சிவசேனாவின் இரு அணி எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: சிவசேனா இரு அணி எம்எல்ஏக்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பிரதான கட்சியான சிவசேனாவில் 55 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. கடந்த ஆட்சியில் ஷிண்டே உட்பட 16 சிவசேனா எம்எல்ஏக் களுக்கு சட்டப்பேரவையின் அப்போதைய … Read more

7 வயது சிறுவனை விழுங்கியதாக கூறி முதலையை கட்டிப்போட்ட மக்கள்.. வயிற்றை கிழித்து மீட்கும் வரை விடமாட்டோம் என அடம்..!

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் சாம்பல் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை விழுங்கியதாகக் கூறி ராட்சத முதலையைப் பிடித்து கிராம மக்கள் கட்டிப் போட்டனர். முதலை சிறுவனை விழுங்காது என்று போலீசார் தரப்பில் கூறிய போதும், அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள், முதலையைக் கரையில் இழுத்துப் போட்டு அதன் வாயில் பெரிய குச்சியை வைத்தனர். வயிற்றை கிழித்து சிறுவனை மீட்கும் வரை முதலையை விடமாட்டோம் என்ற அடம்பிடித்த மக்களிடம் போலீசார் சமசர பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் … Read more

குடியரசுத்தலைவர் தேர்தல்: திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவு

டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவளிக்க முடிவு செய்தது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளித்த நிலையில் முர்முவுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது.  

உதய்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த சிறுமிக்கு கொலை மிரட்டல் – காஷ்மீர் இளைஞர் கைது

உதய்பூரில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த மும்பை சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லாலை கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டு பேர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அதனை வீடியோவும் எடுத்து அவர்கள் வெளியிட்டனர். முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து … Read more

வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. … Read more

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களிடையே மோதல்.. எந்த பேருந்து முதலில் செல்வது என ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது..!

கேரள மாநிலம் கண்ணூரில் இரு தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. மட்டனூர் பகுதிக்கு இரு தனியார் பேருந்துகளும் ஒரே நேரத்தில் எந்த பேருந்து முதலில் செல்வது என்பது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அங்கிருந்த பயணி வீடியோ எடுத்து வெளியிட்டார். இதனையடுத்து இரு தனியார் பேருந்துகளையும் கைப்பற்றிய போலீசார், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் விசாரித்து வருகின்றனர். Source … Read more

குஜராத்தில் கனமழையால் ஆற்றில் சிக்கிய 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: 7 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பலாயிரம் பேர் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். குஜராத்தின் தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இதனால் டாங் மாவட்டத்தில் பலாயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.  டாப்பி மாவட்டத்தில் உள்ள டோஸ்வாடா அணை நிரம்பி வழிந்து வருகிறது. தொடர் மழை பெய்து வருவதால் வால்சாத் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் … Read more

கேரளா: 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட கும்பவுருட்டி அருவி

பாதுகாப்பில்லாத காரணத்தால் 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கும்பவுருட்டி அருவி சீரமைப்புக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது. கேரள மாநிலம் அச்சன் கோவில் கும்பவுருட்டி அருவியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கீழே உள்ள குழியில் விழுந்து இரண்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்குச் செல்ல தடைவிதித்து பாதை மூடப்பட்டது. இந்நிலையில், ரூ.25 லட்சம் செலவில் பெரிய பள்ளங்கள் முழுமையாக கான்கிரீட்டால் மூடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஞ்சல் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராதா … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் பிரம்மாண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றம் கட்ட கடந்த 2020 டிச. 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், 51 … Read more

குஜராத்தில் வெள்ளத்தால் பல நூறு கிராமங்கள் நீரில் மூழ்கின.. கடந்த ஒன்றரை மாதங்களில் மின்னல் தாக்கி 63 பேர் உயிரிழப்பு..!

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுடன் தொலைபேசியில் பேசிய அமித் ஷா வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.முன்னதாக பிரதமர் மோடியும் குஜராத் முதலமைச்சரிடம் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். தேசியப் பேரிடர் மீட்ப்படை வீரர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.breathe 8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பூர்ணா … Read more