ஆந்திராவில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

ஹைதரபாத் :  ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் உருவகொண்டா அருகே திருமண நிகழ்வில் கலந்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தவர்களின் இன்னோவா கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ … Read more

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்டான #BoycottHyundai: ஹூண்டாய் மோட்டார் இந்தியா விளக்கம்

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது. இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை நல்கியுள்ளது. அந்த விளக்க … Read more

சித்து கனவை காலில் போட்டு மிதித்த காங்கிரஸ்.. சென்னிக்கு ஏன் பச்சைக் கொடி?

முதல்வர் பதவிக்காக ஆவலோடு காத்திருந்தார் நவ்ஜோத் சிங் சித்து . ஆனால் அவரை ஓரம் தள்ளி விட்டு விட்டு தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சென்னியையே முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது சித்து ஆதரவாளர்களை அதிர வைத்துள்ளது. பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் கலக்கி வருகின்றன. இந்த வரிசையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. … Read more

இந்தியாவில் லட்சத்திற்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு.! <!– இந்தியாவில் லட்சத்திற்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பா… –>

இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து 83 ஆயிரத்து 876 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 895  பேர் உயிரிழந்துள்ளதுடன் 1 லட்சத்து 99 ஆயிரத்து 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு வீதம் 7 புள்ளி 25 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 11 லட்சத்து 8 ஆயிரத்து 938 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

புதிய அதிபருக்கான வாக்கெடுப்பை புறக்கணித்த ஈராக் கட்சிகள்

ஈராக் நாட்டின் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், ஷியா முஸ்லிம் மதகுரு மொக்தாதா அல்-சதரின் சத்ரிஸ்ட் இயக்கம் 329 இடங்களில் 73 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக 25 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதனால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், தொகுதிகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருவதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் … Read more

பஞ்சாப் காங். முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் விலகல்: சட்டப்பேரவை தேர்தலில் காங். முதல்வர் வேட்பாளராக சன்னி அறிவிப்பால் அதிருப்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளார். சன்னியின் பெயரையே நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்தபோது, மேடையில் சுனில் ஜாக்கர் இருந்தார். பின்னர் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தங்கள் கட்சியில் டெல்லியில் உட்கார்ந்திருக்கும் சிலர், பஞ்சாபில் சீக்கியர் மட்டுமே முதல்வராக வேண்டும் என கட்சி தலைமைக்கு ஆலோசனை … Read more

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசும்போது, ” அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) … Read more

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் படுகொலை <!– கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறைய… –>

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் பஜார் லைன் பகுதியில் லட்சுமி என்பவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பத்தன்று காலை லட்சுமியின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த போது லட்சுமி உட்பட அவரது மகன்கள் மூன்று பேரும் , உறவுக்காரச் சிறுவன் ஒருவன் என மொத்தம் ஐந்து பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. லட்சுமியின் கணவர் வெளியூர் சென்று … Read more

உருமாறிய அனைத்து கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி: இந்திய விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்

புதுடெல்லி : சீனாவின் உகான் நகரத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறி வருவது அறிவியல் உலகத்தை அதிரவைத்துள்ளது. தற்போது வழக்கில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், அசன்சோல் காஜி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா மாநிலம், புவனேசுவரம் … Read more

மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை

டெல்லி : மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசுகிறார்.அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் அவர் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.