கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார். இதுகுறித்து மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​தி​யா​ வந்​துள்ள கனடா வெளி​யுறவுத் துறை அமைச்​சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேச்சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது இருதரப்பு கூட்​டாண்​மைக்கு இந்த சந்​திப்பு புதிய உத்​வேகத்தை ஏற்​படுத்​தும் என அவர் தெரிவித்தார். வர்த்​தகம், எரிசக்​தி. தொழில்​நுட்​பம், விவ​சா​யம் மற்​றும் … Read more

பிஎம் கிசான் திட்டத்தில் விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி பற்றி ஆய்வு

புதுடெல்லி: பிஎம் கிசான் திட்​டத்​தில் கணவனும், மனைவி இரு​வரும் பணம் பெற்​றுள்​ள​தாக சர்ச்சை எழுந்​துள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி குடும்​பத்​தில் ஒரு உறுப்​பினர் மட்​டுமே இந்த சலுகையை பெற தகு​தி​யானவர். என்​றாலும் கணவர், மனைவி என இரு​வருமே பயன்​பெற்​றுள்​ளது மத்​திய வேளாண் அமைச்​சகம் நடத்​திய ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிர​தான் மந்​திரி கிசான் சம்​மான் நிதி (பிஎம்​-கி​சான்) திட்​டத்​தின் 31.01 லட்​சம் பயனாளி​கள் குறித்து ஆராயப்​பட்​டது. அதில் 17.87 லட்​சம் பேர் கணவன்​-மனைவி என … Read more

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி: அமித் ஷா கருத்து

ஜெய்ப்​பூர்: புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார். ராஜஸ்​தான் மாநில தலைநகர் ஜெய்ப்​பூரில் உள்ள ஜேஇசிசி மையத்​தில் புதிய குற்​ற​வியல் சட்​டங்​கள் தொடர்​பான கண்​காட்சியை நேற்று தொடங்​கி வைத்​து மத்திய அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு புதிய குற்​ற​வியல் சட்​டங்​களை அமல்​படுத்தி உள்​ளது. இதன்மூலம் நீதித் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது. இதன்​படி வரும் 2027-ம் … Read more

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஊடுருவல் காரணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான், வங்​கதேசத்​தில் இருந்து ஊடுரு​வல் நடை​பெறு​வ​தால், இந்​தி​யா​வில் முஸ்​லிம்​கள் மக்​கள் தொகை அதி​கரித்​துள்​ளது’’ என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​யுள்​ளார். டெல்​லி​யில் ‘தைனிக் ஜாக்​ரன்’ இந்தி செய்​தித் தாள் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு மதத்​தவர்​களின் மக்​கள்​தொகை​யில் ஏற்​றத்​தாழ்வு நில​வு​கிறது. இதற்கு பாகிஸ்​தான், வங்​கதேசம் போன்ற நாடு​களில் இருந்து இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வல் நடப்​பதே காரணம். இதனால் இந்​திய … Read more

99 தேர்தலில் தோற்ற ராகுல்: பாஜக கடும் விமர்சனம்

புதுடெல்லி: வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறும்போது, “அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார்” என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் … Read more

பிஹாரில் 100 இடங்களில் ஒவைசி கட்சி போட்டி

பாட்னா: எ​திர்​வரும் பிஹார் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் சுமார் 100 இடங்​களில் போட்​டி​யிட அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்சி திட்​ட​மிட்​டுள்​ளது. இதுகுறித்து அக்​கட்​சி​யின் பிஹார் மாநிலத் தலை​வர் அக்​தருல் இமான் கூறிய​தாவது: பிஹார் அரசி​யல் பல ஆண்​டு​களாக பாஜக தலை​மையி​லான கூட்​டணி மற்​றும் காங்​கிரஸ்​-ஆர்​ஜேடி கூட்​டணி பற்​றிய​தாகவே உள்​ளது. எனவே நாங்​கள் மூன்​றாவது மாற்று அணி அமைக்க விரும்​பு​கிறோம். எதிர்​வரும் பிஹார் தேர்​தலில் சுமார் 100 இடங்​களில் போட்​டி​யிட திட்​ட​மிட்​டுள்ளோம். இதனால் இரு அணி​களும் எங்​கள் இருப்பை உணர … Read more

முல்லை பெரியாறில் புதிய அணை கோரி மனு: தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் 

புதுடெல்லி: முல்லை பெரி​யாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்​டக்கோரி ‘சேவ் கேரளா பிரி​கேட்’ என்ற தொண்டு நிறு​வனம் சார்​பில் தொடரப்​பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், கே.​வினோத் சந்​திரன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தலைமை நீதிப​தி அமர்விடம் மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்​டு​கள் பழமை​யானது என்​ப​தால், அணை​யின் கீழ்ப்​பகு​தி​யில் வசிக்​கும் சுமார் ஒரு கோடி மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர் … Read more

தீவிரவாதிகளிடமிருந்து பொற்கோயிலை மீட்க ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்தியது தவறு: ப.சிதம்பரம் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: தீ​விர​வா​தி​களிட​மிருந்து பொற்​கோ​யிலை மீட்க ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடத்​தி​யது தவறு என்று முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் தெரி​வித்த கருத்​துக்கு காங்​கிரஸ் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இமாச்சல பிரதேச மாநிலம் கசவுலி​யில் குஷ்வந்த் சிங் இலக்​கிய திரு​விழா நடை​பெற்​றது. இதில், ஹரிந்​தர் பவேஜா எழு​திய ‘தே வில் ஷூட் யு, மேடம்: மை லைப் த்ரூ கான்ப்​ளிக்ட்’ என்ற நூல் பற்​றிய விவாதத்​தில் கலந்​து​கொண்ட முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் பேசி​ய​தாவது: பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸ் நகரில் … Read more

மருத்துவ மாணவி நள்ளிரவில் வெளியில் வந்தது எப்படி? – முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மருத்​துவ மாண​வி, நள்​ளிரவு 12.30 மணிக்கு வெளி​யில் வந்​தது எப்​படி?’’ என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி எழுப்​பிய கேள்வி சர்ச்​சைக்கு உள்​ளாகி உள்​ளது. மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவ கல்​லூரி​யில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி (23) ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது ஆண் நண்​பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்​லூரி விடு​திக்கு … Read more

சூடான டீ குடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

திருப்பதி: ஆந்​தி​ரா​வின் அனந்​த​பூர் மாவட்​டம், யாடிகி கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ராம​சாமி. இவரது 4 வயது மகன் ஹ்ருத்​திக் தண்ணீர் என நினைத்து பிளாஸ்​கில் இருந்த சூடான டீயை வாயில் ஊற்றி ‘மடக்’கென குடித்​துள்​ளான். இதில் அலறி துடித்த சிறுவனை மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதி​காலை ஹ்ருத்​திக் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளான். சூடாக டீயை அருந்​தி​ய​தால் சிறுவன் உயி​ரிழந்​த​தாக மருத்​து​வர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​. Source link