பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்தார். ஓணம் மரபுகளை மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார் எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய கேரள வருகையின் போது, ​​வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்கினை பெறுவதையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதையும் … Read more

ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி ஏற்பாடு செய்த ரத யாத்திரையை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தொடங்கி வைத்தது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. துமகுரு மாவட்டத்தின் திப்தூரில் ஏபிவிபி அமைப்பு ஏற்பாடு செய்த ராணி அபக்கா சவுதா ரத யாத்திரை மற்றும் ஜோதி ஊர்வலம் ஆகியவற்றை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் அதன் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் கட்சி அடிக்கடி … Read more

‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். நேற்று முன் தினம் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 பேர் வாக்களித்தனர், இதில் 752 வாக்குகள் செல்லுபடியானவை. 15 வாக்குகள் செல்லாதவை. இதில் 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. இந்த தேர்தலில் 7 பிஜேடி எம்.பி.க்கள், 4 பிஆர்எஸ் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அணி மாறி வாக்களித்தது நம்பிக்கை மோசடி: விசாரணை நடத்த மணீஷ் திவாரி கோரிக்கை

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலை​வர் தேர்​தலில் எம்​.பி.க்​கள் சிலர் அணி மாறி வாக்​களித்​ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தேசியவாத காங்​கிரஸ் கட்​சி​யின் சுப்​ரியா சுலே கூறுகை​யில், “குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் ரகசிய வாக்​கெடுப்பு என்​றால், அதில் யார் யாருக்கு வாக்​களிக்​கிறார்​கள் என்​பதை எப்​படி அறிய முடி​யும்? எந்த கட்​சி​யின் ஓட்​டுக்​கள் பிரிந்​தது என எனக்கு தெரி​யாது? இதற்கு மகா​ராஷ்டிரா என்ன செய்ய முடி​யும்?” என்றார். சிவ சேனா உத்​தவ் அணி எம்​.பி அர்​விந்த் சாவந்த் கூறுகை​யில், ‘‘செல்​லாத … Read more

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் பதவி வில​கியதை தொடர்ந்​து, அப்​ப​தவிக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார். தேர்​தலில் மொத்​தம் பதி​வான 767 வாக்​கு​களில், சி.பி.​ரா​தாகிருஷ்ணன் 452 வாக்​கு​கள் பெற்​றார். எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் இவரை எதிர்த்​துப் … Read more

கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்​ஜுனின் தந்​தை​யான அல்லு அர்​விந்த் ஹைத​ரா​பாத்​தில் கீதா ஆர்ட்​ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்​களில் திரைப்பட தயாரிப்பு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவற்​றின் அலு​வலக கட்​டிடம் ஜூப்ளி ஹில்ஸ் சாலை எண் 45-ல் அமைந்​துள்​ளது. இந்த கட்​டிடத்​துக்கு 4 அடுக்​கு​கள் மட்​டுமே கட்ட ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி அனு​மதி அளித்​துள்​ளது. ஆனால் கடந்த 2023-ல் அனுமதி பெறாமலேயே 5-வது மாடி கட்​டப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் அல்லு அர்​விந்​துக்கு ஹைத​ரா​பாத் மாநக​ராட்சி திட்ட அதி​காரி நேற்று … Read more

நிலம் உள்வாங்கியதில் காஷ்மீரில் 50 கட்டிடங்கள் சேதம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை வீடுகள் ஆகும். 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலையும் சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலம் உள்வாங்கி வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்’’ என்றார். கலாபன் … Read more

அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதலை மறுக்க முடியும்: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை ஆளுநர் மறுக்க முடியும் என்றும், அரசியலைப்பை பாதுகாக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செயல்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றம் குடியரசு தலைவர் ஆகியோருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் கோரி … Read more

வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது. டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் … Read more

“வர்த்தக தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்” – ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?

புதுடெல்லி: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் … Read more