president election: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ!

நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்யிடுகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களும், அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலோ, தலைமைச் செயலக வளாகத்திலோ மாநில எம்எல்ஏக்களும் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம், பாஜக வேட்பாளரான திரெளபதி முர்மு … Read more

புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக மாநிலங்களவை எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்பிக்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை பொருத்தமட்டில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால … Read more

தமிழக வங்கிகளில் இனி தமிழிலேயே பரிவர்த்தனை – நிர்மலா சீதாராமன் உறுதி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் உள்ள வங்கி கிளைகளில் தமிழிலே பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். “தமிழ் மொழி மூலம் வங்கிகளிலே பரிவர்த்தனை செய்ய விரும்புவர்களுக்கு வசதியாக ஏற்பாடு செய்யப்படும். மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: அஸ்ஸாம், ஒடிசா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்தே புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் … Read more

Monkeypox: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை – பாதிப்பு 2 ஆக உயர்வு!

கேரள மாநிலத்தில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை, மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை நோய், குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. உடலில் கொப்பளங்கள் போல் பரவும் இந்த நோய், தற்போது உலகை பயமுறுத்தி வருகிறது. குரங்கம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு … Read more

அதிநவீன டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்கள்: டெல்லி அரசு திட்டம்

டெல்லி: டெல்லியில் சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடையவுள்ள நிலையில் பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்க்கு வரும், அதன் பயண நேரம், சேறும் இடம் உட்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசர காலப் பொத்தான், சிசிடிவி கேமரா உட்பட பாதுகாப்பு அம்சங்கள் … Read more

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவிவந்த குரங்கு அம்மை சமீப காலமாக உலகம் முழுவதுமே பரவத்தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரசு அமீரகத்திலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகள் புனேவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானதாக … Read more

கேரளாவில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு..!!

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. துபாயில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் … Read more

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி மனு -ஜூலை 21ல் உச்சநீதிமன்றம் விசாரணை

வாரணாசியின் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஜூலை 21-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர் விஷ்ணு சங்கரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில மனு தாக்கல் செய்து இருந்த மனுவில், ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு வழக்கமான பூஜை உள்ளிட்டவற்றை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிவலிங்கத்தை கார்பன் முறையில் அதன் பழமையை கண்டறியும் முறைக்கு உட்படுத்த இந்திய அகழாய்வு துறைக்கு உத்தரவிடக் கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்பு – கூடுதல் தகவல்கள்!

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஹர்பஜன் சிங், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திங்கள்கிழமை அன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக ஏறக்குறைய 25 பேருடன் பதவியேற்றுக் கொண்டனர். ராவ் மீனா, விஜய் சாய் ரெட்டி, கீரு மஹ்தோ, ஷம்பலா சரண் படேல், ரஞ்சீத் ரஞ்சன், மகாராஷ்டிரா மாஜி, ஆதித்ய பிரசாத், பிரஃபுல் படேல், இம்ரான் பிரதாப்கர்ஹி, சஞ்சய் ராவத், சஸ்மித் பத்ரா, … Read more