கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது முஸ்லிம்கள்தான் – யோகிக்கு ஒவைசி பதிலடி
“கருத்தடை சாதனங்களை முஸ்லிம்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்” என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒவைசி இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் உலக மக்கள்தொகை தொடர்பான அனுமான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 2023-ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை … Read more