இல.கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதனால் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் வேட்டாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர், அங்கு எம்எல்ஏ.,வாகவும், மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் … Read more

குப்பை வண்டியில் மோடி, யோகி படம்: மாநகராட்சி ஊழியர் டிஸ்மிஸ்

மதுரா: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை வண்டியை தள்ளிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அந்த வீடியோவை எடுத்தவர்கள், அந்த தொழிலாளியை நிறுத்துமாறு கூறுகின்றனர். பின்னர் குப்பை வண்டியில் இருந்து பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் … Read more

உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும் ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமல்

புதுடெல்லி: பாக்கெட் பொருட்கள், தங்கும் விடுதி, மருத்துவமனை அறை ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28, 29 ஆகிய 2 தேதிகளில் நடந்தது. இதில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவானது. அதன்படி, புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த … Read more

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.!

புதுடெல்லி: பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முன்னதாக இன்று காலை அவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 18) தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், … Read more

திரவுபதி முர்மு-யஷ்வந்த் சின்ஹா இடையே போட்டி; ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது.! 4,800 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்

புதுடெல்லி: நாளை நாட்டின் 15வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், 4,800 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் திரவுபதி முர்மு – யஷ்வந்த் சின்ஹா இடையே போட்டி நிலவுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியும் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் நாளையும் (ஜூலை 18), துணை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதியும் நடைபெறுகிறது. … Read more

200 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – மத்திய சுகாதார அமைச்சகம் சொல்வது என்ன?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 2021 அன்று தடுப்பூசிகள் போட துவங்கி 18 மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 200 கோடி அல்லது 2 பில்லியனைத் தாண்டியது. நாடு முழுவதும் சனிக்கிழமை இரவு வரை 199.97 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. இதில் 5.48 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.100 கோடி டோஸ் என்ற முந்தைய மைல்கல்லை எட்ட 277 நாட்கள் ஆனது. கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, … Read more

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு! யார் இவர்?

உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முன்மொழிந்த மார்கரெட் ஆல்வா எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தற்போதைய குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக ஜெகதீப் தங்கர் நேற்று அறிவிக்கப்பட்டார். … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா அறிவிப்பு

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். இத்தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார். இவரது சொந்த ஊர் கர்நாடகா மாநிலம் மங்களூரு. கோவா, ராஜஸ்தான், குஜராத், உத்தர்காண்ட் மாநில ஆளுநராக இருந்திருக்கிறார். நாடாளுமன்ற விவகாரத் … Read more

ஸ்விக்கி – சோமேட்டோ நிறுவனங்களை இணைத்த டெலிவரி மேன்கள் – நெகிழ்ச்சி வீடியோ

கடும் வெயிலில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சோமேட்டோ டெலிவரி மேனுக்கு, ஸ்விக்கி ஊழியர் உதவி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகியவை ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் போட்டி நிறுவனங்கள் ஆகும். இச்சூழலில், ‘நிறுவனங்கள் தான் போட்டியாளர்கள்; பணியாளர்களாகிய நாங்கள் எப்போதும் நண்பர்களே’ என்பதை உரைக்கும் விதமாக இந்த இரு நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் இருவர் செய்த காரியம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ … Read more

காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடல்

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ட்ரோன் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த அத்துமீறல்களை தடுக்கும் விதமாக எல்லை காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள மங்கு சக் என்ற கிராமத்தில் நேற்றிரவு ட்ரோன் ஒன்று … Read more