தெலங்கானாவில் டிஆர்எஸ் வாக்கு சரியும் 2வது இடத்துக்கு முன்னேறும் பாஜ

ஐதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 46.9 சதவீத வாக்குகளுடன் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 88 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 28.4% வாக்குகளுடன் காங்கிரஸ் 2-வது இடத்தை பிடித்தது. பாஜ வெறும் 7.1 % வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்புகளில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, பாஜ 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் டிஆர்எஸ் 38.88% … Read more

நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று ஆரம்பம்: 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கு கிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, அக்னிபாதை திட்டம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் கன்டோன்மென்ட் மசோதா, மாநிலங்களின் கூட்டுறவு சொசைட்டிகள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, தொழில்நிறுவன … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதியன்று இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. இந்திய … Read more

விஜய் சேதுபதி படம் ஓடிடியில் ரிலீஸ்

திருவனந்தபுரம்: தமிழ், ெதலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் விஜய் சேதுபதி, தற்போது மலையாளத்தில் இந்து இயக்கத்தில் நடித்த படம், ‘19 (1) (a)’. முக்கிய வேடத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளனர். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்து இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தேதி முடிவாகவில்லை. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்த ‘க/பெ ரணசிங்கம்’ … Read more

இன்று வீடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்த காரணமாக கடந்த 14-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறியால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அத்துடன், முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். தொற்றில் … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி … Read more

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது: பாஜக சார்பில் முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதற்காக நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யஷ்வந்த் சின்ஹாபாஜக தலைமையிலான … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: யார் இந்த மார்கரெட் ஆல்வா?

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

புதுடெல்லி: இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் 32 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மசோதாக்கள் மீதும் விவாதம் நடத்த விரும்புவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி.க்கள் மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் … Read more

பள்ளி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். … Read more