'மனதின் குரல்' நிகழ்ச்சியில் தஞ்சை மகளிர் சுயஉதவி குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி

புதுடெல்லி: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை அனுப்பிவைத்த தஞ்சை தாரகைகள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. சில தினங்களுக்கு முன்பு நம்நாடு புதிய சாதனை படைத்திருக்கிறது. … Read more

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை இன்று காணொலி வாயிலாக வழங்குகிறார் – பிரதமர்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை  பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக வழங்குகிறார்.  கொரோனாவால் பெற்றோர்கள் அல்லது பெற்றோர்களில் ஒருவர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்காக பி.எம். கேர்ஸ் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் தங்குமிட வசதி அளித்தல், கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை … Read more

கேரளாவில் பரவும் புதிய வகை காய்ச்சல்- கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. மேற்கு நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட மருத்துவ சிறப்புக் குழு, உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதிக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.  திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

2 நாட்கள் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: ‘யாரும் வர வேண்டாம்’: அதிகாரி வேண்டுகோள்

திருமலை: ‘வரலாற்றில் இல்லாத அளவில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், யாரும் வர வேண்டாம்,’ என்று தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், நேற்று முன்தினம் மாலை வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடம் … Read more

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்

சென்னை: தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 அல்லது அதற்கடுத்த நாட்களில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 3 நாட்கள் முன்னதாக நேற்றே தொடங்கியதாக இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தென் தமிழகத்தின் சில பகுதிகளில் பரவியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவக்காற்றால் … Read more

இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாக உருவெடுத்த அமெரிக்கா..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியாகச் சீனாவை முந்தி அமெரிக்கா உருவெடுத்துள்ளது. 2020 – 2021 நிதியாண்டில் எட்டாயிரத்து 51 கோடி டாலராக இருந்த இந்தியா – அமெரிக்கா இடையான வணிகம், கடந்த நிதியாண்டில் 11 ஆயிரத்து 942 கோடி டாலராக அதிகரித்துள்ளது. சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2125 கோடி டாலராகவும், சீனாவில் இaருந்து இந்தியாவின் இறக்குமதி ஒன்பதாயிரத்து 416 டாலராகவும் உள்ளது. Source link

லுக்அவுட் நோட்டீஸ் அறிவித்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மும்பை: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக் கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும் தொடர்பு இருப்பதால், அவர்மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், அபுதாபியில் … Read more

மேடையில் பாடும்போது மாரடைப்பு பிரபல பாடகர் திடீர் மரணம்

திருவனந்தபுரம்: மேடையில் பாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு பாடகர் எடவா பஷீர் திடீரென்று மரணம் அடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள எடவா பகுதியை சேர்ந்தவர், பஷீர் (78). பழம்பெரும் மேடை பாடகர். ஆரம்பகாலத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், ரஃபி ஆகியோரின் பாடல்களை கேட்டு பயிற்சி பெற்ற அவர், பிறகு பள்ளி மற்றும் கல்லூரியில் பல பரிசுகள் பெற்றுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து, அனைத்து கேரள இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டார். கானமேளா இசைக் … Read more

காவல் நிலையம் கட்ட ஆலமரத்தை வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்ட காவல்துறையினர்.. பாராட்டிய வனத்துறையினர்.!

புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையினர் ஆலமரத்தை வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வைத்ததற்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மூலக்குளம் பகுதியிலுள்ள ரெட்டியார் பாளையத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக, அப்பகுதியில் 15 வருடங்களாக இருந்த ஆலமரத்தை அகற்ற வேண்டிய சூழலில், போலீசார் அந்த ஆலமரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து, கனகன் ஏரி அருகே நட்டு வைத்தனர்.     Source link

உ.பி. மக்களவைத் தேர்தலில் பாஜக 75 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்- கட்சியினருக்கு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

லக்னோ:  உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளதாவது:  உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக கடைசி வெள்ளிக்கிழமை தெருக்கள், சாலைகளில் நமாஸ் நடத்தப்படவில்லை. வழிபாட்டு தலங்கள், மசூதிகளில் அவர்கள் மத நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியாக நடைபெற்றது.  மாநிலத்தில் எந்த மதக் கலவரமும் நடைபெறவில்லை. மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் … Read more