பத்ரிநாத் கோயிலில் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம்

பத்ரிநாத்: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சார்​தாம் என்று அழைக்​கப்​படும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்​பெற்ற தலங்​கள் அமைந்​துள்​ளன. இந்​நிலை​யில் பிரசித்தி பெற்ற பத்​ரி​நாத் கோயிலில் நேற்று தொழில​திபர் முகேஷ் அம்​பானி வழிபட்​டார். அவரை கோயில் நிர்​வாகி​கள் வரவேற்று அழைத்​துச் சென்று பிர​சாதங்​களை வழங்​கினர். பலத்த பாது​காப்​புடன் முகேஷ் அம்​பானி கோயிலுக்கு வந்​திருந்​தார். பின்​னர் அவர் அங்​கிருந்து புறப்​பட்டு சமோலிக்​குச் சென்​றார்​. Source link

வேளாண் துறையில் ரூ.35,440 கோடியில் 2 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில், பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம் (PM Dhan Dhaanya Krishi Yojana) ரூ. 24,000 கோடி மதிப்பிலானது. விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல், நிலையான விவசாய நடைமுறையை அதிகரித்தல், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்தல், நீர்பாசன வசதிகளை மேம்படுத்துத், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 … Read more

மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு

மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகரில் 23 வயதான மருத்துவ மாணவி, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – காவல் துறை விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. ஒடிசாவின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மாணவி, பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், இரவு உணவு உட்கொள்வதற்காக தனது நண்பர் ஒருவருடன் … Read more

‘பறிக்கப்படும் சமூக நீதி…’ – தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்

புதுடெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளுக்குக்கூட சமூக நீதியைப் பறிக்கிறது என தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக இருந்தார். … Read more

பாஜக, நிதிஷ்குமாருக்கு எத்தனை சீட்? NDA-க்கு தீர்ந்தது தலைவலி – பீகார் அப்டேட்

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – நிதிஷ்குமாரின ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வந்தது தொகுதிப் பங்கீடு பிரச்சினை: பிஹார் பாஜக தலைவர் தகவல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது, வேட்பாளர் பட்டியல் வார இறுதியில் வெளியாகும் என பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய திலிப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுக்காக பாஜக டெல்லியில் 3 நாள் தேர்தல் குழு கூட்டத்தை நடத்தியது, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பாஜக ஒரு தேசிய கட்சி. பாஜகவின் மத்திய தலைமை தேர்தல் குழு, மத்திய நாடாளுமன்ற குழு மூலம் வேட்பாளர்களைத் … Read more

‘அரசமைப்பை காக்க ராகுல் காந்தி போராடுகிறார்’ – அமைதிக்கான நோபல் பரிசு குறித்து காங். கருத்து

புதுடெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்​கட்​சித் தலை​வர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திரா ராஜ்புத். “அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் … Read more

ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத விவகாரம் – வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆறு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே முதல்முறையாக உயர்மட்ட அளவில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, … Read more

அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கம்: 80 லட்சம் பேர் தொடரும் சமாஜ்வாதியின் முக்கிய ஊடகம்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம். முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாதி கட்சியினர் … Read more