று ஒன்றிய ஊரக வளச்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். அதில் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களை உருவாக்கி அனைத்து சாதியினரும் சேர்ந்து வாழும் வசதிகளை மாநில அரசு வழங்கி உள்ளது. இந்த நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவ்வாறான சமத்துவ … Read more

நேஷனல் ஹெரால்டு | சோனியா காந்தியிடம் 2-வது முறையாக விசாரணை – போராட்டம் நடத்திய ராகுல் உட்பட 50 எம்.பி.க்கள் கைது

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 50 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா … Read more

மேற்குவங்கத்தின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பந்தோபத்யாயா காலமானார்

மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுஷோவன் பந்தோபத்யாயா காலமானார். நிறைவாழ்வு வாழ்ந்து பலருக்கு தன்னலமற்ற அரிய மருத்துவ சேவை செய்து 84 வயதில் காலமான ஒரு ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். பிரதமர் மோடி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மருத்துவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.பத்மா விருது வழங்கிய போது அவரை சந்தித்துப் பேசியதை மோடி நினைவுகூர்ந்துள்ளார். Source link

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை 78 முறை உயர்வு… 7 நாட்கள் மட்டுமே விலை குறைப்பு : ஒன்றிய அரசு தகவலால் அதிர்ச்சி!!

டெல்லி: இந்தியாவில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை எம்பியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளார்.அவர் அளித்த பதிலில்,’டெல்லியில் 2021-22ம் ஆண்டில் 20.07.2022ம் தேதி … Read more

செஸ் ஒலிம்பியாட் 2022: வெளியானது பிரதமர் மோடியின் 2 நாள் சென்னை பயணத்திட்டம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் பயண விவரத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் நநேரத்திர நாளை (ஜூலை 28) பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் அங்குள்ள ஓய்வறையில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் அவர், 5.25 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 5.45 மணிக்கு அடையாரில் உள்ள … Read more