ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாரத் மாலா விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ டிராவலர் வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோத்பூரில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் ஒன்றுக்கு டெம்போ டிராவலரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிவேகமாக வந்த வேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. … Read more