‘அரசுக்கு ரூ.50 லட்சம் நான் தருகிறேன்… என் மகனை திருப்பித் தருவார்களா?’ – பெங்களூரு துயரக் குரல்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை இந்த நேரம் ஒரு பெருங்கூட்டம் கோலியை காணப் போகிறோம், கொண்டாடப் போகிறோம் என பல நூறுக் கனவுகளுடன் திரண்டிருந்தது. ஆனால், சில நிமிடங்களில் கூட்ட நெரிசல், கூச்சல், குழப்பம் என பதற்றம் நிலவ 11 உயிர்கள் பறிபோயின. அரசு, போலீஸ், ஆர்சிபி என யாரும் எதிர்பார்த்திராத பெருந்துயரம் தான். என்றாலும் அரசு இயந்திரங்கள் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு நகர்ந்து செல்லும், காவல் துறை தன் கடமைகளில் கருத்தாகிவிடும். ஆர்சிபி இனி … Read more

திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு திருமணம் – பிஜேடி முன்னாள் எம்.பி.யை மணந்தார்!

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை மே 3 அன்று ஜெர்மனியின் பெர்லினில் நடந்த எளிமையான விழாவில் திருமணம் செய்து கொண்டார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் எம்.பி.யாக உள்ள மஹுவா மொய்த்ரா, ஒடிசாவின் பூரி தொகுதியின் முன்னாள் எம்.பியான பினாகி மிஸ்ராவை மணந்தார். 50 வயதான மஹுவா மொய்த்ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைகோத்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் … Read more

அரசியல் கட்சி தொடங்குகிறார் சங்கராச்சாரியர் அவிமுக்தேஷ்வரானந்த்: பிஹார் தேர்தலில் போட்டி!

புதுடெல்லி: வட மாநிலங்களில் சங்கராச்சாரியராகக் கருதப்படும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதேபோல் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தராகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம். இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதைத் தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க … Read more

உ.பி.யில் 2 ஆண்டு தண்டனை பெற்ற எதிர்க்கட்சி எம்எல்ஏ பதவி நீக்கம்: ஜாமீன் பெற்றும் பலன் இல்லை!

புதுடெல்லி: வெறுப்புப் பேச்சு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், உத்தரப் பிரதேச எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றவாளியாக இருந்து அரசியலுக்கு வந்த முக்தார் அன்சாரியின் மகன் ஆவார். இவருக்கு ஜாமீன் கிடைத்தும் அதன் பலன் கிடைக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) சார்பில் மாவ் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அப்பாஸ் அன்சாரி. குற்றவாளிகள் பட்டியலில் இருந்த இவர் அரசியல்வாதியாக மாறினார். முன்னாள் எம்எல்ஏவான இவரது தந்தையான … Read more

பேச்சு சுதந்திரத்துக்கு வரம்பு உள்ளது: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

லக்னோ: இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்தித்திற்கு வரம்புகள் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உ.பி.யின் லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் … Read more

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 விமானங்கள் அழிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடுமையான பதிலடியை தந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் அழிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மே மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய பிறகு பாகிஸ்தானின் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ சொத்துகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான … Read more

ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் மோசடி: 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ரயில்வே

புதுடெல்லி: ர​யில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் முழு​வதும் விற்றுத் தீர்​வதன் பின்​னணி​யில் உள்ள மோசடியை ரயில்வே கண்​டு​பிடித்​துள்​ளது. நாடு முழு​வதும் ரயில்​களில் பயணம் செய்​வதற்​கு, ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தின் மூலம் பயணி​கள் டிக்​கெட் முன்​ப​திவு செய்​கின்​றனர். எனினும், ஒவ்​வொரு ரயிலுக்​கும் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் மொத்த டிக்​கெட்​டு​களும் விற்​று​விடு​கின்​றன. இதனால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வந்​தனர். குறிப்​பாக பண்​டிகைகள், விடு​முறை நாட்​களில் பயணம் செய்​வதற்​கான டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் தீர்ந்​து​விடும். இத்​தனைக்​கும் … Read more

குருத்வாரா இடம் தொடர்பான வழக்கு: டெல்லி வக்பு வாரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியிலுளள ஷாதாரா பகுதியில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா அமைந்துள்ளது. ஆனால் குருத்வாரா அமைந்துள்ள இடத்தை டெல்லி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பான வழக்கை டெல்லி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரியம் சார்பில் … Read more

RCB: பெங்களூருவில் நடந்த துயர சம்பவம்! ஆரம்ப காரணமே இது தான்!

RCB: பெங்களூருவில் மைதானத்திற்கு உள்ளே வெற்றி கொண்டாடுங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

குட்கா எச்சில் உமிழ வேகமாக ஓடிய காரில் கதவைத் திறந்ததால் விபத்து – சத்தீஸ்கரில் ஒருவர் உயிரிழப்பு

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் 100 கி.மீ. வேகத்தில் சென்ற சொகுசு காரிலிருந்து எச்சில் உமிழ்வதற்காக ஓட்டுநர் கதவைத் திறந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். திங்கள்கிழமை நடந்த இந்த விபத்தில் கார் பலமுறை சாலையில் உருண்டு மேலும் இரண்டு வாகனங்களில் மோதியுள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, விபத்தில் உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (31). பிலாஸ்பூரின் புறநகரான சக்கர்பாதாவைச் சேர்ந்த துணி வியாபாரி ஆவார். இவர் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் ஒரு விருந்தில் கலந்து … Read more